Kanyakumari

News December 6, 2024

குமரியில் லாபகரமாக இயங்கும் ஆவின்: அதிகாரிகள் பெருமிதம்

image

குமரி மாவட்ட ஆவின் மூலமாக பால் மற்றும் பலவித பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 25,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து 23,500 லிட்டர் பால் தினமும் விற்பனை செய்யப்படுகிறது. மாதம்தோறும் பதாம் மிக்ஸ் பவுடர் 6 டன், பால்கோவா 1.5 டன், குல்பி ஐஸ் 7,000 விற்பனையாகிறது. 2024-25 நிதியாண்டில் இதுவரை ரூ.48 லட்சம் லாபம் ஈட்டியுள்ளதாக மாவட்ட ஆவின் அதிகாரிகள் நேற்று கூறினர்.

News December 6, 2024

ஆசிய விளையாட்டு போட்டி: குமரியை சேர்ந்தவர் வெற்றி!

image

மலேசியாவில் நடைபெற்று வரும் காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று(டிச.,6) ‘Triple Jump’ பிரிவில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுதன் என்ற மாணவர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நேற்று(டிச.,5) குமரியை சேர்ந்த மாணவி ஹமீஷா பர்வின் தங்கப்பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.

News December 6, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10 மணிக்கு வங்கதேச இந்துக்கள் படுகொலையை கண்டித்து வேப்பமோடு சந்திப்பில் இந்து மகா சபைசார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. #காலை 10:30 மணி மார்த்தாண்டம் பகுதி சாலைகளை சீரமைக்க கோரி அதிமுக சார்பில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 4:30 மணிக்கு ஏகத்துவ ஜமாத் அலுவலகத்தில் பாபர் மசூதி வரலாறு சிறப்பு கருத்தரங்கு அரங்கம் நடக்கிறது.

News December 6, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 9 மணிக்கு கீரிப்பாறையில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மருத்துவர் நியமிக்க கோரி தொடர் உண்ணாவிரதம்.#காலை 10 மணிக்கு அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வடசேரி சந்திப்பில் இருந்து அம்பேத்கர் சிலை வரை அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் மாலை அணிவித்தல் நடைபெறுகிறது.#மாலை 4.30 மணிக்கு பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு SDPI ஆர்ப்பாட்டம்.

News December 6, 2024

ரப்பர் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்: மாநாட்டில் தகவல்

image

இந்தியாவில் 6.40 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்திலும், தாய்லாந்து 26 லட்சத்து 15 ஆயிரம் டன் உற்பத்தியுடன் முதலிடத்திலும், இந்தோனேசியா 2வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில், கேரள மாநிலத்தில் 85% ரப்பரும், தமிழ்நாட்டில் 4%  ரப்பரும் உற்பத்தி செய்யப்படுவதாக குலசேகரத்தில் நேற்று(டிச.,6) நடைபெற்ற ரப்பர் விவசாயிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

News December 6, 2024

வீராங்கனைக்கு விஜய் வசந்த் வாழ்த்து

image

காது கேளாதோர் ஆசியா பசிபிக் தடகள போட்டிகளில் பங்கேற்று 100 மீட்டர் தடை தாவல் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

News December 5, 2024

அம்பேத்கர் நினைவு தினம்; பாஜக மாவட்டத் தலைவர் அழைப்பு

image

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (டிச.6) காலை 9 மணி அளவில் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு குமரி பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில், குமரி மாவட்டத்தை சார்ந்த பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, பஞ்சாயத்து, கிளை மற்றும் அணி/பிரிவு அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

News December 5, 2024

ரப்பர் விலை மீண்டும் சரிய தொடங்கியது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. சரிந்திருந்த ரப்பர் விலை அண்மையில் ஏறத் தொடங்கியது. நேற்று 100 கிலோ ரப்பர் 19 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்து வந்த நிலையில், இன்று திடீரென 100 ரூபாய் குறைந்து 19 ஆயிரத்து 800 ரூபாயாக குறைந்துள்ளது. ரப்பர் விலை உயர்ந்து வந்ததால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகளுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News December 5, 2024

SC/ST மக்கள் தொழில் தொடங்க கடன் – ஆட்சியர் தகவல்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி ரூ.3.50 இலட்சம் அல்லது 35% மானியத்தொகையுடனும், PM AJAY திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.1லட்சம் வரை கடனுதவி 50சதவீதமானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

News December 5, 2024

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 54 பேர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பவர்கள், கஞ்சா விற்பவர்கள் மற்றும் ரவுடியிஷத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். எஸ்பி சுந்தர வதனம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு இதுவரையிலும் மாவட்டத்தில் மொத்தம் 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!