India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குமரி மாவட்ட பாஜக அணி மற்றும் பிரிவு மையக்குழு கூட்டம் நாகர்கோவில் பாஜக அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நேற்று (ஜூலை 16) நடைபெற்றது. இதில், கோட்ட பொறுப்பாளர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் கிருஷ்ணன் வழி நடத்தினர். கூட்டத்தில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க நாளை (ஜூலை 18) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் மாநகர இளைஞரணியின் ஆலோசனைக்கூட்டம் ஒழுகினசேரி திமுக அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.மகேஷ் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. கூட்டத்தில் இல்லம் தோறும் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநகர செயலாளர் ஆனந்த் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் , மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் மாநகர துணை அமைப்பாளர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை தொடர்ந்து, மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி ஆட்சியராக இருந்த ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று(ஜூலை 16) அனைத்து துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பாளர் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநர் அரவிந்த், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் புதிய குமரி மாவட்ட ஆட்சியராக தாம்பரம் மாநகர ஆணையராக இருந்த அழகுமீனா கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, குமரி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் 2 வருடங்களாக குமரி மாவட்ட ஆட்சியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி ஆட்சியராக அழகுமீனா நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் குமரி உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து, புதிய ஆட்சியர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குலசேகரம் நிலைய எல்லைக்கு உட்பட்ட உண்ணியூர் கோணம் கொல்விளை என்ற இடத்தில் சுமார் 40அடி ஆழ கிணற்றில் 16 வயது சிறுவன் விழுந்துள்ளார். தகவல் அறிந்த குலசேகரம் தீயணைப்பு துறையினர் மற்றும் வீரர்கள் உபகரணங்கள் பயன்படுத்தி சிறுவனை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுவன் தற்போது நலமுடன் உள்ளார்.
இந்திய அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <<-1>>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.