India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து பல ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ஹவுரா ரயிலும், இம்மாதம் 7ம்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாகர்கோவிலில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தங்கள் பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களை கண்காணிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டு உள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அதன்படி இம்மாதம் 12ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சொந்த ஊருக்கு சென்று வருபவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று நாகர்கோவில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதற்காக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்திலும் தாழக்குடி சமுதாய நலக்கூடத்திலும் நாளை (5ம் தேதி) நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார்
மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பல மாதங்களாக சாலை மோசமாக பழுதடைந்துள்ளது. இன்று அமைச்சர் வேலு ஆய்வு செய்ய வருவதை ஒட்டி நேற்று இரவு தற்காலிகமாக மண் போட்டு நிரப்பி தார் போடும் பணி நடந்தது. இதுவரை பழுது பார்க்காமல் திடீரென அமைச்சர் வருகைக்காக தார் போடுவதால் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் தார் போடுவதை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தார். அவரை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னாள் எம்எல்ஏ, ஆஸ்டின் உட்பட திமுகவினர் வரவேற்றனர்.
குமரி மாவட்டத்தில் தரம் குறைந்த உணவு விற்பனை செய்ததற்காக 401 கிரிமினல் – சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், “உணவு புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற உணவு, கலப்பட புகார்களை foodsafety.tn.gov.in என்ற இணையத்தளத்திலும் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார் கூறினார்
குமரி திற்பரப்பில் தனியார் முந்திரி ஆலையில் 110 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். நஷ்டமடைந்து ஆலை மூடப்பட்ட நிலையில், தொழிலாளர்களுக்கு நிறுவனம் பணிக்கொடை வழங்கவில்லை. இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிட்டனர். குலசேகரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி 3 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடையை வழங்க வேண்டும் என போலீசார் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அஞ்சுகிராமம் சந்திப்பில் பொதுமக்கள் நலன்கருதி செயலிழந்த நிலையில் இருந்த கண்காணிப்பு கேமரா புதுப்பிக்கப்பட்டு இன்று(செப்.3) மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
இதன் திறப்பு விழா நிகழ்வுக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமை வகித்தார். கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமார் கேமராவை மீண்டும் செயல்படுத்தி தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு வருகை தர உள்ளார். அதற்காக அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கும் விதத்தில் இன்று ஒழுகினசேரி திமுக அலுவலகத்தில் வைத்து மேயர் மகேஷ் தலைமையில் திமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.