Kanyakumari

News August 30, 2024

பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

image

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” நிகழ்ச்சி நாளை (31ம் தேதி) காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை திருநெல்வேலி St. ஜான் கல்லூரி மைதானத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடக்கிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்புரையாற்றுகிறார். நிகழ்வில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், 20 ஆயிரம் பெற்றோர் பங்கேற்கின்றனர்.

News August 30, 2024

குமரி மாவட்டத்தில் நீர் மேலாண்மை குழுக்கள் அமைப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் குளங்கள், ஆறுகள், கால்வாய்கள் உள்ளடங்கிய நீர்பிடிப்பு பகுதிகளை கொண்டதாக அமைந்துள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்க பருவமழை ஆகிய இரு பருவமழை காலங்களிலும் மழைப்பொழிவின் காரணமாக மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் நிரம்பியவண்ணம் உள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும் நீர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 30, 2024

“முதல்வர் அமெரிக்கா சென்று வந்ததும் வெள்ளை அறிக்கை தேவை”

image

நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி அ.தி.மு.க எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் பேசினார். அப்போது, “ஸ்டாலின் எதற்காக அமெரிக்கா செல்கிறார்? எந்த கம்பெனியை இங்கே கொண்டு வரப்போகிறார்? மருத்துவத்திற்காக சென்றீர்களா? அல்லது எதற்காக சென்றீர்கள்? அமெரிக்கா சென்று வந்ததும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்றார்.

News August 30, 2024

குமரி அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு

image

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு இன்று காலை நிலவரப்படி 657 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 388 கன அடியும், சிற்றாறு ஒன்று அணைக்கு 140 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று பேச்சிப்பாறைக்கு 640 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 305 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

News August 30, 2024

பில்லி சூனியம் வீட்டில் இருப்பதாக கூறி 7 பவுன் நகை திருட்டு

image

மண்டைக்காடு புதூரைச் சேர்ந்தவர் ஜேசு பிரபா(65). அவரது வீட்டிற்கு ஜோசியம் பார்க்க தேவி லஷ்மி என்ற பெண் வந்தார். வீட்டில் பில்லி சூனியம் இருக்கிறது. எனவே கழுத்தில் நகை போடக்கூடாது என்று அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை கழற்றி வைக்கச் சொன்னார். இதை நம்பிய ஜேசு பிரபா நகையை கழற்றி வைத்த போது, தேவி லட்சுமி நூதனமாக நகையை திருடிச் சென்றுள்ளார். மண்டைக்காடு போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News August 30, 2024

தொழிலாளியை வெட்டியவருக்கு 3 ஆண்டு சிறை

image

குலசேகரம் தொழிலாளி கணேசன்(65). இவரது சைக்கிளை அதே ஊர் பால்ராஜின் தம்பி திருடியதாக பலரிடமும் கணேசன் கூறியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு கணேசனை, “சைக்கிள் திருடன் என எங்களை கேவலப்படுத்திவிட்டாய்” எனக் கூறி பால்ராஜ் அரிவாளால் வெட்டியுள்ளார். 22 ஆண்டுகளாக பத்மநாபபுரம் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி பிரவின் ராஜா, குற்றவாளி பால்ராஜூக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News August 30, 2024

வீட்டு மனை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; “மலையிடப்பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் அனைத்து மனைகள், மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www/inlayoutillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணக்கலாம்.

News August 30, 2024

காளிகேசம், கீரிப்பாறை செல்ல அனுமதி

image

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக காளிகேசம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனத்துறையினர், கீரிப்பாறை, காளிகேசம் உட்பட உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தனர். தற்போது மழை குறைந்ததால் ஆற்றில் வெள்ளம் வரத்து குறைந்தது. இதனால் வனத்துறை நேற்று காளிகேசம், கீரிப்பாறை சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதித்தனர். 

News August 29, 2024

குமரி வந்த துரை வைகோ மதிமுகவினர் வரவேற்பு

image

மதிமுக தலைமை நிலைய செயலாளரும் வைகோவின் மகனுமான துரை வைகோ இன்று கன்னியாகுமரி வந்தார். அவரை கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் தலைமையில் மதிமுகவினர் சிறப்பாக வரவேற்றனர். தொடர்ந்து, நாளை ஆரல்வாய் மொழியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

News August 29, 2024

நவராத்திரி விழாவுக்கான ஆலோசனை கூட்டம்

image

சுசீந்திரம் அம்மன், வேளிமலை குமாரசுவாமி, தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சுவாமி விக்கிரகங்கள் நவராத்திரி விழாவுக்காக குமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்குஊர்வலமாக செல்லப்படும். இவ்விழாவிற்கான ஆலோசனை கூட்டம் கேரள திருவனந்தபுரத்தில் இன்று (ஆக.29)நடந்தது. கேரள தேவசம் அமைச்சர் வ வாசவன், மாவட்ட கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். 

error: Content is protected !!