India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் உணவுப் பொருட்கள் பரிசோதனை விழிப்புணர்வு வாகனத்தை நேற்று (ஜூலை 2) ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்து ஆய்வுக் கூடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்த புகார்களை 9444042322 என்ற whatsapp எண் மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்தார்.
குமரி மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவிதாங்கோடு மாவட்ட அலுவலகத்தில் நேற்று (ஜூலை 2) நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நெல்லை மண்டல தலைவர் சுல்பிக்கர் அலி மற்றும் மண்டல செயலாளர் நெல்லை கனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 தாலுகாக்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை இணைய வழி பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேலும், உட்பிரிவுடன் கூடிய இணைய வழி பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த நிலவுடமைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் முகாமில் கல்வி உதவித்தொகை,
பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என 381 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய்துறை அலுவலர் பாலசுப்பிரமணியத்தை நேற்று (ஜூலை 1) விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தாரகை கத்பர்ட் ஏற்கனவே நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் சேஷாத்ரி, அபிஷேக்குமார் பன்சால் ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடன், வேட்பாளர்களின் இறுதி தேர்தல் செலவினம் கணக்கு தாக்கல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் செலவின கணக்கு குழு தலைவர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணுமாறு அதிகாரிகளை ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் இன்று (ஜூலை .1) நடமாடும் உணவு பகுப்பாய்வு விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். மேலும் தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆட்சியர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் நிலவரித் திட்டங்களின் படி வழங்கப்பட்ட பட்டாக்கள் சரிபார்க்கும் பணிகள் முடிந்து அவை இணையவழிப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு (நத்தம்) பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்கள் தங்களது பட்டாவினை “eservices.tn.gov.in”என்ற இணையதளம் வாயிலாக பெறலாம் எனக் கூறியுள்ளார்.
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாரகை கத்பர்ட் இன்று (ஜூலை.1) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக பூங்கொத்து அளித்து சந்தித்தார். மேலும் ஆட்சியரிடம் தொகுதிக்கு செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.
Sorry, no posts matched your criteria.