Kanyakumari

News September 7, 2024

டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது

image

குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையை தொடர்ந்து பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவியது. இதனால் பாதிக்கப்பட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டெங்கு காய்ச்சல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 7, 2024

தொழிற்பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து படிவம் தரவிறக்கி,பூர்த்தி செய்து கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு 04652-264463, 9443579558 தொடர்பு கொள்ளலாம்.

News September 7, 2024

குமரி அணைகளில்  இன்றைய நீர் இருப்பு

image

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில்  இன்றைய நீர் இருப்பு விவரம். 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 13.64 மற்றும் 13.74 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 43.93 அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட  பெருஞ்சாணியில் 68.49அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில்  23.2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15 அடி நீரும் இருப்பு உள்ளது.

News September 7, 2024

சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி பெற மேல் முறையீடு 

image

கூட்டுறவு நிறுவனங்களில் கடன் வழங்கப்பட்டு 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டது. சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி  பட்டியலில் இடம் பெறாதவர்கள் செப். 25 க்குள்  மேல்முறையீட்டு மனுவை  நாகர்கோவில், தக்கலை துணைபதிவாளர் அலுவலகத்தில்  சமர்பிக்கலாம். அவை ஆராய்ந்து சான்றிதழ் வழங்கப்படும் என கூட்டுறவு இணைபதிவாளர்  சிவகாமி தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

விநாயகர் சதுர்த்தி விழா விஜய் வசந்த் எம் பி வாழ்த்து

image

விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,“அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்; விக்ன விநாயகப் பெருமான் எல்லாத் தடைகளையும் நீக்கி வரங்களைத் தருவாராக;  உங்கள் துன்பங்கள் எல்லாம் விலகி வாழ்வில் வெற்றி பெருக வாழ்த்துகிறேன்; மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி உங்கள் இல்லங்களில் நிறைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

News September 6, 2024

நெல்லை சரக டி.ஐ.ஜி அறிக்கை வெளியீடு

image

நெல்லை சரக டிஐஜி மூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வல பாதுகாப்பு அலுவலில் பணியாற்றுவது சம்மந்தமாகவும், பாதுகாப்பு திட்ட அலுவல் சம்மந்தமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவண்ணம் அமைதியான முறையில் ஊர்வலங்கள் நடத்திட தேவையான விரிவான அறிவுரைகள் நான்கு மாவட்ட எஸ்பி களுக்கு வழங்கப்பட்டது” என கூறியுள்ளார்

News September 6, 2024

பாஜகவை மக்கள் ஏற்கமாட்டார்கள் – அமைச்சர் 

image

அதிமுக இணக்கமாக வந்தால் மகிழ்ச்சி என்ற நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பதில் அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், இதில் அவருக்கு மகிழ்ச்சி ஒண்ணு இருக்கு ஆனால் மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சி இருக்குது அதைப்பற்றி அவர் பேசவில்லை. மோடி அரசாங்கத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த மக்களும் மகிழ்ச்சியா இல்லை பாஜகவும் பாஜக அணிகள் வலுவாவதையும் இங்கிருக்கும் மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றும் பதிலளித்தார்.

News September 6, 2024

நெல்லை சரக டி.ஐ.ஜி அறிக்கை வெளியீடு

image

நெல்லை சரக டிஐஜி மூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வல பாதுகாப்பு அலுவலில் பணியாற்றுவது சம்மந்தமாகவும், பாதுகாப்பு திட்ட அலுவல் சம்மந்தமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவண்ணம் அமைதியான முறையில் ஊர்வலங்கள் நடத்திட தேவையான விரிவான அறிவுரைகள் நான்கு மாவட்ட எஸ்பி களுக்கு வழங்கப்பட்டது” என கூறியுள்ளார்

News September 6, 2024

பட்டா வழங்க உறுதி அளித்த அமைச்சர்

image

கடையல் பேரூராட்சிக்குட்பட்ட ஆம்பாடி , சிற்றார் அணை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று (செப்.6) தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அதனை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின் அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

News September 6, 2024

குமரி ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு,  தற்போது வழங்கப்பட்டு வரும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக, திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்படு உள்ளன. இதன்படி, மொத்தம் 1200 பயனாளிகளுக்கு வழங்கப்படும் என இன்று குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!