India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகின்ற அக்டோபர் 3 அன்று தொடங்குகிறது. இந்ததிருவிழா 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வாகன பவனி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.10 ஆம் திருவிழாவான அக்.12 பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் கடலில் அம்மனுக்கு ஆளட்டும் கிழக்கு வாசல் திறப்பும நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை மத்திய அரசு ஏற்கனவே அணுக்கழிவு குப்பைத் தொட்டிபோல பாவிப்பதாகவும், தற்போது அணுக் கனிம தாதுக்களை அகழ்ந்தெடுக்க சுரங்கம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்வது கண்டத்திற்குரியது என பூவுலகின் நண்பர்கள் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி புதிய பஸ் நிலையம் செல்லும் கோவளம் ரோட்டில் கலங்கரை விளக்கம் உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தில் நாளை மறுநாள் (செப்.21) இந்திய கலங்கரை விளக்க தினத்தையொட்டி அன்று ஒருநாள்மட்டும் சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று கன்னியாகுமரி கலங்கரை விளக்க பொறுப்பாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
நாகர்கோவில் – கொச்சுவேளி பயணிகள் ரயிலை நிலம்பூர் எக்ஸ்பிரஸாக மாற்றும் திட்டத்தால் சாதாரண பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என மாவட்ட பயணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி-சென்னை-ஜபல்பூர் சிறப்பு ரயில் மதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாகர்கோவில் சந்திப்பில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் இரவு 11. 15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 11:15 மணிக்கு செஇகிறது. வருகிற 22 ஆம் தேதி முதல் இந்த ரயில் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என நாகர்கோவிலில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரங்கசாமி என்பவரின் மகனுக்கு புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணி வாங்கி தருவதாக கூறி குமரி ஆவின் இளநிலை செயலாளர் அய்யப்பன், கூட்டுறவு ஒன்றிய இளநிலை செயலாளர் ஜெயபழனி உள்பட 4 பேர் ரூ.30 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து அய்யப்பன் மற்றும் ஜெயபழனி ஆகிய 2 பேரையும் பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குளச்சலில் நேற்று அனைத்து கட்சியின் ஆலோசனை கூட்டம் சி.பி.ஐ.எம்.எல். அந்தோணிமுத்து தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் நசீர்,காங், நகர தலைவர் சேகர், அதிமுக நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், இந்திய தேசிய காங்கிரஸ் லாரன்ஸ்,SDPI கட்சியின் குளச்சல் தொகுதி தலைவர் நிசார் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் சார் பதிவாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் இன்று நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரியை போதை பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும். அதற்கு காவல்துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நாகர்கோவில் அப்டா சந்தை விலை நிலவரம் பின்வருமாறு:-கத்தரி ரூ.50, வெண்டை ரூ.18, தக்காளி ரூ.30, பூசணி ரூ.6 பாகற்காய் ரூ.25, புடலை ரூ.30, மிளகாய் ரூ.50, மாங்காய் ரூ.120, வெள்ளரிக்காய் ரூ.30, சீனி அவரைக்காய் ரூ.25, நார்த்தங்காய் ரூ.50, நெல்லி, ரூ.50, முருங்கைக்காய் ரூ. 40, சாம்பார் மிளகாய் ரூ.200, தேங்காய் ரூ.38 மட்டிப்பழம் ரூ.80, செவ்வாழை ரூ.65, ரசகதலி ரூ.70 -க்கு விறக்கப்படுகிறது.
இரணியலை சேர்ந்த (47) தொழிலாளிக்கு 13 வயது மகள் உள்ளார். இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில்தனியாக இருக்கும்போது சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் இது குறித்து சிறுமி பாட்டியிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பாட்டி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதை தொடர்ந்து தொழிலாளி நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.