India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை 13) டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஹோலிகிராஸ் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி உள்ளிட்ட 16 மையங்களில் தேர்வு நடைபெற்றது. குமரியில்
4940 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3306 மட்டுமே தேர்வு எழுதினர். 1634 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா படகு சேவை மற்றும் படகு குழாம் செல்லவும் தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திருவள்ளூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி – ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்குவதற்கு ரயில்வே வாரியம் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மேற்சொன்ன வழித்தடத்தில் பல்வேறு அம்சங்களுடன் ஸ்லீப்பர் ரயில் இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரியில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இன்று (ஜூலை 13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஷன் கார்டில் காணப்படும் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அதை சரி செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டில் உள்ள குறைகளை இந்த முகாமில் கலந்து கொண்டு உடனே சரி செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி அம்சி பகுதியைச் சேர்ந்த அதிமுக மூத்த முன்னோடியான எஸ்.எம். மோகன் உடல்நல குறைவால் நேற்று காலமானார். எம்ஜிஆர் காலத்திலே அதிமுகவில் இருந்து வரும் இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முன்சிறை ஒன்றிய அதிமுக செயலாளராகவும், தமிழ்நாடு கைத்தறி கழக தலைவராகவும் இருந்தவர். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது.
குமரி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறு கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட பொது மக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சம்பந்தப்பட்ட தகவல்கள், நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு பதிவுகள் பற்றி தெரிந்துகொள்ள Facebook, Twitter, Instagram ல் Kanniyakumari District Police என்ற பெயரில் உள்ள சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.