India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த பழனிக்குமார் குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை ஆணையாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று (ஆக.07) அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இருந்தனர்.
கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை வந்தனர். சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்ட அனுமதி அளித்த போதிலும் கடலில் இறங்குவதற்கு போலீசார் தடை விதித்தனர். அலை சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை குமரி எம்.பி. விஜய் வசந்த் நேற்று நேரில் சந்தித்து அளித்த மனு அளித்தார். அதில், மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன் மற்றும் விவசாயிகள், மீனவர்கள், நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர பல அத்தியாவசிய பொருட்களின் வரியினை குறைக்க வேண்டும். சிறு குறு மையை குறைக்க GST சேவையை எளிமையாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மனோதங்கராஜ் முகநூலில் குறிப்பிட்டிருப்பதாவது, ஆதிக்கம் நிறைந்த இவ்வுலகில் பாலின ஒடுக்குமுறையை தைரியத்துடன் எதிர்கொண்டு அதே துறையில் தனது ஒடுக்குமுறை விலங்கை உடைத்து கழுத்தில் மகுடமாய் சூட காத்திருக்கும் வீரமங்கை வினேஷ் போகத்! அன்று உன் போராட்டத்திற்காக உனது கையை கட்டியவர்கள் இன்று கைதட்டுகிறார்கள்! பெண் சமுதாயத்திற்கு ஓர் உதாரணமாக திகழ்கிறாய். வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
தென் தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
2023ல் தோவாளை சார்பதிவாளராக இருந்த மேகலிங்கம் விடுப்பில் சென்றிருந்த வேளையில் அப்பொறுப்பில் சுப்புலெட்சுமி(33) பணியாற்றினார். அப்போது, முறைகேடாக 20 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று குமரி க்ரைம் போலீசார் சுப்புலெட்சுமி, தனராஜா, நம்பிராஜன், ஜெயின் சைலா, டெல்பின் ஆகியோரை சிறையில் அடைத்தனர். சுப்புலெட்சுமி 6 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
குமரி காவல்துறை சார்பில் ‘ராயன்’ பட பாடலை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள குமரி காவல்துறை, இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தும் வகையில் தனுஷ் நடித்த ‘ராயன்’ படத்தின் “உசுரே நீதானே நீ தானே..நிழலா உன் கூட நானே” என்ற பாடல் வரிகளுடன் மீம்ஸ் வெளியிட்டுள்ளது. இது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குமரி மாவட்டத்தில் 79 இடங்களில் வயது முதிர்ந்தோர் சமூகப் பொருளாதார நிலை குறித்த ஆய்வு தமிழக அரசால் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தேர்வு செய்யப்பட்ட 55 வயதுக்கு மேற்பட்டோர் உள்ள குடும்பங்களில், குமரி மாவட்ட பொருள் இயல், புள்ளி இயல் துறை பணியாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்படும். சரியான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியர் அழகு மீனா கேட்டுக்கொண்டுள்ளார்.
குமரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜெகநாதன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள், சென்னையில் இன்று (ஆக 7) அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, இளைஞர் அணி சார்பில் குமரி மேற்கில் நடைபெற்ற பல்வேறு பணிகளை அவருடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, “நலத்திட்ட பணிகளை மக்களிடம் சேர்க்க இளைஞரணியினர் உழைக்க வேண்டும் என” உதயநிதி தெரிவித்தார்.
குழித்துறையில் நடக்கும் வாவுபலி பொருட்காட்சி திடலில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று செல்ல வேண்டும். இதில் விஐபி-கள், அரசு அதிகாரிகளுக்கு இலவச பாஸ் ஒப்பந்ததாரர் மூலம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு கும்பல் விஐபி பாஸ் போன்று போலி அட்டை தயாரித்து ரூ.200-க்கு மக்களுக்கு விற்பனை செய்துள்ளது. இது குறித்து ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.