India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம், ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெரசம்மாள் உட்பட 20 பேர் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்ளும் நிகழ்ச்சி நேற்று (ஜூலை.18) இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில் ஆயுதப்படை சாலை அருகே உள்ள புகழ்பெற்ற புனித அல்போன்சா திருத்தல ஆலயத்தின் திருவிழா இன்று (ஜூலை.19) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு திருப்பலி மற்றும் கலை நிகழ்ச்சிககளை நடத்த விழாக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கோலாகலமாக நடைபெறும் இத்திருவிழாவானது தேர் பவனியுடன் ஜூலை 28-ஆம் தேதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாகவுள்ளது. பல்வேறு நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர். பி. என். ஸ்ரீதர், அங்கான்வாடி மையத்தில் பணியின் போது மரணமடைந்த இரண்டு அங்கன்வாடி பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை வழங்கினார். உடன் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி உடனிருந்தனர்.
நாளை ஆடி முதல் வெள்ளி என்பதால், தோவாளை மலர் சந்தையில் பூக்களை வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர். இன்று மல்லிகை பூ ரூ.400-க்கும், பிச்சி பூ ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது, இன்னும் நாட்கள் செல்ல செல்ல பூ விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க மானியம் அளிக்கப்படும் என ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்ணைக்கு தேவையான கொட்டகை இதர செலவுக்காக 50% மானியத்தில் ரூ.1,56,875 அரசால் வழங்கப்படும். மீதி 50% பயனாளிகள் பங்களிப்பு ஆகும். 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும். பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 17) இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இரவு 7 மணி வரை தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.