India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூய்மை பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆட்சியர் அழகு மீனா ஐஏஎஸ் தலைமையில் நேற்று(ஜூலை 30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டு கலந்தாய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நாகர்கோவில், தக்கலை தலைமை அஞ்சல் நிலையங்களிலும், கோட்டார், கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய துணை அஞ்சல் அலுவலகங்களிலும் கங்கை நதியின் புனித நீர் பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பாட்டிலின் விலை ரூ.30. மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம் என கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் இருந்து 2,578 டன் புழுங்கல் அரிசி மூடைகள் ரயில் மூலம் நாகர்கோவில் டவுன் ரயில்வே நிலை நிலையத்துக்கு நேற்று காலை (ஜூலை 30) வந்தது. இந்த ரேஷன் அரிசி மூடைகள், ரயில் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் வெட்டூர்ணிமடம் அருகில் பள்ளிவிளையில் உள்ள மத்திய அரசின் உணவு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜாக்கமங்கலம் ஒன்றியம், புத்தளம் L.M.P.C மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடக்கிறது.
முகாமில் சிறப்பு மருத்துவர்களால் நோய் கண்டறியப்பட்டு அதற்குரிய சிகிச்சைகள் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த இலவச முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மீனா இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி மாவட்டத்திலும் இன்று(ஜூலை 30) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் போகும்போது முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துட்டு போங்க மக்களே!
கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளைக்கு அரசு பேருந்து நேற்று காலை பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அப்போதுஉ கொட்டாரத்தில், பெண் ஒருவர் அணிந்திருந்த நகையை கூட்டத்தில் மற்றொரு பெண் நைசாக கழட்டினார். இதையறிந்த அப்பெண் கூச்சலிட்டவே, குமரி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த 3 பெண்கள் சேர்ந்து திருட முயன்றது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளைக்கு அரசு பேருந்து இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அப்போது, கொட்டாரத்தில் ஒரு பெண் அணிந்திருந்த நகையை கூட்டத்தில் ஒரு பெண் நைசாக கழட்டினார். இதையறிந்த அந்த பெண் கூச்சலிட்டார். பின்னர் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரித்த போது தூத்துக்குடியை சேர்ந்த 3 பெண்கள் சேர்ந்து திருட முயன்றது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்தனர்.
குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலர் உஷா குமாரியின் கணவர் ஜாக்சனை நேற்று முன்தினம் இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கொலையாளிகளை உடனே கைது செய்யக் கோரி திருவட்டார் பஸ் நிலையம் முன்பு இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தாரகை கத்பட், ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை குமரி, தென்காசி, திருநெல்வேலி, உள்ளிட்ட 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த விருதை குமரிமாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.