India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் மூலம் 2024-2025 ஆம் ஆண்டில் குமரி மாவட்டத்தில் 2 இளைஞர்களுக்கு வங்கிக்கடன் உதவியுடன் ஏதாவது ஒரு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு அதிகபட்சமாக தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் உள்ள 100 அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்த குட்விஷன் நிறுவனம் 100 தன்னார்வலர்களை மாதம் ரூ.8000 ஊதியத்தில் நியமிக்க உள்ளது. ஆங்கில வழி கல்வி பயின்ற பட்டதாரிகள், ஆங்கில திறமை மிக்கவர்கள் இன்று (ஆகஸ்ட் 1) காலை 10 மணிக்கு கருங்கல் பாலூர் குட்விஷன் அலுவலகத்தில் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள 100 அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்த குட்விஷன் நிறுவனம் 100 தன்னார்வலர்களை மாதம் ரூ.8000 ஊதியத்தில் நியமிக்க உள்ளது. ஆங்கில வழி கல்வி பயின்ற பட்டதாரிகள், ஆங்கில திறமை மிக்கவர்கள் நாளை (ஆகஸ்ட் 1) காலை 10 மணிக்கு கருங்கல் பாலூர் குட்விஷன் அலுவலகத்தில் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, உணவுகளில் செயற்கை பொடிகளை பயன்படுத்தும் உணவங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தரமற்ற உணவுகளை வழங்கினால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
நாகர்கோவில் இடலாக்குடி சதாவதானி செய்கு தம்பி பாவலரின் 151வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் செய்குதம்பி பாவலரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் பாத்திமா ரிஸ்வானா, பியாசா, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூய்மை பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆட்சியர் அழகு மீனா ஐஏஎஸ் தலைமையில் நேற்று(ஜூலை 30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டு கலந்தாய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நாகர்கோவில், தக்கலை தலைமை அஞ்சல் நிலையங்களிலும், கோட்டார், கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய துணை அஞ்சல் அலுவலகங்களிலும் கங்கை நதியின் புனித நீர் பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பாட்டிலின் விலை ரூ.30. மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம் என கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் இருந்து 2,578 டன் புழுங்கல் அரிசி மூடைகள் ரயில் மூலம் நாகர்கோவில் டவுன் ரயில்வே நிலை நிலையத்துக்கு நேற்று காலை (ஜூலை 30) வந்தது. இந்த ரேஷன் அரிசி மூடைகள், ரயில் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் வெட்டூர்ணிமடம் அருகில் பள்ளிவிளையில் உள்ள மத்திய அரசின் உணவு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜாக்கமங்கலம் ஒன்றியம், புத்தளம் L.M.P.C மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடக்கிறது.
முகாமில் சிறப்பு மருத்துவர்களால் நோய் கண்டறியப்பட்டு அதற்குரிய சிகிச்சைகள் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த இலவச முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மீனா இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி மாவட்டத்திலும் இன்று(ஜூலை 30) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் போகும்போது முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துட்டு போங்க மக்களே!
Sorry, no posts matched your criteria.