India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை சரக டிஐஜி மூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வல பாதுகாப்பு அலுவலில் பணியாற்றுவது சம்மந்தமாகவும், பாதுகாப்பு திட்ட அலுவல் சம்மந்தமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவண்ணம் அமைதியான முறையில் ஊர்வலங்கள் நடத்திட தேவையான விரிவான அறிவுரைகள் நான்கு மாவட்ட எஸ்பி களுக்கு வழங்கப்பட்டது” என கூறியுள்ளார்
அதிமுக இணக்கமாக வந்தால் மகிழ்ச்சி என்ற நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பதில் அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், இதில் அவருக்கு மகிழ்ச்சி ஒண்ணு இருக்கு ஆனால் மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சி இருக்குது அதைப்பற்றி அவர் பேசவில்லை. மோடி அரசாங்கத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த மக்களும் மகிழ்ச்சியா இல்லை பாஜகவும் பாஜக அணிகள் வலுவாவதையும் இங்கிருக்கும் மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றும் பதிலளித்தார்.
நெல்லை சரக டிஐஜி மூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வல பாதுகாப்பு அலுவலில் பணியாற்றுவது சம்மந்தமாகவும், பாதுகாப்பு திட்ட அலுவல் சம்மந்தமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவண்ணம் அமைதியான முறையில் ஊர்வலங்கள் நடத்திட தேவையான விரிவான அறிவுரைகள் நான்கு மாவட்ட எஸ்பி களுக்கு வழங்கப்பட்டது” என கூறியுள்ளார்
கடையல் பேரூராட்சிக்குட்பட்ட ஆம்பாடி , சிற்றார் அணை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று (செப்.6) தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அதனை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின் அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக, திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்படு உள்ளன. இதன்படி, மொத்தம் 1200 பயனாளிகளுக்கு வழங்கப்படும் என இன்று குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குமரியில் இருந்து ஹிமசாகருக்கு இன்று பகல் 2.15 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச்செல்ல வேண்டும். ஆனால் ரயில் கால தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று இரவு 9:30 மணிக்கு இந்த ரயில் குமரியில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக இந்த ரயில் தாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே இன்று
(செப்.6) காலை நாட்டு படகில் மீன்பிடிக்கச்சென்ற கோவளத்தை சேர்ந்த 6 மீனவர்களும் சின்னமுட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களும் கரைக்கு திரும்பி வரும்போது
ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து தத்தளித்தனர். அவர்களை கடற்கரையில் நின்ற மற்ற மீனவர்கள் கடலில் குதித்து படகுகளையும் மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் எந்திரங்கள், வலைகள் சேதமடைந்தன.
கன்னியாகுமரிக்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ரயில் மற்றும் பேருந்துகளில் வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து முக்கிய ரயில்களும் கன்னியாகுமரியில் இருந்து செல்லும் வகையில் டெர்மினல் ரயில் நிலையமாக மாற்ற வேண்டும் எனபயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்மாண்டிவிளையை சேர்ந்தவர் சுரேஷ் (38) இவர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் அந்த பெண் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சுரேஷ் அந்தப் பெண்ணின் வீட்டின் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
விளைநிலங்கள், விவசாயத்தை பாதுகாக்க கர்நாடகாவில் ஓராண்டிற்கு மேல் விவசாயம் செய்யாவிட்டால், அந்த நிலத்தை வேறு விவசாயிக்கு அரசே வழங்கிவிடும். கேர ளாவிலும் , விளைநிலங்களை பயிர் செய்யாமல் தரிசாக போட அனுமதியில்லை. ஆனால், குமரியில் தண்ணீர் தாராளமாக இருந்தும், இருபருவ மழை பெறும் நிலையிலும், சிலரின் பணத்தாசைக்காக வயல்களை வீட்டுமனைகளாக மாற்றி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.