India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வட்டார வேளாண் விரிவாக்கம் மையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருட்கள் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன் நேற்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் இதர இடுப்பொருட்கள் ஆகியன வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இறச்சகுளம் பகுதியில் காட்டுப் பன்றிகளை வேட்டையாட வெடி மருந்துகளுடன் சென்ற ராபின்சன் என்பவர் வெடி வெடித்து உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அவருக்கு வெடி சப்ளை செய்த சுரேஷ்குமார் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை செய்த போது இரணியல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு அதை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் அந்த நபரை பிடிக்க போலீசார் முயன்று வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 13.45மற்றும் 13.54அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 44அடி நீரும்,77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 67.72அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் 22.8 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில்14.9 அடி நீரும் இருப்பு உள்ளது.
குமரியில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெருஞ்சாணியில் 1.4, புத்தன் அணையில் 1, முள்ளங்கினாவிளையில் 14.4 மீ மழையும் பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு உள் வரத்தாக 542 கன நீர் வருகிறது. 498 கன அடி நீர் வெளியேறப்படுகிறது. பெருஞ்சாணிக்கு 186 கன அடி நீர் வரும் வேளையில் 410 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறுக்கு 127 கன அடி நீர் வரும் வேளையில் 150 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது
கொல்லம் சென்னை அனந்தபுரி அதிவிரைவு வண்டியில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மூன்று தான் உள்ளன. இதனால் பொதுமக்கள் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் படிக்கட்டு வரையும் கூட்ட நெரிசலில் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, எஞ்சின் அருகில் இரண்டு பெட்டிகளும், கடைசி இரண்டு பெட்டிகளும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 2024-ம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை 8 மாதத்தில் ரூ.51 ஆயிரம் மதிப்பிலான ரெயில்வே பொருட்களை திருடியதாக மாற்றுத்திறனாளி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக ரெயில்வே போலீசார் நேற்று தெரிவித்தனர். இதன்மூலம் கடந்த இரண்டரை ஆண்டில் ரெயில்வே பொருட்களை திருடியதாக 21 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.1லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நாகர்கோவில் திலகர் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி ராஜா மணி(45) – நீலா(43) மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று(செப்.,9) காலை வீட்டின் பின்புறம் உள்ள தகர ஷெட்டில் உடைகளை உலர்த்த சென்றபோது நீலாவை மின்சாரம் தாக்கியுள்ளது. சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த ராஜா மணியும் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குமாரபுரம் திட்டப்பகுதியில் 288 அடுக்குமாடி குடியிருப்புகளும் மற்றும் அழகப்பபுரம் அருகே உள்ள புதுக்குளம் திட்டப்பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. குமாரபுரம் குடியிருப்புக்கு ரூ.2.11,458/- ம் புதுக்குளம் குடியிருப்புக்கு ஒரு லட்சத்து 1563ரூபாய் பங்களிப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று ஆட்சியர்அழகு மீனா தெரிவித்துள்ளார்
கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த 2நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் இன்று(செப்.10) காலையிலேயே சாரல் மழை பெய்ததால் கடற்கரை மற்றும் சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இறச்சகுளம் அருகே காட்டுப்பன்றிக்கு வெடி வைப்பதற்காக சென்ற ராபின்சன் என்பவர் வெடி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரணையில், வெடி பொருளை ராபின்சனிடம் கொண்டு கொடுத்தது மற்றும் ராபின்சனை வெடி வைப்பதற்கு அழைத்தது என இரண்டு நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அஜித் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.