India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேல்புறம் வட்டாரத்தில் புயல், வெள்ளம், வறட்சியால் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைகின்றன. இதனை விவசாயிகள் எதிர்கொள்ள பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளது. வாழை, மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய கடைசிநாள் செப்டம்பர் 16-ந்தேதி ஆகும். ஏக்கர் வாழைக்கு ரூ.4,203, மரவள்ளிக்கு ரூ.1,463 பிரீமியம் தொகையுடன் விண்ணப்பிக்கலாம் என மேல்புறம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷாஜி கூறினார்.
விவசாயிகளுக்காக தமிழக அரசு துவங்கிய “உழவன் செயலி”யில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 27,478 பேர் இணைந்துள்ளனர். இதன் மூலமாக விவசாயிகள் மண் வளம், மானிய திட்டங்கள், உழவர் தயாரிப்புகள், விவசாய இடுபொருட்கள் பதிவு செய்தல், நீர்மட்டம் உட்பட 24 வகையான சேவைகளை பெற முடியும். மேலும், கூடுதல் விவரங்களை <
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டீனாக பணியாற்றிய பிரின்ஸ் பயஸ் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணை முதல்வராக இருந்த லியோ டேவிட் புதிய டீன் ஆக நியமிக்கப்பட்டார். அவரிடம் முன்னாள் டீன் இன்று பொறுப்புகளை ஒப்படைத்தார்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டீனாக பணியாற்றிய பிரின்ஸ் பயஸ் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணை முதல்வராக இருந்த லியோ டேவிட் புதிய டீன் ஆக நியமிக்கப்பட்டார். அவரிடம் முன்னாள் டீன் இன்று பொறுப்புகளை ஒப்படைத்தார்.
குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறித்துள்ளது தமிழ்நாடு அரசு. இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாவும் விளங்கும் குமரி அனந்தனுக்கு விருது என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். காங்., மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான குமரி அனந்தனுக்கு, சுதந்திர தினத்தன்று தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் வழங்கவுள்ளார்.
பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் மூலம் 2024-2025 ஆம் ஆண்டில் குமரி மாவட்டத்தில் 2 இளைஞர்களுக்கு வங்கிக்கடன் உதவியுடன் ஏதாவது ஒரு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு அதிகபட்சமாக தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் உள்ள 100 அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்த குட்விஷன் நிறுவனம் 100 தன்னார்வலர்களை மாதம் ரூ.8000 ஊதியத்தில் நியமிக்க உள்ளது. ஆங்கில வழி கல்வி பயின்ற பட்டதாரிகள், ஆங்கில திறமை மிக்கவர்கள் இன்று (ஆகஸ்ட் 1) காலை 10 மணிக்கு கருங்கல் பாலூர் குட்விஷன் அலுவலகத்தில் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள 100 அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்த குட்விஷன் நிறுவனம் 100 தன்னார்வலர்களை மாதம் ரூ.8000 ஊதியத்தில் நியமிக்க உள்ளது. ஆங்கில வழி கல்வி பயின்ற பட்டதாரிகள், ஆங்கில திறமை மிக்கவர்கள் நாளை (ஆகஸ்ட் 1) காலை 10 மணிக்கு கருங்கல் பாலூர் குட்விஷன் அலுவலகத்தில் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, உணவுகளில் செயற்கை பொடிகளை பயன்படுத்தும் உணவங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தரமற்ற உணவுகளை வழங்கினால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
நாகர்கோவில் இடலாக்குடி சதாவதானி செய்கு தம்பி பாவலரின் 151வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் செய்குதம்பி பாவலரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் பாத்திமா ரிஸ்வானா, பியாசா, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.