India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெருந்தலைவர் காமராஜர் வழி நடந்து, காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கி, தமிழை தனது மூச்சாக கொண்டு வாழ்ந்து வரும் இலக்கிய செல்வர் குமரி அனந்தனுக்கு தமிழக அரசு தகைசால் விருது வழங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி. குமரி மாவட்டத்துக்கும், குமரி மக்களுக்கும் இது பெருமை சேர்ப்பதாகும். தமிழக அரசுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கடை கருமரம் ஆட்டோ டிரைவர் மரியடேவிட்டுக்கும் ஐரேனிபுரம் நிர்மலுக்கும் கடந்த 31-ம் தேதி தகராறு ஏற்பட்டு, நிர்மலின் தாயாரை மரிய டேவிட் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிர்மல், பென்னிட்டாய், காட்வின் ஜாண் ராஜ், பரமசிவன், எழில் குமார் ஆகியோருடன் சேர்ந்து நேற்று மரிய டேவிட்டை வெட்டி கொன்றார். இதையடுத்து, 5 பேரையும் புதுக்கடை போலீசார் இன்று கைது செய்தனர்.
தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில், குமரி மாவட்டத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 2787 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த ஜூன் மாத நிலவரப்படி https://www.naanmudhalvan.tn.gov.in/jobportal/Home/index இணையதளத்தில் 13,303 பேர் தங்களது விருப்பங்களை பதிவு செய்துள்ளனர். இதில் குறிப்பாக பாலிடெக்னிக் மாணவர்கள் அதிக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மலை கிராம மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மழைநாட்ளில் கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே சென்ற உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
குமரி வீயன்னூரை சேர்ந்தவர் சத்தியதாஸ் மகன் ஜிஜோ, விமானப் படை ஊழியர். இவரிடம், பள்ளியாடி லினோ பிரையன், தக்கலை எட்வின் சாமுவேல், திருவனந்தபுரம் ஷாஜி ஆகியோர் ரூ.30 லட்சத்தில் பழைய டூரிஸ்ட் பஸ் வாங்கித் தருவதாக கூறி முன்பணமாக ரூ.9 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் 5 மாதமாகியும் பஸ் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியதாக அளித்த புகாரின்பேரில் 3 பேர் மீதும் திருவட்டார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று(ஆக.,2) இரவு சிறப்பு ரயில்(06005) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச லம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திரு நெல்வேலி, வள்ளியூர், வழியாக நாகர்கோவி லுக்கு நாளை (ஆக.3) காலை 11 மணிக்கு வந்தடைகிறது.
குமரியை சேர்ந்த அக்காள் – தம்பிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அஞ்சுகண்டறையை சேர்ந்தவர் கிரிஜாகுமார். கடந்த 2009ல் இவரது வீட்டை செல்லம்மாள் என்பவர் விலைக்கு கேட்டுள்ளார். கிரிஜாகுமார் மறுக்கவே, செல்லம்மாள், அவரது தம்பி நடராஜன் ஆசிட் வீசியதில் கிரிஜாகுமாரின் பார்வை பறிபோனது. இவ்வழக்கில் அக்காள்-தம்பி இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி மாரியப்பன் தீர்ப்பளித்தார்.
கன்னியாகுமரி தாழக்குடி ஜெயந்தீஷ்வரர் கோயில் கருவறையில், பிரதோஷ நாளான நேற்று(ஆக.,1) நல்ல பாம்பு ஒன்று 30 நிமிடம் படம் எடுத்து நின்றது. மேலும் எந்தவித இடையூறும் செய்யாமல் நின்றதை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, பக்தியுடன் நாகப் பாம்பை வழிபட்டுச் சென்றனர். பின்னர் கோயில் வளாகத்திற்குள் சென்று அந்தபாம்பு மறைந்தது. பிரதோஷ தினத்தில் கோயிலில் நாகம் தோன்றியது பக்தர்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.
தக்கலை போலீசார் நேற்று(ஆக. 1) மேட்டுக்கடை, பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மது போதையில் பைக் ஓட்டி வந்த அருள்ராஜன்(38), ரோஜன்(54), முருகன்(55), அசீஸ்(35), ஹரிகிருஷ்ணன்(34), மோகன்(49), கண்ணன்(34), வினோ(40) ஆகியோரின் பைக்குகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். போதையில் பைக் ஓட்டியதாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 44 வழக்குகள் பதிவானது.
Sorry, no posts matched your criteria.