India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளைக்கு அரசு பேருந்து நேற்று காலை பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அப்போதுஉ கொட்டாரத்தில், பெண் ஒருவர் அணிந்திருந்த நகையை கூட்டத்தில் மற்றொரு பெண் நைசாக கழட்டினார். இதையறிந்த அப்பெண் கூச்சலிட்டவே, குமரி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த 3 பெண்கள் சேர்ந்து திருட முயன்றது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளைக்கு அரசு பேருந்து இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அப்போது, கொட்டாரத்தில் ஒரு பெண் அணிந்திருந்த நகையை கூட்டத்தில் ஒரு பெண் நைசாக கழட்டினார். இதையறிந்த அந்த பெண் கூச்சலிட்டார். பின்னர் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரித்த போது தூத்துக்குடியை சேர்ந்த 3 பெண்கள் சேர்ந்து திருட முயன்றது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்தனர்.
குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலர் உஷா குமாரியின் கணவர் ஜாக்சனை நேற்று முன்தினம் இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கொலையாளிகளை உடனே கைது செய்யக் கோரி திருவட்டார் பஸ் நிலையம் முன்பு இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தாரகை கத்பட், ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை குமரி, தென்காசி, திருநெல்வேலி, உள்ளிட்ட 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த விருதை குமரிமாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குமரியில் ரேஷன் அரிசி பதுக்கப்படுகிறது, கேரளாவுக்கு கடத்தப்படுகிறது என புகார்கள் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான புகார்கள், தகவல்களை 18005995950 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொலைபேசி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் ஐ.ஜி. நிர்மல் ஜோஸ்குமார் மற்றும் மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜ் ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.
சென்னையில் மிஸ்டர் தமிழ்நாடுக்கான ஆணழகன் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பலர் கலந்து கொண்டனர். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை மரியஜோன் என்பவர் இப்போட்டியில் வெற்றி பெற்று மிஸ்டர் தமிழ்நாடாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தி்ல் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தி்ல் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று(ஜூலை-27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வகையில் நாகர்கோவில் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விஜய் வசந்த் எம் பி சிறப்பு கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினார்.
Sorry, no posts matched your criteria.