India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவராக குழித்துறை பகுதியை சேர்ந்த ஜெரோம் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை ஒப்புதலின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள அவரை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பிர் ராஜேஷ்குமார் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
காரைக்கால் பகுதியில் கடந்த 2 நாட்களாக இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி துணை தலைவராக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இந்து சமுதாய போராளி ஜெயராம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பணி சிறக்க குமரி மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நேற்று குமரி மாவட்ட போலீசாரின் குறை கேட்டறியும் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. அப்போது மாவட்ட எஸ்.பி.சுந்தரவதனம் பேசும் போது, “ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விழிப்புடன் செயல் பட வேண்டும். கைதிகளை அழைத்து செல்லும்போதும், முக்கிய பிரமுகர்களின் வழிக்காவல் பணியில் ஈடுபடும் போதும் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 20ஆம் தேதி பிரதமர் துவங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. அதன்படி ரெயில் ஓடுவதற்கு 8 மணி நேரம் 50 நிமிட பயண நேரம் எடுத்துக் கொண்டது. குறுகிய நேரத்தில் ரெயில் வெற்றிகரமாக ஓடிய நிலையில், இன்னும் வந்தே பாரத் ரெயில் சேவை துவங்காததால் ரயில் பயணிகளை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதையொட்டி ஜூலை 9ஆம் தேதி நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளியில் 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெறுகிறது. மார்ஷல் நேசமணி, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய தலைப்பில் பேச்சுபோட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் கலிங்கராஜபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் வேதியியல் முதுகலை பட்டதாரி தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வி தகுதி உடையவர்கள் ஜூலை 5க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தொன்மை மிக்க பாரம்பரிய தற்காப்பு கலையான களரி கலையை மீட்டெடுக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் களரி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டபேரவை கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2327 பணிக் காலியிடங்களுக்கான TNPSC Group II, II A தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 19. இத்தேர்விற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வைத்து நடக்கிறது. வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 5ம்தேதிக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும். 100 மாணவர்களுக்கு மட்டும் அனுமதி என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க லேசர் ஒலி, ஒளி காட்சி கூடப்பணி ரூ.12 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒரே நேரத்தில் 200 பேர் இந்த காட்சி கூடத்தில் அமர்ந்து ஒலி ஒளி காட்சிகளை காணலாம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.