India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுவதாக கூறி பலர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, விதிகளை மீறி கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் குமரி மாவட்ட நிர்வாகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அப்போதைய குமரி ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கு சில இடங்கள் காலியாக உள்ளன.12ம் வகுப்பு சிறப்பு பொது துணைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இளநிலை பாடப்பிரிவில் ஆங்கிலம், வரலாறு, தமிழ் உட்பட 11 பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் பிசி, எம்பிசி, எஸ்.சி., எஸ்.டி.பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் பிரகாசி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி வழக்கறிஞர் சரவணராஜ் கொலையைக் கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜாக்) நாளை (ஆக.23) நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜாக்) தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எல். முருகன் நாளை 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் அமிர்தா பல்கலைக்கழக வளாக திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி செல்லும் அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார்.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்தவர் கலைஞர் (46). செண்டை மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் ஊட்டுவாழ்மடம் பகுதியில் நடந்து சென்றபோது, வடிவீஸ்வரத்தை சேர்ந்த ரவுடி சபரீஸ் (29) கலைஞரை தடுத்து நிறுத்தி கன்னத்தில் அடித்து பாக்கெட்டில் இருந்த 220 ரூபாயை எடுத்ததுடன் அவரை அரிவாளால் வெட்டினாராம். இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மேற்கண்ட இன மக்களை 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து நவீனமுறை சலவையகங்கள் அமைக்க வழிவகை செய்யப்படுகிறது. அதனப்படி இக்குழுவிற்கு நவீனமுறை சலவையகங்கள் அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 இலட்சம் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளதாக ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று (ஆக.21) திட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆட்சியர் ஆர். அழகுமீனா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஒரு சிறுமிக்கு அவர் காலை தாயன்புடன் காலை உணவை ஊட்டி விட்டார். குழந்தையும் மகிழ்ச்சியுடன் உணவை உண்டது.
நாகர்கோவில் புகைப்படக்காரர் ஜாக்சன் ஹெர்பி எடுத்த இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதில் முக்கிய பங்களிப்பினை ஆற்றிய கன்னியாகுமரி டி.எஸ். பி. மகேஷ் குமார், சுசீந்திரம் காவல் ஆய்வாளர் ஆதம் அலி மற்றும் உதவி ஆய்வாளர்கள் மோகன ஐயர், .ஆறுமுகம், .ரகு பாலாஜி, மற்றும் தனிப்படை போலீசாரை எஸ்.பி. சுந்தரவதனம் பாராட்டி இன்று சான்றிதழ் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மக்களி குறைதீர் முகாம் நடைபெறும். அதன்படி, இன்று புதன்கிழமையை யொட்டி பொது மக்களிடம் எஸ் பி சுந்தர வதனம் நேரடியாக குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
“குழந்தைகளுக்கு குடும்ப உறுப்பினர்களாலோ படிக்கும் இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ, பாலியல் ரீதியான துன்புறுத்தல் பற்றி தெரிய வந்தால் அதனை மறைக்காமல் உடனே காவல் நிலையத்தை அணுக வேண்டும்” என மாவட்ட காவல்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகார் அளிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.