India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றி செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து வாகன விதிமுறை மீறல் தொடர்பாக 1767 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்றும் போலீஸ் சோதனை தொடர்கிறது.

குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா தீபாவளி தினமான இன்று (அக்.31) சத்தியவாணி அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பக குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினார். குழந்தைகளிடம் தீபாவளியின் சிறப்பு குறித்து பேசியவர் குழந்தைகளிடம் அவர்களின் படிப்பு, பிடித்த விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார். குழந்தைகள் ஆட்சியரின் கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்தனர்.

தொடர் மழையின் காரணமாக கோதையாற்றில் தண்ணீர் அதிகரித்ததாலும், பேச்சிப்பாறை அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதாலும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தொர்ந்து 7வது நாளாக இன்றும் (அக்.31) குளிக்கத் தடை தொடர்கிறது. தீபாவளி நாளான இன்று அருவியில் ஆசை ஆசையாய் குளித்து மகிழ வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கன்னியாகுமரி, மார்தாண்டம், தக்கலை, நாகர் கோவில், குளச்சல் என பல பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று (அக்.30) ஒரே நாளில் 585 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று வரை குமரி மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்து 373 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் – ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரம் – மங்களூர் ஆகிய 2 ரயில்களையும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருகின்ற ரயில் கால அட்டவணையில் இந்த இரண்டு ரயில்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர்கள் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி கடிதம் எழுதியுள்ளனர்.

*காலை 8.15 மணிக்கு கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் சார்பில் கடமலைக்குன்றில் இந்திரா காந்தியின் 40வது நினைவு தினம் அனுசரிப்பு.
*காலை 8.45 மணியில் இருந்து 9.45 மணிக்குள் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழாவு கொடியேற்றம்.*
மாலை 3 மணிக்கு தோட்ட வாரம் சந்திப்பில் சிக்மா மன்றம் சார்பில் தேசிய ஒற்றுமை தின மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலிருந்து தென்காசிக்கு கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் இன்று முதல் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. தினசரி காலை 5:30 மணிக்கும் பிற்பகல் 2:40 மணிக்கும் இந்த பஸ் புறப்பட்டு செல்லும். தென்காசியில் இருந்து காலை 10:20 மணிக்கும் இரவு 7:00 மணிக்கும் இந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு களியக்காவிளை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை இலக்கிய வட்டம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்களை தேர்வு செய்து விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு 2023-ல் வெளிவந்த சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் நாவல் அனுப்பலாம். தங்கள் நூலின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி நவம்பர் 15. அனுப்ப வேண்டிய முகவரி:இரையுமன் சாகர்,நவ ஜீவன் இல்லம்,இரையுமன்துறை,பூத்துறை அஞ்சல்,குமரி மாவட்டம் 629176.தொடர்புக்கு: 7558162827

புத்தாடை அணிந்து, இனிப்புகள் பகிர்ந்து, தீபம் ஏற்றி, பட்டாசு கொளுத்தி ஜாதி மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் இந்த திருநாளில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி மற்றும் சமூகத்தில் எழுச்சி ஏற்பட வேண்டுமென வாழ்த்துகிறேன். இனிப்பாக, வண்ணமயமாக, புத்துணர்ச்சியுடன் இந்த பண்டிகை காலம் அமையட்டும். பிரிவினை மற்றும் ஏற்றதாழ்வுகளை நரகாசுரனை போல் அழித்திடுவோம் என குமரி எம்.பி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி இணைந்தது. இந்த விழாவை அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனை ஒட்டி இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த மார்சல் நேசமணியின் நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.