India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலையம் அருகே நல்லூரில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (60) வயதான மூதாட்டியிடம் நலவாரியத்தில் பதிவு செய்வதாக கூறி ஆரஞ்சு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து வயதான மூதாட்டி இடம் 20 சவரன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர். சம்பவ இடத்திற்கு சென்று ஆறு மணி போலீசார் இன்று(நவ.2) விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளியையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் உள்ள 91 டாஸ்மாக் கடைகளில் கடந்த 30, 31ம் தேதிகளில் மொத்தம் ₹9.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக நாள் ஒன்றுக்கு சராசரியாக ₹3 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று (நவ.01) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், தொகுதி முகவரி மாற்றம், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்தல் போன்றவைகளுக்கான சிறப்பு முகாம் இம்மாதம் 16, 17, 23 மற்றும் 24 தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று (அக்.31) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பாக நாகர்கோவிலில் இருந்து ஈரோட்டுக்கு மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக சிறப்பு பேருந்து 3ஆம் தேதி அன்று இரவு 7 மற்றும் 8 மணிக்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் நேற்று (அக்.31) தெரிவித்துள்ளது.

*காலை 9 மணிக்கு நாகர்கோவில் நேசமணி மணிமண்டபத்தில் மார்ஷல் நேசமணி சிலைக்கு மேயர் முன்னிலையில் கலெக்டர் மாலை அணிவித்தல் *மாலை 5 மணிக்கு தக்கலை லெஷ்மி திருமண மண்டபத்தில் இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் ”தமிழ்நாடு 68″ விழா.*இரவு 7 மணிக்கு திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் 2ஆம் நாள் விழாவில் திருவாதிரைக்களி, 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு கதகளி.

குமரி மாவட்டத்தில் புதிதாக 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1698 வாக்குச்சாவடிகள் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 1702 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியிலும் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதியிலும் தலா இரண்டு வாக்குச்சாவடிகள் வீதம் 4 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில், நாளை (01.11.2024) காலை 9.00 மணிக்கு நாகர்கோவில் நேசமணி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் முதல் தேதியை நினைவு கூறும் வகையில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணியின் மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியில் செல்வோர் பார்த்து ரசித்து ரசித்து செல்கின்றனர். நாளை காலை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் இங்குள்ள நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகளால் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. இன்று மாலை வலியாற்றுமுகம் பகுதியில் வந்து கொண்டிருந்த கனிமவள லாரி எதிரே வந்த சொகுசு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.