India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2009 ஆம் ஆண்டு ஆழ்கடலில் ஏற்பட்ட பியான் புயலில் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் இறந்து போயினர். இவர்களது குடும்பத்திற்கு 2017 ஆம் ஆண்டு ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கு வழங்கப்பட்டது போல 20 லட்சம் ரூபாய், நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று மாவட்ட ஆட்சியரிடம் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி தலைமையில், மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்தனர்.
குமாரகோவில் அருகே உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் இன்று (ஆகஸ்ட் – 23 ) நடைபெற்ற தேசிய விண்வெளி நாள் (National Space Day) நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் (இ.கா.ப) கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். மேலும், பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
குமரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஒழுகினசேரி குமரி மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட்-23) இரவு நடைபெற்றது. நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மேயருமான மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
வீயன்னுரை சார்ந்த தொழிலதிபர் மோகன்தாசின் வீட்டில் கடந்த மாதம் 75 பவுன் நகை திருடப்பட்டது. திருடர்களை பிடிக்க 4 க்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள், தொடர்புடைய 300 சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து கொள்ளையர்கள் வெளிமாநிலத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, தெலுங்கானாவில் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்களை நேற்று கைது செய்து ரயில் மூலம் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்ட திமுக தொழிலாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு கிரிக்கெட் போட்டி இம்மாதம் 24, 25, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அருள்ஞானபுரம் என்ற இடத்தில் நடைபெறுகிறது. போட்டியில் முதல் பரிசாக 12 ஆயிரம் ரூபாயும், 2 ஆம் பரிசாக 8000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற் கோப்பையும் வழங்கப்படுகிறது.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்த பெண் காவலர். இவர் 2003 ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஒரு சில மாதங்களாக மன நோய் பாதிப்பு காரணமாக விடுப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று மினி என்பவர் இன்று கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதிலுள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்கினார். உடன், துணை இயக்குநர் மரு.மீனாட்சி, மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
நவராத்திரி விற்பனை கண்காட்சி சென்னையில் நடைபெற இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க 28.08.2024 -க்குள் <
குமரி மாவட்ட சுகாதார அலுவலகத்திற்குட்பட்ட NRHM திட்டத்தின் கீழ் உள்ள ஒரு நகர்புற சுகாதார செவிலியர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலமாக தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. தொகுப்பூதியம் ரூ.14,000/- அனைத்து விவரங்களும் www.kanniyakumari.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 06.09.2024 என ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் சாமி தலைமை பகுதியில் இன்று(ஆக.23) ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் 11 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவில் 11வது நாள் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் என பதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.