India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று(ஆக.26) சிராயன்குழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது லாரியில் சிறு, சிறு மூடைகளில் மொத்தம் 4½ டன் ரேஷன் அரிசியை பதுக்கி கேரளாவுக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்ன்ர் லாரியுடன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் அருமனை அனி(28) கைது செய்யப்பட்டார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆன்மிக சமய வகுப்பு மாணவர்களுக்கிடைய நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் பரிசுகல் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி, மராமத்து பொறியாளர் ஐயப்பன், கோயில் மேலாளர் செந்தில்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள
பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம்
உள்ளது. இந்த மண்டபத்தை கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களில் மட்டும்
19 ஆயிரத்து 804 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர். கடந்த 24 ஆம் தேதி 5977 பேரும், 25 ஆம் தேதி 8051பேரும் இன்று 5776 பேரும் பார்வையிட்டு
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விளவங்கோடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி இன்று பேட்டியளித்துள்ளார். அதில், “இந்த தேர்தலில் எனக்கு எம்.பி சீட் கிடைத்தது. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் பிடிவாதமாக இருந்ததால் அவருக்காக விட்டுக்கொடுத்தேன். மேலும், காங்கிரஸில் நடிகர் விஜய் பொறுப்பு கேட்டார். அதை மறுத்த ராகுல் காந்தி விஜயை தனி கட்சி தொடங்க கூறனார். அதன்படியே விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்” என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 1982 ஆம் ஆண்டு வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிரிகள் போன்ற சமுதாய விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டது தான் குண்டர் தடுப்புச் சட்டம். இச்சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை குமரி மாவட்டத்தில் 37 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். குற்றவாளிகள் பெருகிக்கொண்டிருப்பது வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 பைபர் படகுகளில் குமரி மாவட்ட மீவனவர்கள் ஆழ்கடலில் நேற்று (ஆக. 25) மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அருகில் உள்ள கேரள விழிஞ்ஞம் மீன்பிடி துறைமுகத்தில் விற்கச் சென்றபோது, ஞாயிற்றுக் கிழமை விற்க அனுமதி இல்லை எனக்கூறி கேரள மீனவர்கள் அவற்றை அபகரித்து ரூ.5 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை கொடுக்காமல் படகுகளை சிறைபிடித்து மீனவர்களை திருப்பி அனுப்பினர்.
செறுவல்லூர் பகுதியில் அதிகமாக புகையிலை பொருள் விற்பனை நடைபெறுவதாக பளுகல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள ஒரு கடையை போலீசார் சோதனை செய்தபோது அதில் சாக்கு மூட்டையில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கடையில் இருந்த அதே பகுதியை சேர்ந்த சுசீலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இன்று “சந்திரயான் 3 நிலவின் மேற்பரப்பை தொட்ட நாள், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான ஸ்திரத்தன்மையை இந்தியா நிறுவிய நாள்” தலைப்பில்
சந்திரயான் 1, மங்கல்யான் 1 செயற்கைக்கோள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை இணைய வழியில் இளம் விஞ்ஞானிகளுடன் உரையாற்றினார். அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் கலந்து கொண்டார்.
பனங்கால முக்கு பகுதியை சேர்ந்த சூர்யா, அவரது தம்பி ஆனந்த் ஆகிய இருவரும் மரம் வெட்டும் வேலை செய்து வந்தனர். மதுபோதையில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் நேற்று சூர்யாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதைத் தொடர்ந்து ஆனந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சூர்யா குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதால் அவரை கொலை செய்ததாக ஆனந்த் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
கீழ ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜோசப் சிங் (34). இவரை நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன. இவரையும் சேர்த்து மாவட்டத்தில் இதுவரையிலும் குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.