Kanyakumari

News December 2, 2024

குமரி மக்கள் குறைதீர் கூட்டம் நிறைவு

image

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 383 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டதாக ஆட்சியர் அழகுமீனா தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

News December 2, 2024

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் பின்வருமாறு:- 18 கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14.63மற்றும் 14.72 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில்41. 49 நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 60.7அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில்24.2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.7அடி நீரும் இருப்பு உள்ளது.

News December 2, 2024

தலைமைபதி குரு மகா சன்னிதானத்தின் மனைவி மரணம்

image

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி தலைமை குரு மகா சன்னிதானம் பால பிரஜாதிபதி அடிகளாரின் மனைவி ரமணி பாய் இன்று(2.12.2024( காலை மரணமடைந்தார். அன்னாரது இறுதிச் சடங்கு நாளை (3.12.2024) மாலை 3:00 மணிக்கு சுவாமிதோப்பு அன்பு வனத்தில் வைத்து நடைபெறுகிறது. அவருக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News December 2, 2024

மத்திய அரசை வலியுறுத்திய குமரி எம்.பி

image

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்தின் அலுவலகம் இன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் 1000 கோடி மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்; மத்திய அரசு நிபுணர் குழுவை தமிழகத்திற்கு அனுப்பி சேதங்களை பார்வையிட வேண்டும்” என எம்.பி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

News December 2, 2024

இன்று முதல் குமரி வரை செல்லும் நெல்லை ரயில்!

image

நெல்லை – நாகர்கோவில் பயணிகள்(பாசஞ்சர்) ரயில் இன்று(டிச.,2) முதல் அடுத்த 6 மாதங்களுக்கு குமரி வரை இயக்கப்படவுள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பல்வேறு விரிவாக்க பணிகள் இன்று தொடங்கவுள்ளதால் அங்கு நிறுத்தப்படும் ரயில்களை குமரி வரை நீட்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் 6 மாதங்களுக்கு குமரி முனை வரை நீட்டிக்கப்பட்டுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 2, 2024

குமரி அணைகளுக்கு வரும் நீர்வரத்து விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 307 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 225 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 310 பெருஞ்சாணி அணையில் இருந்து 510 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று(டிச.,1) பேச்சிப்பாறை அணைக்கு 201 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News December 2, 2024

நாகர்கோவில் to சென்னை வந்தே பாரத் ரயில் ரத்து!

image

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் அதி கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று(டிச.,2) காலை புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து 2 மணி அளவில் சென்னை புறப்பட்டு செல்லும் வந்தே பாரத் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

News December 2, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,2) காலை 9 மணி கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவரை நியமிக்ககோரி 7வது நாளாக உண்ணாவிரத போராட்டம். #மாலை 5 மணிக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் வேலை பளு நெருக்கடியை குறைக்ககோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம். #மாலை 5.30 மணிக்கு மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் உறுதியேற்பு நடக்கிறது.

News December 2, 2024

குமரியை சேர்ந்த 2 பெண் கைவினை கலைஞர்களுக்கு விருது!

image

தேங்காய் ஓட்டில் கலைப்பொருட்கள் செய்த கன்னியாகுமரியை சேர்ந்த 2 பெண் கைவினைக் கலைஞர்களுக்கு, பூம்புகார் மாவட்ட ‘கைத்திறன் விருது’ வழங்கி தமிழக அரசு கௌரவித்தது. தேங்காய் ஓட்டில் கலைப்பொருட்கள் மற்றும் சமையலறை சாதனங்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வரும் ஜெயக்கு ரூஸிடம் பயிற்சி பெற்ற ஜெஸி, சிவகுமாரி ஆகிய பெண் கைவினைக் கலைஞர்களுக்கு அமைச்சர் அன்பரசன் விருதினை வழங்கினார். ஒரு வாழ்த்து சொல்லலாமே!

News December 1, 2024

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குமரி எஸ்.பி அறிவுரை

image

இருசக்கர வாகனமானது இரண்டு நபர்கள் மட்டுமே பயணம் செய்யக்கூடியது. இதில் மூன்று நபர்கள் பயணிக்கும் போது வாகனத்தின் மொத்த எடையானது (Laden weight) நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகரிக்கிறது. இதனால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. மோட்டார் பிரிவு 194 C மற்றும் 194 D ன் படி மூன்று மாத காலம் வரை தகுதி நீக்கம் செய்யுமாறு குமரி எஸ். பி சுந்தரவதனதால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!