Kanyakumari

News August 11, 2024

நாகர்கோவிலில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

image

நாகர்கோவில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தினசரி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(ஆக.,12) சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். நாகர்கோவில் நடைபெறும் விழாவில் ஆட்சியர், மேயர் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

News August 11, 2024

குமரி அருகே பாடம் மறந்ததால் +1 மாணவி தற்கொலை

image

குமரி பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் 11 ஆம் வகுப்பு மாணவி. இவர் நன்றாக படித்தும் தேர்வின்போது பாடங்கள் மறந்து சரியாக தேர்வு எழுத முடியவில்லை என வருத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம்(ஆக.,9) உடல்நிலை சரியில்லை என்று கூறி பள்ளிக்கு செல்லாத இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 11, 2024

அவைத் தலைவருக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

image

குமரி இராஜாக்கமங்கலம் ஒன்றிய அதிமுக அவைத் தலைவர் முருகன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இதை அறிந்து, நேற்று(ஆக.,10) தெக்குறிச்சி அம்பேத்கர் நகரிலுள்ள அவரது இல்லத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான பச்சைமால், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் & முன்னாள் மா.செ. அசோகன் உட்பட ஏராளமானோர் முருகன் உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

News August 11, 2024

நாகர்கோவில் எம்.எல்.ஏ பரபரப்பு அறிக்கை

image

“பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடலில் கலக்கிறது. ஆனால் அனந்தனாறு, காரவிளை, சம்பக்குளம் முதலிய சானலில் கடைவரம்பு நிலம் வரை தண்ணீர் முழுமையாக செல்லவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கின்றனர். உடனே தண்ணீர் விடவேண்டும் இல்லையேல் வரும், 16 ஆம் தேதி பா.ஜ.கட்சி, பொதுமக்கள் பங்கேற்கும் ஆர்பாட்டம் நடக்கும்” என நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பா.ஜ.க நிர்வாகி வேண்டுகோள்

image

குமரி மாவட்டம் தோவாளை கால்வாயை நம்பி விவசாயம் நடந்துவந்த 6 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. “இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் வழியாக ஆட்சியர் ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சதிஷ்ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News August 10, 2024

நாகர்கோவில் அருகே 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

image

நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் சாதுசுந்தர் (49). இவர் சம்பவத்தன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, மிட்டாய் வாங்கி தருவதாக கடைக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து குழந்தையின் தாயார் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News August 10, 2024

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி: ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி அன்று போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைத்து மாணவர்கள் மற்றும் இளம் சமுதாயத்தினர் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே குமரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

News August 10, 2024

குமரி மாவட்ட ஊராட்சி சாதாரண திட்ட குழு கூட்டம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் வரும் 20.08.2024 அன்று முற்பகல் 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில், முக்கிய திட்டங்கள் குறித்து விவாதித்து ஆய்வு செய்யப்படவுள்ளது என மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் அறிவித்துள்ளார்.

News August 10, 2024

இ.எஸ்.ஐ. ஊதிய வரம்பை உயர்த்த எம்.பி. கோரிக்கை

image

இ.எஸ்.ஐ. பயனாளிகளுக்கான சம்பள வரம்பு ரூபாய் 15000, 2016ஆம் ஆண்டு ரூ.21000 என மாற்றி அமைக்கப்பட்டது. மாத ஊதியமாக ரூ.21000 பெறும் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. சேவை வழங்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழல், விலைவாசியை கணக்கில் கொண்டு ஊதிய வரம்பை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து குமரி எம்.பி. விஜய்வசந்த் கோரிக்கை மனு அளித்தார்.

News August 10, 2024

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் புதிய ரயில் இயக்க கோரிக்கை

image

சென்னை – நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தொடர்ந்து சென்னை – நாகர்கோவில் வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வேத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில் இயக்கப்படுவதாக அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ரயில் இயக்கப்படாமல் இருப்பதால் காலதாமதம் இன்றி உடனே ரயிலை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!