India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்த பெண் காவலர். இவர் 2003 ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஒரு சில மாதங்களாக மன நோய் பாதிப்பு காரணமாக விடுப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று மினி என்பவர் இன்று கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதிலுள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்கினார். உடன், துணை இயக்குநர் மரு.மீனாட்சி, மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
நவராத்திரி விற்பனை கண்காட்சி சென்னையில் நடைபெற இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க 28.08.2024 -க்குள் <
குமரி மாவட்ட சுகாதார அலுவலகத்திற்குட்பட்ட NRHM திட்டத்தின் கீழ் உள்ள ஒரு நகர்புற சுகாதார செவிலியர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலமாக தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. தொகுப்பூதியம் ரூ.14,000/- அனைத்து விவரங்களும் www.kanniyakumari.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 06.09.2024 என ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் சாமி தலைமை பகுதியில் இன்று(ஆக.23) ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் 11 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவில் 11வது நாள் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் என பதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய குடற்புழு நீக்க தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வருடம் இன்று முதல் 1 வயது முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதிலுள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார்.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் அஸ்வதி பொங்கல் விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று மதியம் உச்சபூஜை, மாலை சுமங்கலி பூஜை, நாளை(ஆக.24) காலை 5001 பொங்கல் வழிபாடு, மதியம் அன்னதானம் ஆகியன நடக்கிறது. தொடர்ந்து 25ஆம் தேதி மாலை திருவிளக்குபூஜை, தங்கரதம் பவனி, பரிசளிப்பு விழா ஆகியன நடக்கிறது. விழாவுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் கோயிலுக்கு இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அமிர்தா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த இந்தியா பொருளாதாரத்தில் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் 2027 ஆம் ஆண்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்றும் கூறினார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் எப். எம். ராஜரத்தினம் தலைமையில் நடைபெற இருப்பதாக மாவட்ட செயலாளர் மகேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.