India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்ட அரங்கில் வருகிற 30.08.2024 அன்று முற்பகல் 10.30 மணிக்கு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கை மனுக்களை மீனவர்கள் கூட்டத்தில் கொடுக்கும்படி ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவை நேரில் சந்தித்து பேரூராட்சிகளில் செய்யப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மனு அளித்து விவாதித்தனர். இந்த நிகழ்ச்சியில் வாள்வச்ச கோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜான் டென்சிங் உட்பட பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை
சேர்ந்தவர் கோபாலகிருஷ்ண (61). சாமியாரான இவர் உலக நன்மைக்காக வேண்டி கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இவர் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டு 1157 நாட்கள் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து இன்று(ஆக.28) கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் அவைகளை கரைப்பது போன்றவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கலந்து கொண்டார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை(ஆக.,29) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து அல்போன்சா பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், மாலை பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார்.
குமரி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் வாக்காளர் பட்டியல் வீடு வீடாக சென்று சரிபார்த்தல் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் இன்று(ஆக.,28) நடைபெற்றது. கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
106 மாத போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 19 பெண்கள் உட்பட 207 பேர் மீது ஆசாரிபள்ளம் போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவிலில் மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி அங்கு படிக்கும் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் போலீசார் நேற்று போக்சோ உட்பட 4 பிரிவுகளின் கீழ் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில், “பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதை நம்பி விஜயதரணி பா.ஜவில் சேர்ந்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். அதை எண்ணி வருந்தி பொதுவெளியில் தனது ஆதங்கத்தை கொட்டி உள்ளார். பா.ஜ.வின் உண்மையான முகத்தை உணர்ந்து காங்கிரசில் மீண்டும் விஜயதரணி சேர வேண்டும். மறப்போம் மன்னிப்போம்” என குறிப்பிட்டுள்ளனர்.
SMRVஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான நேரடிச் சேர்க்கை ஆக.17 முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் ஆக.31 க்குள் விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.