Kanyakumari

News August 25, 2024

இறையும்மன் துறையில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி

image

குமரி மாவட்டத்தில் இரையுமன்துறையில் மீனவர்கள் தொழில் செய்வதற்கு வசதியாக மீன் இறங்கு தளம் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி அவர் அறிவுறுத்தினார் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கலந்து கொண்டார்.

News August 25, 2024

விஜய் வசந்த் எம்.பி-க்கு நன்றி தெரிவித்த மக்கள்

image

“குமரி மாவட்டத்தில் வாணியக்குடி மீனவர் கிராமத்தில் துறைமுகப் பணியை உடனே தொடங்க வேண்டும்” என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்தப் பணியை தொடங்கினால் மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய விஜய் வசந்துக்கு ஊர் மக்கள் சார்பில் நேற்று சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

News August 25, 2024

பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்

image

திங்கள்சந்தை தேர்வு நிலை பேரூராட்சி  தலைவர்  சுமன். இவர் நேற்று திங்கள்சந்தை பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தபோது கோணங்காடு மினி பஸ் உரிமையாளர் அருள்ராஜ்(59) உட்பட 3 பேர் அங்குவந்து, “பஸ் நிலையத்தில் வரும் மினி பஸ்சுக்கு இடையூறு செய்தால் உன்னை பஸ் ஏற்றி கொலை  செய்து  விடுவேன்” என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 25, 2024

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி முன்பதிவு நீட்டிப்பு

image

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் நாளை வரை முன்பதிவு செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை மேலும் ஒரு வாரங்களுக்கு அதாவது வரும் 02.9.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News August 25, 2024

மகளிர் காவலர் கொலை செய்யப்படவில்லை

image

மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட மினி கொலை செய்யப்பட்டதாக வந்த செய்தி உண்மைக்கு மாறானது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தங்கை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 24, 2024

தக்கலை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துமிடம் மாற்றம்

image

தக்கலை பேருந்து நிலையம் புனரமைப்பு பணி வருகிற 26 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதனால் அரசு பேருந்துகள் நிறுத்தும் இடம் மற்றும் வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மார்த்தாண்டம் செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடம் தக்கலை டாக்ஸி ஸ்டாண்ட், நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் தபால் நிலையம் முன்பு நின்று செல்லும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

News August 24, 2024

உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்

image

கன்னியாகுமரி கீழரத வீதியில் உள்ள 6 உணவகம், பேக்கரி, கடைகளில் இன்று (ஆக.24) அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கெட்டுப்போன இறைச்சிகள் உட்பட 15 கிலோ உணவு பொருட்கள், அழுகிய 10 கிலோ காய்கறிகள், 5 கிலோ கலர் அப்பளம், 2 கிலோ ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஆகியன பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 5 கடைகளுக்கு ரூ.7000 அபராதம் விதிக்கப்பட்டது.

News August 24, 2024

அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பி கைது

image

புதுக்கடை அருகே பனங்காலமுக்கு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் சூரியா(23), இவரது தம்பி ஆனந்த் (20). இவர்கள் இருவருக்கும் இன்று வீட்டின் முன்பு மது போதையில் ஏற்பட்ட வாய் தகராறில் ஆனந்த் தனது கையில் வைத்திருந்த வெட்டுக்கத்தியால் தனது அண்ணன் சூரியாவின் தலையில் வெட்டினார். இதில் சூரியா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். புதுக்கடை போலீசார் சூரியாவின் உடலை மீட்டு ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 24, 2024

புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

” ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” விருதை (PMRBP) மத்திய அரசு வழங்கி வருகிறது. 2025ஆம் ஆண்டிற்கான விருது பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரைப்படி 31.08.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு குமரி ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 24, 2024

திற்பரப்பு அருவியில் குளிக்க 6வது நாளாக தடை

image

பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் பெருக்குக்கெடுத்து ஓடுவதால் 6வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையில் திற்பரப்புக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அருவி முன்பு குளிக்க தடை என்ற பேரூராட்சியின் அறிவிப்பை பார்த்து ஏமாற்றமுடன் திரும்பிச் சென்றனர்.

error: Content is protected !!