Kanyakumari

News April 9, 2025

குமரிக்கு வருகை தரும் அமைச்சர் 

image

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஏப்.10ம் தேதி பிற்பகல் 4:30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி, பிளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளில் ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பல்வேறு சுகாதார நிலைய கட்டங்களையும் அரசு மருத்துவக் கல்லூரியில் நவீன கட்டண படுக்கை வார்டையும் திறந்து வைக்கிறார்.

News April 8, 2025

மும்பை – குமரி சிறப்பு ரயில் சேவை நாளை தொடக்கம்

image

மும்பை CSMT – கன்னியாகுமாரி இடையே (எண்: 01005) மும்பை CSMT – கன்னியாகுமாரி வாராந்திர சிறப்பு ரயில், 2025 ஏப்ரல் 09 முதல் 30 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 00.30 மணிக்கு மும்பை CSMT-யிலிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் பிற்பகல் 13.15 மணிக்கு கன்னியாகுமரியை வந்தடையும். கன்னியாகுமாரியிலிருந்து புறப்பட்டு, சனிக்கிழமைகளில் அதிகாலை 04.15 மணிக்கு மும்பை CSMT-யை அடையும்.

News April 8, 2025

குமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை வீசு கனிகாணும்நிகழ்ச்சி

image

குமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலையில் கோமாதா தரிசனமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்குதங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் மலையில்உள்ள கனிகள் கொண்டு வந்து மலைபோல் குவித்து வைத்து கொன்றைப்பூ அலங்காரத்துடன் கனி காணும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று பக்தர்களுக்கு கை நீட்டமும் வழங்கப்படுகிறது.

News April 8, 2025

ஆண்டு ஒன்றுக்கு 250 பேருக்கு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி

image

நாகர்கோவிலில் உள்ள ஐஆர்டி மூலம் ஆண்டு ஒன்றுக்கு 250 பேருக்கு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் ஐஆர்டி பயிற்சி மையம் மூலம் கரைக வாகன ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேருந்துகள் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 3 மாத காலம் அளிக்கப்படும் இந்த பயிற்சி மூலம் ஆண்டு ஒன்றுக்கு 250 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

News April 8, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்ட விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று (ஏப்.8 ) 30. 31 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.95 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.79 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.88 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 153 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 50 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News April 8, 2025

குமரியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிறுவனத்தில் சேவை ஆலோசகர், டெலிகாலர், ஆட்டோமேஷன் நிபுணர் உள்ளிட்ட பிரிவுகளில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் நிலையில் 18 – 59 வயதிற்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன்.4 க்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 8, 2025

விவசாயிகள் சாகுபடி செய்ய தென்னங்கன்றுகள் விற்பனை 

image

குமரி மாவட்டத்தில் சித்திரை 10 ஆம் தேதி அன்று பழச் செடிகள் மற்றும் தென்னங்கன்றுகள் நடவு செய்வது வழக்கம். இதனை முன்னிட்டு அனைத்து வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் தென்னங்கன்றுகள், மா மற்றும் பலா கன்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. எப்.17-ம் தேதிக்குள் பதிவு செய்து விவசாயிகள் இதனை பெற்றுக் கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜான் தெரிவித்துள்ளார். 

News April 8, 2025

மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பல்

image

நாகர்கோவில் கீழமறன் குடியிருப்பை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் என்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாட சென்ற இவரை 18 வயதிற்குட்பட்ட 4 பேர் கொண்ட கும்பல் பீர்பாட்டிலால் தலையில் அடித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் 4 பேரையும் போலீசார் தேடி வரும் நிலையில் முதற்கட்ட விசாரனையில் தோழியை கிண்டல் செய்ததால் தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளது.

News April 7, 2025

தோவாளை மலர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

image

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று (ஏப்.07) 1 கிலோ பிச்சி ரூ.1100, மல்லி ரூ.650, சம்பங்கி ரூ.200, அரளி ரூ.300, வாடாமல்லி ரூ.60, கிரேந்தி ரூ.70 கோழிக்கொண்டை ரூ.60, துளசி ரூ.30, பன்னீர் ரோஜா ரூ.140, மஞ்சள் செவ்வந்தி ரூ.220, வெள்ளை செவ்வந்தி ரூ.300, மரிக்கொழுந்து ரூ.70, தெத்தி ரூ.80 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

News April 7, 2025

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு

image

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை கோடைகால விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 13 – முதல் மே 4 வரை ஒரு மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த ரயில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்தும் (வ. எண்.06012), தாம்பரத்தில் இருந்து(வ. எண்.06011) திங்கட்கிழமையும் இயக்கப்பட உள்ளது. கோடை விடுமுறையில் இது சென்னை செல்வோருக்கு பயனுள்ளதாக அமையும்.

error: Content is protected !!