Kanyakumari

News September 18, 2024

அப்டா சந்தை காய்கறி விலை நிலவரம்

image

நாகர்கோவில் அப்டா சந்தை விலை நிலவரம் பின்வருமாறு:-கத்தரி ரூ.50, வெண்டை ரூ.18, தக்காளி ரூ.30, பூசணி ரூ.6 பாகற்காய் ரூ.25, புடலை ரூ.30, மிளகாய் ரூ.50, மாங்காய் ரூ.120, வெள்ளரிக்காய் ரூ.30, சீனி அவரைக்காய் ரூ.25, நார்த்தங்காய் ரூ.50, நெல்லி, ரூ.50, முருங்கைக்காய் ரூ. 40, சாம்பார் மிளகாய் ரூ.200, தேங்காய் ரூ.38 மட்டிப்பழம் ரூ.80, செவ்வாழை ரூ.65, ரசகதலி ரூ.70 -க்கு விறக்கப்படுகிறது.

News September 18, 2024

மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை; மகனை சிறைக்கு அனுப்பிய தாய்

image

இரணியலை சேர்ந்த (47) தொழிலாளிக்கு 13 வயது மகள் உள்ளார். இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில்தனியாக இருக்கும்போது சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் இது குறித்து சிறுமி பாட்டியிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பாட்டி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதை தொடர்ந்து தொழிலாளி நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 18, 2024

கல்லூரி பஸ் மோதி ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

image

புத்தன் துறை மீன்பிடித்தொழிலாளர்கள் ஜாண் (49), சகாய ஜஸ்டின் (44). கடந்த 16ம் தேதி இருவரும் மீன்பிடி படகில் பொருத்தும் மோட்டாருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது கல்லுக்கட்டி பகுதியில் வைத்து தனியார் கல்லூரி பஸ்சை ஓவர்டேக் செய்தனர். இதில் விபத்து நேரிட இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஜான் சிகிச்சை பலனின்றி இறந்தார். ராஜாக்க மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News September 18, 2024

மின்சார சுடுகாடு அமைக்க தளவாய் சுந்தரம் எதிர்ப்பு

image

தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட காரியம் கோணம் கிராமத்தில் மின்சார சுடுகாடு அமைக்கும் திட்டத்தை மக்கள் எதிர்ப்பதால் கைவிட வேண்டும். இங்கு அனைத்து சமுதாயத்தில் தனித்தனியாக சுடுகாடு, இடுகாடு வசதி உள்ளது. மேலும் சற்று தொலைவில் உள்ள புளியடி பகுதியில் மின் தகன மேடை உள்ளது. எனவே மக்கள் எதிர்ப்பை மீறி மின்சார சுடுகாடு அமைக்ககூடாது என அவர் கூறியுள்ளார்.

News September 17, 2024

குமரி எல்லையில் நிபா வைரஸ் சோதனை

image

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தாா். அதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது. கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழக-கேரள எல்லையோரப் பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளையில் நாளை முதல் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

News September 17, 2024

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

குருந்தன்கோட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஒர்க் ஷாப்பில் பணிபுரிகிறார். நேற்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் திருமண வீட்டிற்கு சென்று விட்டு வந்த வேன் ஆனந்த் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News September 17, 2024

குமரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

மருதங்கோடு ஊராட்சியில் கோணம் (கேந்திரம்) பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் திருவுருவ சிலை மற்றும் மண்டபத்தை சேதப்படுத்திய தேசவிரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் கழுவன்திட்டை ஜங்ஷனில் இன்று(செப்.17) மாலை நடைபெற உள்ளது. விளவங்கோடு MLA தாரகை கத்பர்ட் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.

News September 17, 2024

நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

image

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (செப்.17) மாலை 5 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளர்து. இதில் எச்.ராஜாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும், இதில் காங்கிரஸ் கட்சியினர்கலந்து கொள்ள வேண்டும் என நாகர்கோவில் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 17, 2024

பகவதி அம்மன் கோவிலில் பௌர்ணமி விழா

image

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பௌர்ணமி விழா இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் அம்மனுக்கு தங்க கிரீடம், தங்க ஆபரணங்கள் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. இரவு புஷ்பாபிஷேகம், அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடைபெறுகிறது.

News September 16, 2024

குதிரை வாகனத்தில் காட்சியளித்த பெருமாள்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம்
அருள்மிகு ஸ்ரீஸ்தாணுமாலயன்சுவாமி திருக்கோயில்
ஆவணி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில்
8 ஆம் நாள் ந்திருவிழாவான இன்று திருவேங்கடம் விண்ணவரம் பெருமாள் சுவாமி குதிரை வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளினார். இதில் ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் சுவாமியை தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!