Kanyakumari

News April 3, 2025

குமரி : மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க…

News April 3, 2025

குமரி : ஏப்ரல் 15 முதல் கடலுக்கு செல்ல தடை

image

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அரசு சார்பில் மீனவர்களுக்கு நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2025

குமரியில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்

image

குமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த படகுகள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில்,மீன் இனப்பெருக்க காலத்தை ஒட்டி வரும் 15ஆம் தேதி முதல் ஜூன்.15ஆம் தேதி வரை மீன் பிடிக்க தடை.

News April 2, 2025

Grindr செயலி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்

image

குமரி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; Grindr செயலி மூலம் ஏமாற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நபர்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது போன்ற செயலியை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்ப்பது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது.

News April 2, 2025

குமரியில் கோழி, ஆடு, பன்றி வளர்க்க 50 லட்சம் வரை மானியம்

image

குமரி மாவட்டத்தில் கோழி, ஆடு, பன்றி வளர்க்க 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதன் மூலம் புதிய கோழிப் பண்ணைகள், செம்மறியாடு, வெள்ளாட்டுப் பண்ணைகள் அமைக்கலாம். தகுதி உடையவர்கள் https://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 2, 2025

கன்னியாகுமரியில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை (ஏப்.3) முதல் ஏப்.4 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 2, 2025

கன்னியாகுமரி வேலை வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 டெலிகாலர் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 வயது முதல் 51 வயது வரை உள்ள பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும் . விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <>கிளிக்<<>> செய்து ஏப்ரல் 31க்குள் விண்ணப்பம் செய்யுங்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்கள்.

News April 2, 2025

நிலைத்தடுமாறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

image

நெல்லை மேட்டுக்குடியைச் சேர்ந்தவர் மாரியப்பன், இவர் ஆக்கர் சேகரிக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆனா நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். குடிப்பழக்கம் உடையவராக இருந்த இவர் புது கிராமம் காலணியில் வீட்டில் மாடியில் தூங்கச் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

News April 2, 2025

குமரியில் இந்த ஆண்டு விபத்துக்கள் குறைவு

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேற்று (ஏப்.01) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 106 உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இது வரையிலும் 49 உயிரிழப்பு விபத்துகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இது ஆண்டை ஓப்பிடும் பொழுது குறைவு ஆகும் என்று குறிப்பிட்டார். தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்! விபத்தை தவிருங்கள்!!

News April 1, 2025

குமரியில் இந்த ஆண்டு விபத்துக்கள் குறைவு: எஸ்பி தகவல்

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று (ஏப்.01) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 106 உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இது வரையிலும் 49 உயிரிழப்பு விபத்துகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பாதிக்கு மேல் குறைவாகும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!