India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரலையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா? என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், இந்த <

குளச்சல் அருகே கொட்டில்பாடு என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 70) இவர் வீட்டில் இருக்கும்போது இவரது மருமகன் வீட்டில் நுழைந்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த ஸ்டீபன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபனின் மருமகனை கைது செய்தனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

குமரி ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: தீபாவளி பண்டிகையையொட்டி அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கவேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைபகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் இன்றைய சட்டப்பேரவையில் குமரி மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்க வேண்டும் என கூறினார். குமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை என தமிழகத்தில் எந்த வகையிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கமாட்டோம் என உறுதியளிக்கிறேன். மத்திய அரசு மக்களின் கருத்தை கேட்காமல் இதை நிறைவேற்றுவோம் என கூறுகிறது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழையும், நாளை(அக்.17) தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

குமரி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

நேற்று அம்மாண்டிவிளை பகுதியில் தக்கலை மது விலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் வெளியே தோளில் பையுடன் நின்றிருந்த இருவரை சோதனையிட்டனர். அவர்கள் பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதைப்பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்றதாக தனியார் கல்லூரி 3ம் ஆண்டு மாணவர்களான தென்காசி மாவட்டம் சுனில் (21), செல்வகணேஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திருமண செயலியில் வரன் தேடிய தேவிகோடு பெண்ணுக்கு நியூசிலாந்தில் ஒருவர் அறிமுகமாகி மணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். 2 நாள் முன்பு கொச்சி வந்ததாக செல்போனில் பேசிய அவர் அதிக பணத்துடன் வந்ததால், அவரை விமான நிலையத்தில் இருந்து விட ரூ.5 லட்சம் அனுப்புமாறு கூற வங்கிக்கணக்கில் பணம் அனுப்பினார். நேற்று, மீண்டும் பணம் அனுப்ப கூற தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த பெண் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் : இன்று (அக். 16)
விண்ணப்பிக்க: <
டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் பண்டிகைகால காரம் இனிப்பு விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நாககோவிலில் நேற்று நடந்தது. இதில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறுகையில், உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி காரம், இனிப்பு வகை விற்றால் ரூ.20 லட்சம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனைக்கு வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.