India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் காண்ட்ராக்டர் ஈஸ்வரனை அரிவாளால் வெட்டிய வழக்கில் பழனியாச்சி உட்பட இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பழனியாச்சியின் மகன் மாரியப்பன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரை வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் வேலூர் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

குமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின்போது ஒரு பெண் மனு கொடுத்தார். அவர் தன்னுடைய மகனை அழைத்து வந்திருந்த நிலையில், நீங்கள் மட்டும் வந்தால் போதும், பிள்ளைகளை அழைத்து வராதீர்கள் என எஸ்பி அறிவுரை கூறி கண்டித்தார். தொடர்ந்து அவர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்கள் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

#கொல்லமாவடி முத்தாரம்மன் கோவிலில் காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம். 12 மணிக்கு அபிஷேகம். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை. #நாகர்கோவில் என்.,கே.ஆர். மகாலில் காலை 10 மணிக்கு அ.தி.மு.க கள ஆய்வுக்கூட்டம். #கிண்ணிக்கண்ணன் விளை சடச்சிப்பதியில் மாலை 6 மணி பணிவிடை. #மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் பேராலயத்தில் மாலை 5 மணிக்கு திருப்பலி. இரவு 7.30 மணிக்கு ஆண்டுவிழா பொதுக்கூட்டம் ஆகியன நடைபெறும்.

#காலை 10 மணிக்கு திருவிதாங்கோடு சந்திப்பில் பழுதடைந்த சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்காததை கண்டித்து CPIML லிபரேசன் கட்சி சார்பில் சாலை மறியல். #வீட்டு வரி உயர்வை கண்டித்து காங்., கட்சி பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம். #காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காணாமல்போன கடியப்பட்டணம் மீனவர்களை கண்டுபிடித்து தர கேட்டு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்.

#காலை 10 மணிக்கு ஒழுகினசேரி திருமண மண்டபத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம். #வழக்கறிஞர் கண்ணன் படுகொலையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு. #மாலையில் நாகர்கோவில் நாகராஜா திடல் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மாநாடு. அமைச்சர் ராஜகண்ணப்பன், செல்வப் பெருந்தகை பங்கேற்பு.

திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்வது நல்லது. SHARE IT.

சென்னையில் தென்னக ரயில்வேயில் பொது மேலாளர் மற்றும் முதன்மை செயல் மேலாளர் ஆகியோரை நேற்று (நவ. 20) கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் சேவை வேண்டும் மற்றும் நாகர்கோவில் திருவனந்தபுரம் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நாளை (நவ.21) காலை 8.30 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் 10 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இணைப்பு கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, வார்டு நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூராட்சி, ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தளவாய் சுந்தரம் எம்எல்ஏ இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் குமரி உட்பட நாகை, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.