India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரியில் ரேஷன் அரிசி பதுக்கப்படுகிறது, கேரளாவுக்கு கடத்தப்படுகிறது என புகார்கள் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான புகார்கள், தகவல்களை 18005995950 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொலைபேசி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் ஐ.ஜி. நிர்மல் ஜோஸ்குமார் மற்றும் மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜ் ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.
சென்னையில் மிஸ்டர் தமிழ்நாடுக்கான ஆணழகன் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பலர் கலந்து கொண்டனர். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை மரியஜோன் என்பவர் இப்போட்டியில் வெற்றி பெற்று மிஸ்டர் தமிழ்நாடாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தி்ல் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தி்ல் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று(ஜூலை-27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வகையில் நாகர்கோவில் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விஜய் வசந்த் எம் பி சிறப்பு கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினார்.
திருவட்டாறு பாரதப் பள்ளியை சேர்ந்தவர் உஷாகுமாரி. இவர் திருவட்டாறு பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர். இவரது கணவர் ஜாக்சனை நேற்று இரவு, முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் உட்பட சிலர் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் நெய்யாற்றின்கரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜாக்சன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, திருவட்டாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை கொட்டி தீர்த்து வருகின்றனது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது முன் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களை சந்தித்தார். அப்போது, “நாம் ஜிஎஸ்டி செலுத்துகிறோம். மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அதை செய்யாமல் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய துரோகம் செய்கிறது. இந்தி பேசாத மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. தமிழ்நாடு மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது” என கூறினார்.
தமிழகத்தின் இன்று(ஜூலை 27) 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தமிழ்நாடு துப்பாக்கி சங்கம், கோவை ரைபிள் அசோசியேசன் சார்பில், மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி 15ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
திற்பரப்பை சேர்ந்த திருவட்டாறு எக்ஸெல் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் அண்ட்ரிக் டிலானோ
25 மீட்டர், 10 மீட்டர் பிஸ்டல் பிரிவுகளில்
ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களை பெற்றுள்ளார். சாதனை படைத்தவரை பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
Sorry, no posts matched your criteria.