India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டத்தில் 2 ஏக்கர் பரப்பில் 3 ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக வரும் 22ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தொழில் முனைவோர் மற்றும் ஜவுளி தொழில் செய்வோர் வலயம் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

குமரி ஆவினில் தீபாவளியையொட்டி நெல்லை நெய் அல்வா பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. 15 டன் நெய், மைசூர் பாகு, 5 டன் பால்கோவா தயாரிக்கப்பட உள்ளது. நெய் அல்வா 3 டன் தயாரிக்கப்படும். மிக்சர், மில்க்சுவீட் விற்பனை செய்யப்படும். தீபாவளியையொட்டி ரூ.2.50 கோடிக்கு ஆவின் இனிப்பு பொருட்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குமரி ஆவின் பொது மேலாளர் அருணகிரி நாதன் கூறியுள்ளார்.

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,296 இடங்களில் பாம்பு தொல்லை ஏற்பட்டுள்ளது. ஆறு, குளம் போன்றவற்றில் 41 பேர் இறந்துள்ளனர். 71 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புயல், மழை, வெள்ள காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ரப்பர் படகுகள், பரிசல்கள், லைப் ஜாக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் 167 தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு வருவதாக தீயணைப்பு அதிகாரி சத்யகுமார் நேற்று(அக்.,17) தெரிவித்துள்ளார்.

குமரி நாடாளுமன்றஉறுப்பினர் விஜய் வசந்த் இன்று(அக்.,18) மாலை 3:30 மணிக்கு கருங்கல் தபால் நிலையத்திலிருந்து புறப்பட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். நெடிய விளாகம், செல்லங்கோணம், வட்டவிளை, சரல்கோட்டை, கஞ்சி குழி, முருங்க விளை, பள்ளியாடி, இரவிபுதூர்கடை, வெள்ளிக்கோடு, கல்லுவிளை, காடு வெட்டி வழியாக சென்று அழகிய மண்டபத்தில் நிறைவு செய்கிறார்.

வேம்பத்தூர் காலனியை சேர்ந்தவர் எட்வின்ராஜ். இவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கனகசபாபதி என்பவர் ரூ.6 லட்சம் வாங்கி கொண்டு வேலை வாங்கி கொடுக்காததால் பணத்தை கேட்ட போது இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார். அந்த காசோலையில் வங்கியில் பணம் இல்லாததால் பணத்தை எட்வின்ராஜ் திருப்பி கேட்டபோது அவரையும் ஜெகன் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோட்டாறு போலீசார் நேற்று வழக்கு செய்துள்ளனர்.

குமரி சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சார்பில் புரட்டாசி பௌர்ணமியையொட்டி குமரி முக்கடல் சங்கமம் சமுத்திரதீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி இன்று(அக்.,17) மாலை நடந்தது. இதையொட்டி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கயிலை வாத்தியம் மற்றும் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைக்கு ஊர்வலமாக சென்ற நிகழ்ச்சி நடந்தது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் இணைந்து ரயிலில் பட்டாசு வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா, ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா, கஞ்சா கடத்தப்படுகிறதா என்பது குறித்து இன்று சோதனை நடத்தினர்கள. யாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட பல ரயில்களில் இந்த சோதனை நடைபெற்றது.

குமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் உரிமைகள் துறை சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்து கொண்டு ஆதரவற்ற மற்றும் கைம்பெண்கள் தொழில் தொடங்குவதற்கான மானியம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் திருவனந்தபுரம் சென்றுவிட்டு இன்று(அக்.,17) பத்மநாபபுரம் திரும்பி வந்தன. அப்போது, பத்மநாபபுரம் நகர எல்லையில் சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நிர்வகித்து வரும் விவேகானந்தர் கேந்திர நிறுவனம், 150 ஏக்கர் நிலப் பரப்பளவில் கடந்த 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. இந்நிலையில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் தினசரி அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று(அக்.,17) முதல் தொடங்கப்பட்டுள்ளது. 12.30 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.