India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், நாகர்கோவில் நாகராஜா திடலில் காமராஜரின் 122 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. கிள்ளியூர் எம்.எல்.ஏ.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து +2 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பரிசு வழங்கி கெளரவித்தார்.
குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் அணையில் இருந்து கோதையாற்றுக்கு திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து எச்சரிக்கை பதாகை வைத்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஆரல்வாய்மொழி பேரூராட்சி குமாரபுரம் திட்டப்பகுதியில் உள்ள 288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள நலிவடைந்த பிரிவினர் நாகர்கோவில் வாழ்விட அலுவலகத்தை அணுகலாம். தகவலுக்கு 9994042100, 8072599455 எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 15) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 328 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமராஜரின் 122-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு மேயர் மகேஷ், ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கடந்த சில நாட்களாக குமரி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், திற்பரப்பு உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி காலை உணவு திட்டத்தில் தமிழகத்தில் பல பகுதியில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் கிறிஸ்தவ நல அரசு உதவிப்பெறும் தொடக்கபள்ளியில் நாகர்கோவில் மா நகராட்சி மேயர் மகேஷ் இன்று காலை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி மகளிர் திட்ட அலுவலர் பொன்குமார், திமுகவினர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். அதன் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் குமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை இன்று (15.07.2024) காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில் நாகராஜா திடலில் காங்கிரஸ் கட்சி சார்பாக காமராஜர் 122வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி இன்று (ஜூலை.15) மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்எல்ஏ கலந்து கொள்ள உள்ளார். எனவே காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.