Kanyakumari

News September 5, 2024

பெட்டிக்கடையில் மதுவா?  8122930279 ல் புகார் கொடுங்கள்

image

குமரி மாவட்டத்தில் அனுமதி பெற்ற பார்களை தவிர மற்ற இடங்களில் பொரித்த சிக்கன், மீன் விற்பனை செய்யும் கடைகள் ஹோட்டல்கள், கடைகள், பெட்டி கடைகளில் மது குடிக்க அனுமதி இல்லை. அனுமதி பெறாத கடைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்படும், கடைகாரர்களுக்கு சிறை தண்டனை & அபராதம் விதிக்கப்படும். நீங்களும் வாட்ஸ்ஆப் எண் 8122930279 ல் புகார் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

News September 5, 2024

குமரி -கால்வாய்களை தூர்வார கேட்டு ஆட்சியரிடம் மனு

image

குமரி மாவட்டத்தில் பிரதான கால்வாய்கள், கிளை கால்வாய்கள் உட்பட அனைத்து கால்வாய்களும் தூர்வாராததால் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் இரண்டாம் போக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

News September 5, 2024

சர்ச் சுற்றுச்சுவர் உடைப்பு ; 39 பேர் மீது வழக்கு

image

அருமனை மணலி முரப்புவிளை எல்.எம்.எஸ் சர்ச், 1997ல் சி.எஸ்.ஐ சபைக்கு பரிசாக அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு தரப்பில் வழக்கு தொடரப்பட்டு கடந்த மாதம் எல்.எம்.எஸ் சபைக்கு சர்ச் சொந்தம் என தீர்பளிக்கப்பட்டு, எல்.எம் எஸ்.சபையிடம் ஒப்படைக்கப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு சர்ச் சுற்றுச்சுவரை ஒரு தரப்பு உடைத்ததை அடுத்து 39 பேர்மீது அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 5, 2024

பெட்டிக்கடையில் மதுவா?  8122930279 ல் புகார் கொடுங்கள்

image

குமரி மாவட்டத்தில் அனுமதி பெற்ற பார்களை தவிர மற்ற இடங்களில் பொரித்த சிக்கன், மீன் விற்பனை செய்யும் கடைகள் ஹோட்டல்கள், கடைகள், பெட்டி கடைகளில் மது குடிக்க அனுமதி இல்லை. அனுமதி பெறாத கடைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்படும், கடைகாரர்களுக்கு சிறை தண்டனை & அபராதம் விதிக்கப்படும். நீங்களும் வாட்ஸ்ஆப் எண் 8122930279 ல் புகார் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

News September 5, 2024

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமரியில் பூ விலை அதிகரிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மல்லிகை பூ விலை கிலோ ரூ.800யாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மல்லிகை பூ விலை உயர்ந்துள்ளது. நேற்று மாவட்டத்தில் மல்லிகை பூ விலை  ரூ600 இருந்த நிலையில் இன்று ரூ200  அதிகரித்து ரூ800யாக உள்ளது. இதைப் போன்று பிச்சி செவ்வந்தி உள்ளிட்ட இதர பூக்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.

News September 5, 2024

ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் போராட்டம்

image

மாணவரும் ஆசிரியர்களும் மன அழுத்தம் இல்லாத சுதந்திரமான முறையில் கற்றல் கற்பித்தல் பணியை செய்ய விட வேண்டும். கற்றல் கற்பித்தல் நேரத்தை முறைப்படுத்த வேண்டும், கிடப்பில் உள்ள கோப்புகள் மீது காலம் தாழ்த்தாமல் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர் தினமான இன்று கோரிக்கை அட்டை அணிந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News September 5, 2024

குமரி கடலில் படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதம்

image

கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அதன் அருகில் திருவள்ளுவர்
சிலையையும் பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக 3படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை தொடர்ந்து படகு போக்குவரத்து நடைபெறுவது வழக்கம். இன்று (செப்.5) நீர்மட்டம் தாழ்வால் 11மணிக்கு தொடங்கியது.

News September 5, 2024

நாகர்கோவிலில் கழிவறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா

image

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதிதாக கழிவறை கட்டும் பணியினை மேயர் மகேஷ் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் இன்று காலை அடிக்கல் நாட்டும் விழாவை துவக்கி வைத்தனர். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் துணை மேயர் மேரி பிரின்ஸிலதா, மண்டலத்தலைவர் ஜவஹர், தொழில்நுட்ப அலுவலர் பாஸ்கர்,
சுகாதார அலுவலர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 5, 2024

குமரியில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

image

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போதைப் பொருள்நுண்ணறிவு பிரிவு போலீசார் சார்பில் புற்றுநோய் தடுப்புவிழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின்சுஜாதா தொடங்கவைத்தார் .
இந்த நிகழ்ச்சிக்குகார்த்திக்அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் பசுமை இயக்க சமூகசேவகர் டாக்டர்நாகேந்திரன் மற்றும் மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்

News September 5, 2024

கண் லென்ஸ் பொருத்தும் முகாம் செப். 9ல் ஆரம்பம் – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ”கண் லென்ஸ் பொருத்தும் முகாம் நடைபெறும் இடங்களை ஆட்சியர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவை தோவாளை ஊராட்சி ஒன்றியம் 9ம்தேதி, மேல்புறத்தில் 12ம் தேதி, குருந்தன் கோட்டில் 18ம் தேதி,  முன்சிறையில் 20ம் தேதி, கிள்ளியூரில் 23ம் தேதி, ராஜாக்கமங்கலத்தில் 25ம் தேதி, தக்கலையில் 26ம் தேதி, திருவட்டாரில் 27ம் தேதி, மற்றும் அகஸ்தீஸ்வரத்தில் 28 தேதிகளிலும் நடக்கிறது. 

error: Content is protected !!