India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17ஆம் தேதி முதல் அக்.,2ஆம் தேதி வரை கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள நீர், சுகாதாரம், குப்பை அகற்றுதல், நெகிழி மேலாண்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய மக்களின் பங்கேற்புடன் கூடிய “தூய்மையே சேவை எனும் மாபெரும் சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (செப்.15) தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது, கீழ்த்தரமான செயல்; பாஜகவின் ஆணவத்தை இதன்மூலம் வெளி உலகத்திற்கு இது காட்டுகிறது; மோடி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கரையை ஏற்படுத்துவதாக நிர்மலா சீதாராமன் செயல் உள்ளது; இந்திய மக்களிடம் குறிப்பாக தமிழக மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என் தாரகை கத்பட் எம்எல்ஏ அறிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக மீனவர் அணி இணைச் செயலாளர் பசலியான் இன்று (செப்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக மீனவர்கள் கைது விசைப்படகு பறிமுதல் என இலங்கை தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியா இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கூறியுள்ளார். இது போன்ற பேச்சுவார்த்தை 2010ல் துவங்கியது என்றும் அதில் அவர் கூறியுள்ளார்.
தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,100 மெகாவாட் திறனில் தக்கலை அருகே வேளிமலை நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு அனுமதி பணிகளை மேற்கொள்ள தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது என அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்து இன்வெட்டர் பாக்ஸில் பதுங்கியுள்ளது. அவர் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு 5-அடி நீள கட்டு விரியன் வகை என கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து பாம்பை லாவகமாக பிடித்த வீரர்கள் பாம்பை சாக்கு மூட்டையில் அடைத்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர்.
அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட 45 தேர்வு மையங்களிலும், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட 27 தேர்வு மையங்களிலும் 14,585 பேர் தேர்வு எழுதினார்கள். குறிப்பாக நாகர்கோவில் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 9,970 நபர்களும், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 4,815 நபர்களும் தேர்வு எழுதினார்கள். 5750 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பார்வையிட்டார்.
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 579 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 168 கன அடியும் சிற்றாறு ஒன்று அணைக்கு 136 கன அடி தண்ணீரும் கொண்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 பெருஞ்சாணி அணையில் இருந்து 410 சிற்றாறு ஒன்று அணையில் இருந்து 150கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 659 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 223 கனஅடியும் நேற்று தண்ணீர் வந்தது.
குமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா நேற்று(செப்.13) விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
வருகிற செப்டம்பர் 17ம் தேதி மீலாடி நபியையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.
குமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் ஓணம் பண்டிகை ஒட்டி மலையாளம் மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓணப்பண்டிகையை அவர்கள் சிறப்பாக கொண்டாட வாழ்த்து தெரிவித்துள்ள அவர் மலையாளம் மொழி பேசும் மக்கள் எந்தவித இன்னலும் இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற இறைவனை வேண்டுவதாக அதில் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட உழவர் சந்தையில் பசுமையான, புதிய தரமான சத்தான காய்கறிகள், பழங்கள் தினந்தோறும் கிடைப்பதால் ஊட்டச்சத்து தன்னிறைவிற்கு உழவர் சந்தை வழிவகை செய்கிறது. இந்நிலையில், உழவர் சந்தையில் விற்பனை செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தினை வடசேரி மற்றும் மைலாடி உழவர்சந்தையில் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று(செப்.13) கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.