India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

#ஈத்தாமொழி இசக்கி அம்மன் கோவிலில் காலை 9.45 மணிக்கு கும்பாபிஷேகம். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை. #நாகர்கோவில் புலவர் விளை நாராயணசாமி கோவிலில் மாலை 6 மணிக்கு அய்யா கருடவாகனத்தில் தெருவீதி உலா வருதல். #மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 5.45க்கு நற்கருணை ஆராதனை, இரவு 7 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா பொதுக்கூட்டம். #சடச்சிப்பதியில் மாலை 6 மணிக்கு பணிவிடை ஆகியன நடைபெறும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாளை(நவ.,18) ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாக ஜாக் கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார் நேற்று கூறினார். மேலும் பொதுக்குழு தீர்மானப்படி இன்று(17ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை காமராஜர் அரங்கில் புதிய சட்டங்களை அகற்ற கோரி, நடக்கும் கருத்தரங்கில் வக்கீல்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.

குமரி பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோயிலில் நவ.,13 அன்று மர்ம நபர்கள் கோயில் சிலைகளை கொள்ளையடித்தனர். இது குறித்து புதுக்கடை போலீசார் 4 தனிப்படை மூலமாக தேடுதல் நடத்தி வரும் நிலையில், கொள்ளையை கண்டித்து இந்து முன்னணியினர் 15-ம் தேதி கோயில் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினர் 230 பேர் மீது போலீசார் நேற்று(நவ.,16) வழக்குப் பதிந்துள்ளனர்.

பயணம் இளைஞர் மன்றம், சிஎஸ்ஐ ஹாக்கர் பள்ளி, ஸ்ரீ செண்பகா பள்ளி சார்பில் இன்று சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. தலைவர் பிரசாத் தலைமை வகித்தார். இதில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு, ” “தமிழகத்தில் ஆன்லைன் மோசடி ரூ.1500 கோடிக்கும் மேல் நடந்துள்ளது, ஆன்லைன் மூலம் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்கின்றனர். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.

1990 முதல் 1999ம் ஆண்டு வரையுள்ள கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை தொடர்பான வீடியோ காட்சி தரவுகள், புகைப்படங்கள், இருப்பின் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வழங்கலாம். மேலும் 9498042430 என்ற அலைபேசி எண், kkthiruvalluvangrail.com என்ற மின்னஞ்சல் மற்றும் 9488725580 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தரவுகளை அனுப்பலாம் என ஆட்சியர் அழகுமீனா இன்று கூறியுள்ளார்.

பேச்சிப்பாறை, சிற்றார் அணையில் இருந்து 8வது நாளாக இன்றும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் இன்றும் குளிக்க தடை நீடிக்கிறது. தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை காணப்படுகிறது. மேலும் திற்பரப்பு அணைக்கட்டு நிரம்பி வழிவதால் படகு சவாரியும் நடக்கவில்லை.

குமரி, கப்பியறை ஊராட்சியில் நேற்று(நவ.15) நடந்த “ஊட்டச்சத்தினை உறுதி செய்” திட்ட விரிவாக்க நிகழ்ச்சியின்போது ஆட்சியர் அழகு மீனா கூறியதாவது,”பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு 25 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து வைத்தால் அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வளர்க்கும் பக்குவமும் அவர்களுக்கு ஏற்படுவது இல்லை. எனவே 25 வயதுக்கு முன் திருமணம் செய்து வைக்க வேண்டாம்.” என்றார்.

இலங்கை அருகே நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவுக்குள் வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவிலும் மழை தொடரும் வங்கக் கடலின் கிழக்கு திசைக்காற்று குமரி மாவட்டத்தின் மத்திய வேலை தொடரில் மோதுவதால் மேற்குக் கடற்கரை நோக்கி நகரும் மேகங்களால் கனமழை கிடைக்க செய்ய உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நவ.16 நாளையும் நவ.17 ஆகிய இரண்டு தினங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. *பகிரவும்*

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் மிகவும் சேதமடைந்து உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை அடுத்து, களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை ₹ 14.88 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் அழகு மீனா இன்று (நவ. 15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.