India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நிர்வாக நலன் கருதி கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பிடிஓ பத்மரதி அகஸ்தீஸ்வரத்திற்கும், அகஸ்தீஸ்வரம் பிடிஓ ஜெயா தோவாளைக்கும், தோவாளை பிடிஓ சுரேஷ்குமார் மேல்புறத்துக்கும், ராஜாக்கமங்கலம் பிடிஓ சாந்தி தக்கலைக்கும், திருவட்டார் துணை பிடிஓ அஜிதா ராஜாக்கமங்கலத்திற்கு பிடிஒவாகவும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி மாறுதல் உத்தரவை குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று பிறப்பித்தார்.
குமரி தோவாளை ஊராட்சி ஒன்றியம் பாலமோர் ஊராட்சிக்கு உட்பட்ட கீரிப்பாறை – காரி மணிசாலையை செப்பனிட கோரி பலமுறை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று, ஊராட்சி மன்ற தலைவி லில்லிபாய் சாந்தப்பன் இன்று அமைச்சர் எ.வ.வேலுவிடம் மனு அளித்தார். மேலும், வசிக்கும் மக்கள் மருத்துவ வசதிக்கும் ஆட்டோ, கார்களில் செல்லும் அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைநிலங்களில் யானைகள் புகுந்து விவசாய பயிர்களை அழித்து நாசம் செய்து வருகிறது. இதை தடுக்க வன காவலர்கள் கொண்ட தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக வன சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானைகள் எந்த வழியாக வருகிறது என்பது குறித்து அறிந்து அவர்களை விரட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் இணைக்கும் கண்ணாடி இழையினால் ஆன கூண்டு இணைப்பு பாலத்தினை ரூ.37 கோடி செலவில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை அமைச்சர்கள் எ.வ.வேலு, த.மனோ தங்கராஜ் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குமரி மாவட்ட பள்ளி ஆசிரியர்கள் 9 பேருக்கு நாளை (செப்.5) சென்னையில் நல்லாசிரியர் விருதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். இதில் ஜெயந்தி, கோட்டார் – கமலா, பள்ளியாடி – மரியலீலா, மார்த்தாண்டம்துறை -சதீஷ்குமார், மருதங்கோடு – அன்பழகன், தாழக்குடி – தர்மேந்திர ராஜ் உட்பட 9 தலைமை ஆசிரியர்கள் விருது பெறுகின்றனர் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
குமரி வந்த அமைச்சர் எ.வ. வேலுவை இன்று (செப்.4) நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்பி, குமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் அமைய இருக்கும் ரெயில்வே மேம்பாலத்தை அந்த பகுதி மக்களின் கருத்தைக் கேட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப கட்ட வேண்டும் எனவும், ஊரை ஒதுக்கி மேம்பாலம் கட்டும் திட்டத்தை கை விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
விஜய் நடித்துள்ள “கோட்” திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் படகில் கோட் படம் குறித்து ப்ரோமோஷன் செய்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இன்று காலை ஒருபுறம் கடல் சீற்றமாகவும் மறுபுறம் கடல் உள்வாங்கியும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி கடலில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளை சுற்றுலா போலீசார் வெளியேற்றினர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , பால்வளத்துறை அமைச்சர். த.மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் த.ஆர். அழகுமீனா, முன்னிலையில், இன்று (செப்.4) காலை 8.30 மணிக்கு மார்த்தாண்டம் மேம்பாலத்தினை ஆய்வு மேற்கொண்டனர். அளவு மீட்டர் டேப் வைத்து சாலையின் அகலத்தினை அளவீடு செய்தனர்.
குமரி மாவட்டத்தில் முந்திரி சீசன் தொடங்கியுள்ள நிலையில், தோட்டுடன் கூடிய முந்திரி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பொதுவாக தோட்டுடன் கூடிய முந்திரி 200 ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஆனால் வரத்து அதிகமாக உள்ளதால் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அரசு தோட்டுடன் கூடிய முந்திரியை 200 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Sorry, no posts matched your criteria.