Kanyakumari

News August 8, 2024

குமரி ஆட்சியர் அழகுமீனா அகதிகள் முகாமில் ஆய்வு

image

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெருமாள் புரத்தில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று பெருமாள்புரம் அகதிகள் முகாமுக்கு சென்று ஆய்வு செய்தார். முகாமில் ரூ.6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகளையும் அவர் ஆய்வு செய்து, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

News August 8, 2024

பூம்புகார் கப்பல் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்

image

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவையானது கடலின் நீர்மட்டம் தாழ்வு காரணமாக தற்காலிகமாக படகு சேவை இன்று (ஆக.09) காலை முதல் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

News August 8, 2024

நாகர்கோவில் to வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

image

வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிற்காக, நாகர்கோவிலில் இருந்து ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் இன்று(ஆக.,8) தெரிவித்துள்ளனர்

News August 8, 2024

KUMARI: கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

image

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக, கடலுக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் அழகு மீனா இன்று(ஆக.,8) எச்சரிக்கை விடுத்துள்ளார். பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் கடல் பகுதிகளில் கவனமுடன் இருக்கும்படி ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்து.

News August 8, 2024

குமரி மாணவர்களே! ரூ.6 ஆயிரம் உதவித்தொகை

image

இந்திய அஞ்சல் துறை சார்பாக குமரி மாவட்டத்தில் மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக, 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு 2 கட்டமாக எழுத்து, வினாடிவினா தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் மாணவருக்கு ரூ.6 உதவித்தொகையாக வழங்கபட உள்ளது. இவ்வாறு நேற்று(ஆக.,7) குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE IT.

News August 8, 2024

நாகர்கோவில் சிறையில் சவுக்கு சங்கர்

image

பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்தது குறித்து, களியக்காவிளை ஆய்வாளர் சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கில் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக புழல் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று(ஆக.,7) அதிகாலை 2.30 மணி அளவில் நாகர்கோவில் சிறைக்கு கொண்டுவரப்பட்டார்.

News August 8, 2024

குமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் துவக்கம்

image

குமரி மாவட்டத்தில் முதல் பருவ கன்னிப்பூ சாகுபடி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போதைய நிலையில் நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் பறக்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நேற்று (ஆக.07) தொடங்கியுள்ளது. கடந்த பருவத்தின் போது கிடைத்த அளவிற்கு நெல் மகசூல் நோய் காரணமாக இந்த பருவத்தில் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

News August 8, 2024

குமரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

image

தாம்பரம் ரயில் நிலைய பாதையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 16 , 17 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி ரயில் எழும்பூருக்கு பதில் செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும். அதேபோன்று 15, 16 தேதிகளில் கன்னியாகுமரி ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 7, 2024

குமரி புதிய இன்ஸ்பெக்டர் அதிரடி அறிவிப்பு

image

கன்னியாகுமரியில் புதிய போலீஸ்  இன்ஸ்பெக்டராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஆக. 6) கன்னியாகுமரியில் பதவி ஏற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கன்னியாகுமரியில் கஞ்சா உட்பட போதைபொருட்கள் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரங்களில் போலீசார் ரோந்தில் ஈடுபடுவர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News August 7, 2024

தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து ஆலோசனை 

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ள தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தில் 6261 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், 9ம் தேதி முதல் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!