India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளபெருக்கு அபாயங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகளின் நீர்மட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார். அணைகளின் மதகுகள் சீராக இருக்கிறதா என்றும், மழைமானி, நீர்வரத்து, நீர்மட்ட அளவுகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதனையும் நேரில் பார்வையிட்டு பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 26ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில், ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் கடந்த ஜூன் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் ஆட்சித்தலைவரால் நேரில் பெறப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு, மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டுமென துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
நாகர்கோவில் அடுத்த வடசேரி சக்தி கார்டனை சேர்ந்த பகவதியப்பன், ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி. நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் உள்ள மகள் வீட்டுக்கு இவரும் இவரது மனைவியும் சென்று விட்டு நேற்று (ஜூலை – 21 ) இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 லட்ச ரூபாய் மற்றும் 200 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் நாளை முதல் ஜுலை.31 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், நாகர்கோவில்-தாம்பரத்திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் இன்று, நாளை, 25, 29, 30 ஆகிய தேதிகளில் தாம்பரத்திற்கு பதிலாக எழுப்பூருக்கு சென்றடையும். இதேபோல், பல்வேறு ரயில்கள் முழுமையாகவும் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்திற்கு நேற்று (ஜூலை-21) வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வருகை தந்தார். இதையடுத்து அவரை கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். மேலும் குமரி மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பேசினார். நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கு செல்லும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகு சவாரி, கடலின் நீர்மட்டம் காரணமாக தற்காலிகமாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்மட்டம் சரியான பிறகு படகு சவாரி இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பௌர்ணமி, அமாவாசை போன்ற நேரங்களில் கடல் உள்வாங்குதல் மற்றும் சீற்றமாக காணப்படும் எனவும் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி அறிவியல் பேரவை சார்பில் வருடம் தோறும் ஆசிரியர் திலகம் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2023-24 ஆண்டுக்கான சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், ஆசிரியர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் 9942758333 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது mullanchery@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.