India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தை சேர்ந்தவர் ததேயூஸ்(52). இவர் 4 மீனவர்களுடன் வள்ளத்தில் இன்று அதிகாலை கோவளம் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் வலை விரித்து மீன் பிடித்துவிட்டு நெத்திலி மீனுடன் கரை திரும்பியபோது ஆக்ரோஷமாக பொங்கிய அலையில் படகு கவிழ்ந்து. இந்நிலையில், 5 மீனவர்கள் அருகில் படகில் வந்த வேறு மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலக ஊழியர்களும் 10 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். அரசு ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ எந்த பொருள்களையும் கொண்டு தன்னை சந்திக்கக் கூடாது எனவும் ஆட்சியர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் பூம்புகார் படகு போக்குவரத்து கடலின் போக்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கடலின் தன்மை இயல்பு நிலைக்கு திரும்பியதால் வழங்கம்போல் இன்று படகு போக்குவரத்து தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும். திருவிழா நிறைவு நாளில் தூக்க நேர்ச்சை மிகவும் பிரசித்திபெற்றதாகும். தூக்க திருவிழாவை காண அன்றைய தினம் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
தமிழக மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து சில வாரங்களாக மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியே செல்லும் முன் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக அரசின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா குளச்சல் அரசு மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை இ.எஸ்.ஐ. துணை இயக்குனர் அருண் தெரிவித்ததாவது; இ.எஸ்.ஐ.யின் (தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம்) நிகழ்ச்சியான “வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0” குறைதீர்ப்பு கூட்டம் ஜூலை 29ஆம் தேதி நாகர்கோவில், கோட்டார் குமரி மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இ.எஸ்.ஐ. காப்பீட்டாளர்கள், பயனாளர்கள், வைப்பு நிதி உறுப்பினர்கள். ஓய்வூதியர் உள்பட அனைவரும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என்றார்.
தமிழகத்தில் இன்று(ஜூலை 25) 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வரும் ஜுலை 30 ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. முகாமில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகளை மனுக்களாக அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் ஆளில்லா வீடுகளில் திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது. திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தனிப்படை போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்யும் வகையில் இரவு நேர ரோந்து பணி 10 – 2 மற்றும் அதிகாலை 2 – 6 மணி வரை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.