Kanyakumari

News July 17, 2024

வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று(ஜூலை 16) அனைத்து துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பாளர் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநர் அரவிந்த், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News July 16, 2024

கன்னியாகுமரிக்கு பெண் ஆட்சியர் நியமனம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் புதிய குமரி மாவட்ட ஆட்சியராக தாம்பரம் மாநகர ஆணையராக இருந்த அழகுமீனா கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, குமரி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் 2 வருடங்களாக குமரி மாவட்ட ஆட்சியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 16, 2024

கன்னியாகுமரி ஆட்சியராக அழகுமீனா நியமனம்

image

கன்னியாகுமரி ஆட்சியராக அழகுமீனா நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் குமரி உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து, புதிய ஆட்சியர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News July 16, 2024

40அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

image

குலசேகரம் நிலைய எல்லைக்கு உட்பட்ட உண்ணியூர் கோணம் கொல்விளை என்ற இடத்தில் சுமார் 40அடி ஆழ கிணற்றில் 16 வயது சிறுவன் விழுந்துள்ளார். தகவல் அறிந்த குலசேகரம் தீயணைப்பு துறையினர் மற்றும் வீரர்கள் உபகரணங்கள் பயன்படுத்தி சிறுவனை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுவன் தற்போது நலமுடன் உள்ளார்.

News July 16, 2024

குமரியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு

image

இந்திய அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <<-1>>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

மாணவர்களை கவுரவித்த காங்கிரஸ் மாநில தலைவர்

image

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், நாகர்கோவில் நாகராஜா திடலில் காமராஜரின் 122 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. கிள்ளியூர் எம்.எல்.ஏ.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து +2 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பரிசு வழங்கி கெளரவித்தார்.

News July 16, 2024

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிப்பு

image

குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் அணையில் இருந்து கோதையாற்றுக்கு திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து எச்சரிக்கை பதாகை வைத்துள்ளது.

News July 15, 2024

288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஆரல்வாய்மொழி பேரூராட்சி குமாரபுரம் திட்டப்பகுதியில் உள்ள 288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள நலிவடைந்த பிரிவினர் நாகர்கோவில் வாழ்விட அலுவலகத்தை அணுகலாம். தகவலுக்கு 9994042100, 8072599455 எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 328 கோரிக்கை மனுக்கள்

image

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 15) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 328 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார்.

News July 15, 2024

குமரியில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!