India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.விட்டு விட்டு பெய்து வரும் இந்த மழையின் காரணமாக நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 4 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் விபரங்கள் செய்த சேகரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகை காலத்தில் பயணிகள் வசதிக்காக இன்று(18ம் தேதி) கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில் எண் 12665 கன்னியாகுமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஸ்லீப்பர் பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். அதுபோல் அக்.20.ல் ஹவுராவில் இருந்து புறப்படும் ரயில் எண் 12666 ஹவுரா – கன்னியாகுமரி எக்ஸ்பிரசிலும் ஒரு ஸ்லீப்பர் பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

குமரி மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க…SHARE பண்ணுங்க..

தீபாவளி பண்டிகை வருகிற 20ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார் அதில் தீபாவளி பரிசு பொருட்களை யாரிடமும் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாங்க கூடாது என்று கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அறிவிப்பின்படி, இன்று (17.10.2025) இரவு மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் சிறப்பு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில், தக்கலை, மணிக்கூண்டன், களியக்காவிளை, கன்னியாகுமரி பகுதிகளில் SSI, HC மற்றும் GR அதிகாரிகள் பணி புரிவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று விடுத்த செய்தி குறிப்பில், குமரியில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 45 முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்குவதற்கு 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் முன்னாள் படைவீரர்கள் தொழில் முனைவோராக மாற விருப்பம் தெரிவித்த மாவட்டம் குமரி மாவட்டம் ஆகும் என்றார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக குமரியில் அக். 20ம் தேதி தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

குமரி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

தீபாவளிக்கு குமரிக்கு கிளம்பிட்டீங்களா? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம், டிக்கெட் உறுதி போன்றவைகளை பார்க்க செயலிகள் இன்னும் பதிவிறக்கம் செய்யுறீங்களா ?? இனி அது தேவையில்லை! அரசின் RAILOFY (+91 9881193322) வாட்ஸ் ஆப் எண்ணில் ரயில் எந்த பிளாட்பார்ம், எப்போ வரும், டிக்கெட் முன்பதிவு போன்றவைகளை இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவது மூலம் தெரிஞ்சுக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

வெள்ளமடத்தில் உள்ள பெண் ஒருவர் சென்னை பொறியியல் கல்லூரியில் பி.இ.படிக்கிறார். பெருவிளையை சேர்ந்த பார்த்தீபா (25) என்பவர் மாணவியை திருமணம் செய்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்து, ரூ.7 லட்சம் ரொக்கம், 6.5 பவுன் நகை வாங்கி ஏமாற்றியுள்ளார். இவற்றை திருப்பிக்கேட்ட மாணவியிடம் முகத்தில் ஆசிட் விடுவதாக கூறி மிரட்டவே, மாணவி நேற்று அவர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.