India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

* காலை 10 மணி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் பத்தாயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நுள்ளி விலை கிராம அலுவலரிடம் AICTU மனு கொடுக்கப்படுகிறது. * காலை 10 மணிக்கு இஸ்ரேல் அதிபரை கண்டித்து வேப்பமூடு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம்.* மாலை 5 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கேட்டு ஆர்ப்பாட்டம். * காலை 8 மணி சிறுபான்மை மக்கள் நலக் கட்சி சார்பில் பேரணி.

குளச்சலில் நேற்று (அக்.4) மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. காமராஜர் சாலையில் மின்னல் தாக்கியதில் வீட்டிலிருந்த குளச்சல் நகராட்சி Ex.கவுன்சிலர் சதீஷ் பாரதி கட்டிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அவரது இடது கையில் படுகாயம் ஏற்பட்டது. வீட்டிலுள்ள டிவி உட்பட மின்சார சாதனங்கள் நாசமானது. அருகில் உள்ள முஸ்லிம் மதராசாவில் இருந்த இன்வெர்டர் பழுதடைந்தது. பல வீடுகளிலும் மின்சார பொருட்கள் பழுதாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஆறு மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாத்தூர் தொட்டிபாலம் அமைந்துள்ள பரளியாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது. இதனால் மாத்தூர் தொட்டி பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குமரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை வேளிமலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது. அணை அதன் முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டிய நிலையில் தற்போது அணைக்கு வினாடிக்கு 90 கன அடி உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா (இ.ஆ.ப) அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் புத்தளம் பேரூராட்சி சொத்தவிளை பீச் முதல் பள்ளம் துறை வரை ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நிகழ்ச்சி இன்று (நவ-3) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புத்தளம் பேரூராட்சி துணைத்தலைவர் பால்தங்கம் மற்றும் கவுன்சிலர்கள் ஜெகநாதன் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

வில்லுக்குறி வீரவிளை சுரேஷ்குமார் – வசந்தாவின் இளைய மகன் சுதன்(18) ஜூலை.31ஆம் தேதி கல்லூரியில் மயங்கி விழுந்து இறந்தார். வேதனையில் இருந்த வசந்தா செப்.27ம் தேதி மயங்கி விழுந்து இறந்தார். மூத்த மகன் சுமன் (19) நேற்று(நவ.2) காலை வீட்டில் மயங்கி விழ, ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்துபோனார். நேசமணிநகர் போலீஸ் விசாரணை. ஒரே வீட்டில் 4 மாதங்களில் தாய் – மகன்கள் இறந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்த நிலையில் இன்று(நவ.3) காலை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கன மழை பெய்தது மழையின் காரணமாக மாவட்டத்தில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தற்காலிக முகாம்களுக்கு தேவையான அனைத்து உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களை கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் இன்று வயநாடு புறப்பட்டுச் சென்றார். அவர் அங்கு தங்கியிருந்து காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று மேற்கு மாவட்ட காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.