India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் அருகே முறைகேடாக பத்திரப்பதிவு செய்யததாக சார் பதிவாளர் உட்பட பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தோவாளை சார் பதிவாளரின் பெயரில் உள்ள லாக் இன் ஐடி மூலம் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, சார்பதிவாளர் சுப்புலட்சுமி, அலுவலக உதவியாளர்கள் தனராஜ், நம்பிராஜ், ஒப்பந்த பணியாளர்கள் டெப்லின், ஜெயின் ஷைலா ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரல்வாய்மொழி அருகே உள்ள அம்மன் கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அம்மனின் 2 கிராம் தங்கப் பொட்டு திருட்டுபோனது. இந்த நிலையில் நேற்று(ஆக.,5) காலையில் கோயிலின் கருவறை முன்பு தாமரை பூவுடன் அம்மனின் நகை(தங்க பொட்டு) இருந்தது. இதையடுத்து அம்மனின் நகையை திருடி தூக்கமின்றி இருந்து, தவறை உணர்ந்து மீண்டும் கோயிலிலேயே நகையை வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என அப்பகுதியினர் பேசி வருகின்றனர். SHARE IT.
கன்னியாகுமரி திமுக கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஆனந்தின் மகன் விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் மருத்துவமனை சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.
குமரி மாவட்டத்தில் 4 துணை போலீஸ் சரகங்களில் 33 போலீஸ் நிலையங்கள் உள்ளன. 3 ஆண்டுகள் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் என மொத்தம் 288 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேற்று(ஆக.,5) பிறப்பித்தார்.
நாகர்கோவில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி பயில விரும்புவோர் ஆக.16 வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை. பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. காலணி, சீருடை இலவசம். கட்டணமின்றி பயிற்சி. உதவித்தொகை மாதம் ரூ.750 வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 9499055805, 04652-260463, 261463 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் என குமரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்காக 296 கோடியே 8 லட்சம் செலவில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றது. பணிகள் நிறைவுற்ற நிலையில் 12ஆம் தேதி முதல்வர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் குடிநீர் திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இந்தப் பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து இன்று உயர் அதிகாரிகள் வர உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஆக.05) அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும் என பழங்குடியின நலத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் நவீன வசதிகளுடன் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.இந்த இலவச பயிற்சி வகுப்பு வரும் ஆக.10ஆம் தேதி முதல் 4 மாதங்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் நடைபெறும்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-1 மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என இளநிலை பட்டப்படிப்பு வரை வழக்கப்படும். இதற்காக நேற்று குமரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 2,169 மாணவர்கள் தேர்வு எழுதினர். 207 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 7ம் தேதி வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் & தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளன. இதையடுத்து குமரி ஆட்சியர் அழகு மீனா, “கடல் கொந்தளிப்புடன் காணப்படலாம். கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க செல்ல வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.