Kanyakumari

News September 6, 2024

குமரி ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு,  தற்போது வழங்கப்பட்டு வரும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக, திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்படு உள்ளன. இதன்படி, மொத்தம் 1200 பயனாளிகளுக்கு வழங்கப்படும் என இன்று குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

ஹிமசாகர் எக்ஸ்பிரஸ் – 7 மணி நேரம் தாமதம்

image

குமரியில் இருந்து ஹிமசாகருக்கு இன்று பகல் 2.15 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச்செல்ல வேண்டும். ஆனால் ரயில் கால தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று இரவு 9:30 மணிக்கு இந்த ரயில் குமரியில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக இந்த ரயில் தாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2024

குமரியில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர்கள் தத்தளிப்பு

image

கன்னியாகுமரி அருகே இன்று
(செப்.6) காலை நாட்டு படகில் மீன்பிடிக்கச்சென்ற கோவளத்தை சேர்ந்த 6 மீனவர்களும் சின்னமுட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களும் கரைக்கு திரும்பி வரும்போது
ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து தத்தளித்தனர். அவர்களை கடற்கரையில் நின்ற மற்ற மீனவர்கள் கடலில் குதித்து படகுகளையும் மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் எந்திரங்கள், வலைகள் சேதமடைந்தன. 

News September 6, 2024

குமரியில் டெர்மினல் ரயில் நிலையம் ஏற்படுத்த கோரிக்கை

image

கன்னியாகுமரிக்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.  கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ரயில் மற்றும் பேருந்துகளில் வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து முக்கிய ரயில்களும் கன்னியாகுமரியில் இருந்து செல்லும் வகையில் டெர்மினல் ரயில் நிலையமாக மாற்ற வேண்டும் எனபயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 6, 2024

குளச்சல் அருகே காதலி பிரிந்ததால் அரசு ஊழியர் தற்கொலை

image

அம்மாண்டிவிளையை சேர்ந்தவர் சுரேஷ் (38) இவர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் அந்த பெண் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சுரேஷ் அந்தப் பெண்ணின் வீட்டின் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News September 5, 2024

வயல்கள் வீட்டுமனைகளாக மாறுவது நிறுத்தப்படுமா ?

image

விளைநிலங்கள், விவசாயத்தை பாதுகாக்க கர்நாடகாவில் ஓராண்டிற்கு மேல் விவசாயம் செய்யாவிட்டால், அந்த நிலத்தை வேறு விவசாயிக்கு அரசே வழங்கிவிடும். கேர ளாவிலும் , விளைநிலங்களை பயிர் செய்யாமல் தரிசாக போட அனுமதியில்லை. ஆனால், குமரியில் தண்ணீர் தாராளமாக இருந்தும், இருபருவ மழை பெறும் நிலையிலும், சிலரின் பணத்தாசைக்காக வயல்களை வீட்டுமனைகளாக மாற்றி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

News September 5, 2024

பெட்டிக்கடையில் மதுவா?  8122930279 ல் புகார் கொடுங்கள்

image

குமரி மாவட்டத்தில் அனுமதி பெற்ற பார்களை தவிர மற்ற இடங்களில் பொரித்த சிக்கன், மீன் விற்பனை செய்யும் கடைகள் ஹோட்டல்கள், கடைகள், பெட்டி கடைகளில் மது குடிக்க அனுமதி இல்லை. அனுமதி பெறாத கடைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்படும், கடைகாரர்களுக்கு சிறை தண்டனை & அபராதம் விதிக்கப்படும். நீங்களும் வாட்ஸ்ஆப் எண் 8122930279 ல் புகார் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

News September 5, 2024

குமரி -கால்வாய்களை தூர்வார கேட்டு ஆட்சியரிடம் மனு

image

குமரி மாவட்டத்தில் பிரதான கால்வாய்கள், கிளை கால்வாய்கள் உட்பட அனைத்து கால்வாய்களும் தூர்வாராததால் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் இரண்டாம் போக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

News September 5, 2024

சர்ச் சுற்றுச்சுவர் உடைப்பு ; 39 பேர் மீது வழக்கு

image

அருமனை மணலி முரப்புவிளை எல்.எம்.எஸ் சர்ச், 1997ல் சி.எஸ்.ஐ சபைக்கு பரிசாக அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு தரப்பில் வழக்கு தொடரப்பட்டு கடந்த மாதம் எல்.எம்.எஸ் சபைக்கு சர்ச் சொந்தம் என தீர்பளிக்கப்பட்டு, எல்.எம் எஸ்.சபையிடம் ஒப்படைக்கப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு சர்ச் சுற்றுச்சுவரை ஒரு தரப்பு உடைத்ததை அடுத்து 39 பேர்மீது அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 5, 2024

பெட்டிக்கடையில் மதுவா?  8122930279 ல் புகார் கொடுங்கள்

image

குமரி மாவட்டத்தில் அனுமதி பெற்ற பார்களை தவிர மற்ற இடங்களில் பொரித்த சிக்கன், மீன் விற்பனை செய்யும் கடைகள் ஹோட்டல்கள், கடைகள், பெட்டி கடைகளில் மது குடிக்க அனுமதி இல்லை. அனுமதி பெறாத கடைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்படும், கடைகாரர்களுக்கு சிறை தண்டனை & அபராதம் விதிக்கப்படும். நீங்களும் வாட்ஸ்ஆப் எண் 8122930279 ல் புகார் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

error: Content is protected !!