India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குளச்சல் ஆலஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கின்சிலின் பிரபு(40). சி.ஆர்.பி.எப் வீரர். இவரது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கின்சிலின் பிரபு மீது தாயாரே புகார் செய்தார். அதன் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கின்சிலின் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று சுதந்திரத் தினத்தையொட்டி இந்த வருடத்திற்கான தகைசால் தமிழர் விருதினை தமிழுக்கு தொண்டாற்றிய இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு வழங்கினார். இதுபற்றி குமரி MP விஜய் வசந்த் பதிவிட்டதாவது; விருது பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் மீண்டும் எனது நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து சென்னை கிளம்பாக்கம் செல்ல வழக்கமாக ரூ.700 முதல் ரூ.1200 வரை ஆம்னி பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது தொடர் விடுமுறை காரணமாக வரும் 18ஆம் தேதி வரை ஆம்னி பஸ்களில் ரூ.2000 முதல் ரூ.4000 வரை ஆம்னி பஸ்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு இதை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரத தேசத்தின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை விறுவிறுப்பாக கடந்த 10 நாட்களாக நடந்தது. இந்த ஆண்டு நேரில் மற்றும் இணைய தளங்கள் வாயிலாக குமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலங்கங்கள் மூலம் 4052 தேசிய கொடிகள் விற்பனையானதாக குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் 840 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 400 பேருந்துகள் மாவட்டத்திற்குள்ளும், அவற்றில் 320 பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். அந்தவகையில், இதுவரை மொத்தம் 35.76 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இன்று ( ஆக.15) காலை 9.05 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொள்கிறார். நிகழ்ச்சியில் பல்துறை அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர் .
கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் முன் வைக்கும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று (ஆக.14) மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் விருதுக்கு குமரி மாவட்ட பெண் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பார்வதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவர்
கடந்த 2004ஆம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT
Sorry, no posts matched your criteria.