India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காமராஜரின் 122-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு மேயர் மகேஷ், ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கடந்த சில நாட்களாக குமரி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், திற்பரப்பு உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி காலை உணவு திட்டத்தில் தமிழகத்தில் பல பகுதியில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் கிறிஸ்தவ நல அரசு உதவிப்பெறும் தொடக்கபள்ளியில் நாகர்கோவில் மா நகராட்சி மேயர் மகேஷ் இன்று காலை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி மகளிர் திட்ட அலுவலர் பொன்குமார், திமுகவினர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். அதன் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் குமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை இன்று (15.07.2024) காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில் நாகராஜா திடலில் காங்கிரஸ் கட்சி சார்பாக காமராஜர் 122வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி இன்று (ஜூலை.15) மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்எல்ஏ கலந்து கொள்ள உள்ளார். எனவே காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை பெய்து வருகிறது. இதனால், இம்மாவட்டத்தில் குழித்துறையில் 26.2மி.மீ, பாலமோர் 14.4 மி.மீ, கோழிப்போர் விளை 5.8 மி.மீ, சிற்றார்-1ல் 11.2, சிற்றார்-2மி.மீ, பேச்சிப்பாறை 12.2மி.மீ பெருஞ்சாணி 7.4 மி.மீ, புத்தன் அணை 7.2மி.மீ முள்ளங்கினாவிளை 10.4 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மேலும், தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள கனகமூலம் காய்கனி சந்தை நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் கனகமூலம் மகாராஜாவால் உருவாக்கப்பட்டது. கனகமூலம் சந்தை என்பது இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட மிகப்பெரிய சந்தை ஆகும். இந்த சந்தையின் மூலம் நேரடியாகச் சுமார் 10 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக சுமார் 20 ஆயிரம் குடும்பங்களும் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜர் பிறந்த தினமான நாளை (ஜூலை 15) காலை 9 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருக்கும் காமராஜர் சிலைக்கு குமரி மாவட்ட பாஜக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் அனைத்து பாஜக பொறுப்பாளர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் முதல் திருநங்கை வில்லிசை வேந்தரும், தோவாளை ஊராட்சியின் வார்டு உறுப்பினருமான சந்தியாதேவி போதை விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருவதால் அவருக்கு இவ்வாண்டிற்கான திருவள்ளுவர் விருது நேற்று (ஜூலை 13) நடைபெற்ற விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண்: 06012 நாகர்கோவில் -தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து இன்று மாலை 4.35 மணிக்கு ரத்து செய்யப் பட்டுள்ளது. இதே போன்று ரயில் எண்: 06011 தாம்பரம்-நாகர்கோவில் சந்திப்பு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை (ஜூலை 15) காலை 7.45 மணிக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.