Kanyakumari

News July 6, 2024

148 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்படுமா?

image

குமரி ஜீரோ பாயிண்ட்டில் உள்ள 148 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பறக்கவிட உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது, “குமரி ஜீரோ பாயிண்ட்டில் ஏன் தேசியக்கொடி பறக்கவிடப்படுவதில்லை? எப்போது அது சரி செய்யப்படும்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து குமரி ஜீரோ பாயிண்டில் தேசியக்கொடி பறப்பதை உறுதிசெய்ய ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.

News July 5, 2024

குமரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி கேள்வி

image

கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் உள்ள 148 உயரமுள்ள தேசிய கொடி கம்பத்தில் மீண்டும் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஏன் தேசியக் கொடியை அங்கு இன்னும் பறக்க விடவில்லை என நீதிபதி இன்று (ஜூலை 5) நடைபெற்ற விசாரணையின் போது கேள்வி எழுப்பினார். இதற்கு குமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 4, 2024

குமரி எம்.பி.யை வரவேற்ற மாநகராட்சி மேயர்

image

கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் விஜய் வசந்த் எம்.பி. முதல் முறையாக இன்று(ஜூலை 04) நாகர்கோவில் வருகை தந்தார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் பார்வதிபுரம் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தோர் பங்கேற்றனர்.

News July 4, 2024

குமரி எம்.பி.யின் கோரிக்கை

image

பாராளுமன்றத்தில் 377 விதியின் கீழ் நேற்று (ஜூலை 4) நடந்த விவாதத்தில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் சமர்பித்தவை; நான்கு வழிச் சாலையை டவுன் ரயில் நிலையத்துடன் இணைக்க இணைப்பு சாலை வேண்டும், திருவனந்தபுரம் – நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமர்பித்தார். 

News July 4, 2024

நாகர்கோவில்: நாளைய மின்தடை 

image

கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1200 மின்மாற்றிகளில் நாளை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திங்கள்சந்தை, தலக்குளம், திருவிதாங்கோடு, மேக்காமண்டபம், திருவட்டார், திருவரம்பு , பனச்சமூடு , களியக்காவிளை, நித்திரவிளை, பேச்சிப்பாறை, கருங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

News July 4, 2024

குமரியில் இதுவரை 33 பேர் குண்டர் சட்டத்தில்  கைது

image

குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அதன்படி, அடிதடி, திருட்டு வழக்குகளில் கைதாகி உள்ள செல்வன் ஜெபராஜ், பிரவீன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து, இரண்டு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதன்படி, குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இந்த ஆண்டில் மொத்தம் 33 பேர் கைதாகி உள்ளனர்.  

News July 4, 2024

ஆதரவற்ற பெண்களுக்கு 5 ஆடுகள்: குமரி கலெக்டர் தகவல்

image

குமரி மாவட்டத்தில் ரூ.75.63 கோடி மதிப்பீட்டில், பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டத்தின்கீழ், ஒரு பயனாளிக்கு ரூ.17,500-க்கு 5 ஆடுகள் வழங்கப்படுகின்றன. பயனாளிகள் நிலமற்ற, ஏழ்மை நிலையில் உள்ள விதவை, கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களாக இருக்க வேண்டும். 60 வயதுக்குட்பட்டோர் நாகர்கோவில் கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என குமரி ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

News July 4, 2024

நாகர்கோவில்-சென்னைக்கு 4 நாள் வந்தே பாரத் ரயில்

image

நாகர்கோவில்-சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயிலை, வாரம் 4 முறை இயக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும். சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50-க்கு நாகர்கோவில் வந்துசேரும். நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20-க்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 11 மணிக்கு சென்று சேரும்.

News July 4, 2024

குமரிக்கு ரூ.21 கோடி தேவை: அமைச்சரிடம் எம்பி கோரிக்கை

image

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் டெல்லியில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் நேரில் அளித்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: “கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை ரோடு பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலத்திலும் ரோடு சேதமாகி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இந்த சாலைகளை செப்பனிட ரூ.21
கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News July 3, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று(ஜூலை 03) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டார். இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!