India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விளையாட்டுத் துறையில் சர்வதேச & தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுவதாக குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறித்து இன்று கூறியுள்ளார்.
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அழகுமீனா தலைமையில் இன்று(செப்.03) நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆட்சியர் திட்டப்பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து தெரிந்து கொண்டார். திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அவர் அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் 4 மாத காலத்தில் 6,273 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 44 குழந்தைகள் இறந்துள்ளன. இறப்பு விகிதம் 7.01% ஆகும். அதிகபட்சமாக தக்கலை வட்டாரத்தில் 10 குழந்தைகளும், முன்சிறை, ராஜாக்கமங்கலம் ஆகிய இடங்களில் இரண்டு தாய்மார்களும் பிரசவ காலத்தில் உயிரிழந்தனர்.
17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுவது தெரிந்தால் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலருக்கும், 18 வயதுக்கு மேல் சமூக நலத்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பொது இட பாலியல் புகாரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம். கட்டணமில்லா 1098, 108 என்ற எண்களிலும் கூறலாம் என குமரி ஆட்சியர் அழகு மீனா நேற்று நடந்த சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.
திருநெல்வேலி கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டியார் பட்டி அருகே இன்று அதிகாலை முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திர சிங் (49) மற்றும் அவரது சகோதரி மணலி விலையை சேர்ந்த சைலஜா (50) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பாளை., தீயணைப்பு படையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில், வடசேரி உள்ளிட்ட 5 துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, களியங்காடு, இறச்சகுளம் உட்பட 23 பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் ஸ்காட் கல்லூரி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சாலை விதிகளை மீறியும், குடிபோதையிலும் ஓட்டி வரப்பட்ட 17 வாகனங்களுக்கு சுமார் ரூ.75000 அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர். பின்னர் இளைஞர்களின் பெற்றோர், உறவினர் வரவழைக்கப்பட்டு
அறிவுரைகள் வழங்கப்பட்டது அபராதங்கள் செலுத்த வைக்கப்பட்டும், பதிவெண் தகடுகள் சரி செய்யப்பட்டும், வாகனங்கள் விடுவிக்கப்பட்டன .
பாகோடு பேரைக்காவிளையை சேர்ந்தவர் டென்னிஸ்ராஜ் மனைவி ஜெமீலா ரோஸ்(50), இவரது மகள் ஜெசிகாவுக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் பிரேமா, நெட்டாங்கோடு தர்மராஜ் ஆகியோர் 3 தவணைகளில் ரூ.7 லட்சம் வாங்கிவிட்டு வேலை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து ஜெமீலா ரோஸ் அளித்த புகாரின் மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காட்டாத்துறை கவியல்லூர் சட்டக்கல்லூரி மாணவர் சிஜோ(25). இவரும் மாலியில் வேலை பார்க்கும் துண்டத்துவிளையை சேர்ந்த அபினேஷ்(22) ஆகிய இருவரும் நேற்றிரவு (செப்.1) மோட்டார் சைக்கிளில் காஞ்சிரகோடு பகுதியில் சென்றபோது சிராயன்குழியில் கனிமவளம் கொண்டுசென்ற லாரியில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய (செப்.2) நீர் இருப்பு விவரம்; 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 13.84 மற்றும் 13.94 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 43.58 அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 69.25 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 23.1 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15 அடி நீரும் இருப்பு உள்ளது.
Sorry, no posts matched your criteria.