India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 994 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன. இவை நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தன. பின்னர் வேகன்களில் இருந்து லாரிகளில் மூடைகள் ஏற்றப்பட்டு உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில், செங்கவிளை – குமரி இடையே 20% பணிகளே நிறைவடைந்து கிடப்பில் போடப்பட்டுள்ள 4 வழிச்சாலை பணியை தொடங்குதல்; குமரி-களியக்காய்விளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்தல் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது. களியக்காய்விளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க எம்.பி விஜய் வசந்த் மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி செல்லச்சாமி என்பவரின் வீட்டில் கடந்த 16 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது நடந்த சில நாட்களிலேயே நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி பகதியப்பன் என்பவரின் வீட்டிலும் கொள்ளை நடந்துள்ளது. எனவே விஞ்ஞானிகள் வீடுகளை குறி வைத்து கொள்ளை நடைபெறுகிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அழகு மீனா ஐஏஎஸ் நேற்று (ஜூலை-21) பொறுப்பேற்று கொண்டார். இந்த வகையில் குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக இன்று (ஜூலை-22) சந்தித்தனர். மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து அவரிடம் கலந்துரையாடல் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் போதைப்பொருள் தடுப்பு குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ஏ.சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கு.சுகிதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.
தமிழகத்தில் முதல் பாஜக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் சி. வேலாயுதம் (1996-2001). இவர் கடந்த மே மாதம் 8ம் தேதி காலமானார். அவரது சொந்த ஊரான கருப்புக்கோட்டில் அவருக்கு
மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை திறந்துவைக்க மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நாளை குமரிக்கு வருகிறார். அவரது வருகையை ஒட்டி குமரியில் அண்ணாமலை என்னும் ஹேஷ்டேகை பா.ஜ.வினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித்துறை மூலம் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை தலைமைச் செயலக அலுவலகத்தில் நடந்தது. மாத்தூர் சூழியல் சுற்றுலா மையம், சிற்றாறு 2 அணைபடகு சவாரி, திற்பரப்பு அருவி,
முட்டம் மேம்பாடு பணிகளை விரைந்து முடிப்பதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 388 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது.
Sorry, no posts matched your criteria.