Kanyakumari

News September 10, 2024

குமரி : ரயில்வே பொருட்களை திருடிய 21 பேர் கைது

image

குமரி மாவட்டத்தில் 2024-ம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை 8 மாதத்தில் ரூ.51 ஆயிரம் மதிப்பிலான ரெயில்வே பொருட்களை திருடியதாக மாற்றுத்திறனாளி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக ரெயில்வே போலீசார் நேற்று தெரிவித்தனர். இதன்மூலம் கடந்த இரண்டரை ஆண்டில் ரெயில்வே பொருட்களை திருடியதாக 21 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.1லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

News September 9, 2024

நாகர்கோவிலில் கணவன் மனைவி பலி

image

நாகர்கோவில் திலகர் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி ராஜா மணி(45) – நீலா(43) மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று(செப்.,9) காலை வீட்டின் பின்புறம் உள்ள தகர ஷெட்டில் உடைகளை உலர்த்த சென்றபோது நீலாவை மின்சாரம் தாக்கியுள்ளது. சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த ராஜா மணியும் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 9, 2024

குமரியில் ரூ.2.11,458ல் வீடுகள் – ஆட்சியர் தகவல்

image

குமாரபுரம் திட்டப்பகுதியில் 288 அடுக்குமாடி குடியிருப்புகளும் மற்றும் அழகப்பபுரம் அருகே உள்ள புதுக்குளம் திட்டப்பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. குமாரபுரம் குடியிருப்புக்கு ரூ.2.11,458/- ம் புதுக்குளம் குடியிருப்புக்கு ஒரு லட்சத்து 1563ரூபாய் பங்களிப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று ஆட்சியர்அழகு மீனா தெரிவித்துள்ளார்

News September 9, 2024

குமரியில் மழையினால் வெளிச்சோடிய சுற்றுலாத்தலங்கள் 

image

கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த 2நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் இன்று(செப்.10) காலையிலேயே சாரல் மழை பெய்ததால் கடற்கரை மற்றும் சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

News September 9, 2024

இறச்சக்குளம் வெடி விபத்தில் இரண்டு பேருக்கு தொடர்பு

image

இறச்சகுளம் அருகே காட்டுப்பன்றிக்கு வெடி வைப்பதற்காக சென்ற ராபின்சன் என்பவர் வெடி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரணையில், வெடி பொருளை ராபின்சனிடம் கொண்டு கொடுத்தது மற்றும் ராபின்சனை வெடி வைப்பதற்கு அழைத்தது என இரண்டு நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அஜித் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 9, 2024

தப்பி ஓடிய கைதியை துரத்தி பிடித்த போலீஸ்

image

கருங்கல் கஞ்சிக்குழியை சேர்ந்த செல்வின்(24) என்பவரை  110 கிராம்  கஞ்சா வைத்திருந்த வழக்கில்(செப்.7) கைது செய்தனர். நேற்று அவரை கோர்ட்டுக்கு கொண்டு செல்ல தயாரானபோது, அவர் ஸ்டேஷனில் இருந்து தப்பி ஓடினார். அவரை துரத்திய படி போலீசாரும் ஓடினர். கடைசியில் போலீஸ் குடியிருப்பு பின்புறம் பதுங்கி இருந்த செல்வினை பிடித்து, முறைப்படி விசாரித்து  இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News September 9, 2024

போக்குவரத்து விதிகளை மீறிய 2,128 பேர் மீது வழக்கு

image

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீசார் அபராதம் விதித்தனா். ஹெல்மெட் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தில் செல்வது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது என குமரி மாவட்டம் முழுதும் ஒரு வாரத்தில் 2128 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்ததாக போக்குவரத்து போலீசார் நேற்று(செப்.8) தெரிவித்தனர்.

News September 9, 2024

குமரியில் இருந்து  தாமதமாக புறப்பட்ட ரயில்

image

குமரி மாவட்டம் வடக்கு தாமரை குளம் ரயில்வே கேட்டில் நடக்கும் பால பணிகளால் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் மூன்று ரயில்கள் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
கன்னியாகுமரி – திப்ரூகர், கன்னயாகுமரி – சென்னை, நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் ஆகிய மூன்று ரயில்களும்  ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

News September 8, 2024

குமரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

குமரியில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், குமரி உள்ளிட்ட 16 மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், இதனால் வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

குமரி மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

image

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர் வரும் சாதாரண தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைப்பது மிகவும் அவசியமாகிறது. இதில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும் என குமரி ஆட்சியர் உட்பட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

error: Content is protected !!