India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவட்டாறு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜாக்சன் கொலை வழக்கில் நேற்று(ஆக.03) திற்பரப்பில் வைத்து சாரூர் வினீத்(26), மருங்கூரைச் சேர்ந்த மாரிமுத்து (30), விக்னேஷ்வரன்(18) மற்றும் 15 வயது சிறுவனையும் திருவட்டாறு இன்ஸ்பெக்டர் சீதாலெஷ்மி மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், முக்கிய குற்றவாளி ராஜகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 5.30 மணி வரை 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பரிசோதனைகள் செய்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. 30 வயதுக்கு மேலான பெண்கள் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் வாய் புற்றுநோய்க்கான ஆரம்ப கட்ட பரிசோதனை மேற்கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நேற்று குமரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் கூறியதாவது; குமரி மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தை தடுக்கவும், கொள்ளையர்களை பிடிக்கவும் ஒவ்வொரு சப் டிவிஷனுக்கும் 4 தனிப்படைகள் என மொத்தம் 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரவுடிகள், பழைய குற்றவாளிகள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். மது அருந்தி பைக்கில் சாகசம் செய்பவர்களை படம் எடுத்து 70103 63178 என்ற செல்போனுக்கு வாட்ஸ் அப் செய்யலாம் என்றார்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, கன்னியாகுமரியில் உள்ள 5,73,949 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரப்பர் ஷீட் உற்பத்தி கடுமையாக சரிந்த நிலையால் ரப்பர் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரப்பரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று கோட்டயம் சந்தையில் ஆர்.எஸ்.எஸ். 4 ஆம் தர ரப்பர் ஷீட்டின் விலை கிலோவுக்கு ரூ.226 என நிர்ணயிக்கப்பட்டதால், குலசேகரம் பகுதியில் அதன்படி விற்பனையாகிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணியிட மாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் அவர்கள் பணியாற்றிய மாவட்டங்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் மாற்றப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் விவரம்: குலசேகரம்: மீனா, கன்னியாகுமரி: சரவணன், திருவட்டார்: முருகன், புதுக்கடை: ஜானகி, களியக்காவிளை: பாலமுருகன், இரணியல்: செந்தில்வேல் குமார்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுநர் டேவிட் நேற்று முன்தினம்(ஆக.01) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், டேவிட்டை வெட்டிக் கொலை செய்த ஜோன் ராஜ்(28), பின்னி டேப்(36) மற்றும் பரமசிவன்(37) ஆகிய 3 பேரை போலீசார் இன்று(ஆக.03) கைது செய்துள்ளனர்.
சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக www.tntourismawards.com என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வருகிற 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கன்னியாகுமரி சுற்றுலா அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். போன்: 04682246276, 9176995866.
Sorry, no posts matched your criteria.