Kanyakumari

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

image

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை (ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (திருப்பவும்)

News August 14, 2024

குமரியில் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி

image

தமிழ் வளர்ச்சித் துறையில் ஆண்டுதோறும் 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறிக் குழு உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசுக்குப் பரிந்துரைசெய்யப்படுவர் என ஆட்சியர் அழகுமீனா நேற்று(ஆக.,13) தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

குமரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.,14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT

News August 14, 2024

நாகர்கோவிலில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஆக.,16 அன்று காலை 10 மணிக்கு தனியார்துறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தகவலை ஆட்சியர் அழகு மீனா இன்று(ஆக.,14) தெரிவித்துள்ளார். SHARE IT.

News August 13, 2024

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்

image

கன்னியாகுமரியில் இருந்து நாளை மாலை 05.50 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் கன்னியாகுமரி விரைவுவண்டி எண் 12634 நாளை மறுநாள் சென்னை எழும்பூருக்கு செல்வதற்கு பதில் புறநகர் பகுதியான செங்கல்பட்டு சந்திப்போடு நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 13, 2024

குமரியில் மதுக்கடைகள் மூடல் – ஆட்சியர்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக FL1, FL2, FL3, FL3A, FL3AA, மற்றும் கூடங்கள் FL11 உரிமம் பெற்ற மதுபானக்கடைகள் ஆகியவை செயல்பட கூடாது என ஆட்சித்தலைவர் அழகு மீனா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

error: Content is protected !!