India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 பைபர் படகுகளில் குமரி மாவட்ட மீவனவர்கள் ஆழ்கடலில் நேற்று (ஆக. 25) மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அருகில் உள்ள கேரள விழிஞ்ஞம் மீன்பிடி துறைமுகத்தில் விற்கச் சென்றபோது, ஞாயிற்றுக் கிழமை விற்க அனுமதி இல்லை எனக்கூறி கேரள மீனவர்கள் அவற்றை அபகரித்து ரூ.5 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை கொடுக்காமல் படகுகளை சிறைபிடித்து மீனவர்களை திருப்பி அனுப்பினர்.
செறுவல்லூர் பகுதியில் அதிகமாக புகையிலை பொருள் விற்பனை நடைபெறுவதாக பளுகல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள ஒரு கடையை போலீசார் சோதனை செய்தபோது அதில் சாக்கு மூட்டையில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கடையில் இருந்த அதே பகுதியை சேர்ந்த சுசீலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இன்று “சந்திரயான் 3 நிலவின் மேற்பரப்பை தொட்ட நாள், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான ஸ்திரத்தன்மையை இந்தியா நிறுவிய நாள்” தலைப்பில்
சந்திரயான் 1, மங்கல்யான் 1 செயற்கைக்கோள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை இணைய வழியில் இளம் விஞ்ஞானிகளுடன் உரையாற்றினார். அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் கலந்து கொண்டார்.
பனங்கால முக்கு பகுதியை சேர்ந்த சூர்யா, அவரது தம்பி ஆனந்த் ஆகிய இருவரும் மரம் வெட்டும் வேலை செய்து வந்தனர். மதுபோதையில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் நேற்று சூர்யாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதைத் தொடர்ந்து ஆனந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சூர்யா குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதால் அவரை கொலை செய்ததாக ஆனந்த் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
கீழ ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜோசப் சிங் (34). இவரை நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன. இவரையும் சேர்த்து மாவட்டத்தில் இதுவரையிலும் குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் இரையுமன்துறையில் மீனவர்கள் தொழில் செய்வதற்கு வசதியாக மீன் இறங்கு தளம் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி அவர் அறிவுறுத்தினார் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கலந்து கொண்டார்.
“குமரி மாவட்டத்தில் வாணியக்குடி மீனவர் கிராமத்தில் துறைமுகப் பணியை உடனே தொடங்க வேண்டும்” என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்தப் பணியை தொடங்கினால் மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய விஜய் வசந்துக்கு ஊர் மக்கள் சார்பில் நேற்று சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
திங்கள்சந்தை தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சுமன். இவர் நேற்று திங்கள்சந்தை பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தபோது கோணங்காடு மினி பஸ் உரிமையாளர் அருள்ராஜ்(59) உட்பட 3 பேர் அங்குவந்து, “பஸ் நிலையத்தில் வரும் மினி பஸ்சுக்கு இடையூறு செய்தால் உன்னை பஸ் ஏற்றி கொலை செய்து விடுவேன்” என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் நாளை வரை முன்பதிவு செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை மேலும் ஒரு வாரங்களுக்கு அதாவது வரும் 02.9.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட மினி கொலை செய்யப்பட்டதாக வந்த செய்தி உண்மைக்கு மாறானது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தங்கை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.