India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்று வருகிறது. வரும் 17.10.2025 (வெள்ளி) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார். இதில் 10 நிறுவனங்கள் பங்கேற்று 800 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. SHARE

தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு: இன்று (அக். 16, வியாழக்கிழமை), அக்.18ம் தேதி இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் எண்.06133 மறுநாள் மதியம் 1.25 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். மறுமார்க்கமாக கன்னியாகுமரி – செங்கல்பட்டு சிறப்பு ரயில் (எண்.06134) 17ம் தேதி மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.

ஆரல்வாய்மொழி அருகே நேற்று சிவகாசியில் இருந்து பட்டாசு மற்றும் பிற பொருட்கள் கொண்டு வந்த லாரியும், ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியும் ஆரல்வாய்மொழி அரசு எடை மேடையின் அருகே பயங்கர விபத்து. இதில் பட்டாசு மற்றும் பிற பொருட்கள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு. லாரியில் இருந்த பட்டாசுகள் வெடிக்காததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

கருங்கல் பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் கடந்த மாதம் 21ம் தேதி வீட்டின் பூட்டு உடைத்து 18 சவரன் நகை திருட்டு போனது. இது தொடர்பான வழக்கில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்து வரபட்ட நபர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தப்பி ஓடிய விசாரணை கைதியை தேடி வருகின்றனர்.

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்<

குமரி ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கன்சல்டன்ட் ஆயுர்வேதா 2, யுனானி 1, யோகா மற்றும் நேச்சுரபதி 2 , மெடிக்கல் ஆபிசர் சித்தா 1, ஓமியோபதி 1 என்று 2 பணியிடங்கள் என மொத்தம் 18 பணியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 28ம்தேதிக்குள் சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE

கன்னியாகுமரி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் அழகு மீனா திடீர் ஆய்வு மேற்கொண்டார் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு நியாய விலை கடைகளுக்குச் சென்ற அவர் அங்கு உணவுப் பொருட்களை இருப்பு குறித்து ஆய்வு செய்தார் பின்னர் சரியான எடையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை அவர் ஆய்வு செய்தார்.

குமரி, இரணியல் – ஆளூருக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று (அக்.13) ஒரு முதியவர் ரெயிலில் அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, இறந்தவர் ஆலுவிளையை சேர்ந்த அல்லிராஜ் (வயது 90) என்பதும், தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது அவர் மீது ரெயில் மோதியதும் தெரியவந்தது.

சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழுக்கம்பாறை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு சிறுவனை பிடித்து விசாரித்தபோது அவரது வயது 17 என்பதும் பிளஸ்-1மாணவன் என்பதும் தெரியவந்தது. அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதித்த இளம் சிறாரின் தாய் மீது வழக்குப்பதிவு.
Sorry, no posts matched your criteria.