India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக தேசிய விளையாட்டு தின விழா நடைபெற உள்ளது. இதில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண், பெண் கால்பந்து விளையாட்டு, 100 மீ ஓட்டப்பந்தயம், 25 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண், பெண் கையுந்து பந்து விளையாட்டு, 100மீ ஓட்டப்பந்தயம், 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் 100 மீ ஓட்டப்பந்தயம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நாளை(ஆக.29) காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.
சென்னையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் விஜய் தரணி பேசும் போது ஆறு மாதமாக பதவி எதுவும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார். இது குறித்து மார்த்தாண்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜகா வில் இணைந்து தவறை விஜயதரணி தற்போது தான் உணர்ந்துள்ளார். மரத்தின் இலைகளை பார்த்து ஆடு செல்வது போல் சென்றால் இப்படி அனுபவிக்க வேண்டியது தான் என குறிப்பிட்டார்.
குமரி மாவட்டத்தில் இருந்து அனுமதி இன்றி கேரளாவிற்கு கனிம வளங்களை கடத்தி செல்கின்றனர். குமரி மாவட்டம் குவாரி அதிபர்களின் கையில் சிக்கி உள்ளது. தனது தொகுதி வழியாக அதிக பாரம் ஏற்றி கனிம வளங்களை கடத்தும் லாரிகளை கண்டால் சிறை பிடித்து மறியல் போராட்டம் நடத்துவேன் என விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை கத்பட் அறிவித்துள்ளார்.
நாகர்கோவில் – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்படும் ரயில் பகல் 1:50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும், மறுமார்க்கமாக நாகர்கோவிலில் பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு எழும்பூர் சென்றடையும். புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும்.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரயில் தினசரி இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வந்தே பாரத் ரெயில் இம்மாத இறுதியில் துவக்கி வைக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் இயக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரயில் பயணிகளுக்கு மிகுந்த வசதி உள்ளதாக இருக்கும் என்று ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி, சுசீந்திரம், பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிபாலம், திற்பரப்புஅருவி, பேச்சிப்பாறை போன்ற சுற்றுலா இடங்களுக்கு பொதுமக்களின் வேண்டுகோளின்படி அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 50 பயணிகள் முன்பதிவு செய்தால் அவர்களின் ஊரில் இருந்தே பஸ்கள் இயக்கப்படும். தொடர்புக்கு நாகர்கோவில் – 9487599085, வணிகம் – 9487599085, குமரி – 9487599087 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் பத்மநாபபுரம் ஆர்டிஓ அலுவலக கூட்ட அரங்கில் நாளை (ஆக.28) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விலவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என பத்மநாபபுரம் ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி அணை பகுதியில் 4.2 மில்லி மீட்டரும் நாகர்கோவிலில் 1.2 மில்லி மீட்டரும் சுருளோட்டில் 1.6 மி.மீட்டரும் பூதப்பாண்டியில் 2.4 மில்லி மீட்டரும் புத்தன் அணைப்பகுதியில் 3.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது பேச்சிப்பாறை அணைக்கு 575 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 351 கன அடி தண்ணீரும் சிற்றாறு ஒன்று அணைக்கு 127 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
குமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “அதிமுக ஆட்சியில்தான் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரியில் ரூ.8 கோடி செலவில் 2 நவீன படகுகள் வாங்கப்பட்டன. கன்னியாகுமரியில் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அணை திறந்து 3 மாதமாகியும் அஞ்சுகிராமம் வரை கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை” என்றார்.
விளவங்கோடு MLA தாரகை கத்பட் நேற்று(ஆக.,26) கூறியதாவது, “மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான டாரஸ் லாரிகளில் இரவு பகலாக கனிம வளம் கடத்தப்படுகிறது. அனுமதி இல்லாமல் செல்லும் இந்த லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. மார்த்தாண்டத்தில் போட்டிபோட்ட லாரிகளால் விபத்து ஏற்பட்டது. மார்த்தாண்டம் வழியாக கனிமவளம் கடத்திச்செல்லப்படும் லாரிகள் சிறைபிடிக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.