Kanyakumari

News September 8, 2024

குமரி மாவட்டத்தில் விடிய விடிய போலீஸ் ரோந்து

image

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நடைபெற்றது.  இதனை ஒட்டி விநாயகர் சிலைகள் மாவட்டத்தில் 1500 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போலீசார் ரோந்து பணியில் நேற்று முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதிலும் 32 போலீஸ் அதிகாரிகள் தலைமையில் இரவு விடிய விடிய ரோந்து பணி நடைபெற்றது.

News September 8, 2024

நாகர்கோவில் மாநகராட்சி கடைகள் ஏலம் – ஆணையர்

image

நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள், கழிவறைகள் உள்ளிட்ட ஆண்டு குத்தகை மற்றும் மாத உரிமத் தொகை மற்றும் ஆண்டு குத்தகை உரிமத்திற்கு ஆண்டு தொகை அடிப்படையில் மாநகராட்சியால் பொது மற்றும் சிறப்பு ஏல நிபந்தனைகளுக்குட்பட்டு மாநகராட்சி ஆணையர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் வரும் 18ஆம் தேதி அன்று ஏலம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

குமரி மாவட்டத்திற்கு புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்

image

தமிழகத்தில் 10 ஐஏஏஸ் அதிகாரிகளை துணை மற்றும் உதவி ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம்ட உதவி ஆட்சியராக வினய் குமார் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பத்மநாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட நிர்வாக பணிகளை மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முன்பு கோட்டாச்சியர் தமிழரசி அவர்கள் இருந்தது குறிப்பிட தக்கது

News September 7, 2024

குமரியில்  படகு போக்குவரத்து  4 மணி நேரம் தாமதம்

image

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்கி வரும் நிலையில், கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக இன்று படகு போக்குவரத்தானது 4 மணி நேரம் தாமதமாக துவங்கியது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கடல் நீர்மட்டம் சீரானதை தொடர்ந்து படகு போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட்டது.

News September 7, 2024

குமரியில் வாழை இலை கடும் உயர்வு

image

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது இதையொட்டி நாளையும் நாளை மறுநாளும் சுப முகூர்த்த தினங்களாக உள்ளது. இதனால் நாகர்கோவில் வடசேரி மார்க்கெட், அப்பா மார்க்கெட் ஆகியவற்றில் வாழை இலையின் விலை உயர்வு இரண்டு மடங்காக உள்ளது. கடந்த வாரம் 150 இலைகள் கொண்ட ஒரு கட்டு 600 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் இன்று 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

News September 7, 2024

டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது

image

குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையை தொடர்ந்து பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவியது. இதனால் பாதிக்கப்பட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டெங்கு காய்ச்சல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 7, 2024

தொழிற்பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து படிவம் தரவிறக்கி,பூர்த்தி செய்து கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு 04652-264463, 9443579558 தொடர்பு கொள்ளலாம்.

News September 7, 2024

குமரி அணைகளில்  இன்றைய நீர் இருப்பு

image

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில்  இன்றைய நீர் இருப்பு விவரம். 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 13.64 மற்றும் 13.74 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 43.93 அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட  பெருஞ்சாணியில் 68.49அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில்  23.2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15 அடி நீரும் இருப்பு உள்ளது.

News September 7, 2024

சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி பெற மேல் முறையீடு 

image

கூட்டுறவு நிறுவனங்களில் கடன் வழங்கப்பட்டு 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டது. சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி  பட்டியலில் இடம் பெறாதவர்கள் செப். 25 க்குள்  மேல்முறையீட்டு மனுவை  நாகர்கோவில், தக்கலை துணைபதிவாளர் அலுவலகத்தில்  சமர்பிக்கலாம். அவை ஆராய்ந்து சான்றிதழ் வழங்கப்படும் என கூட்டுறவு இணைபதிவாளர்  சிவகாமி தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

விநாயகர் சதுர்த்தி விழா விஜய் வசந்த் எம் பி வாழ்த்து

image

விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,“அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்; விக்ன விநாயகப் பெருமான் எல்லாத் தடைகளையும் நீக்கி வரங்களைத் தருவாராக;  உங்கள் துன்பங்கள் எல்லாம் விலகி வாழ்வில் வெற்றி பெருக வாழ்த்துகிறேன்; மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி உங்கள் இல்லங்களில் நிறைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!