Kanyakumari

News September 10, 2024

பரதநாட்டியத்தில் வென்ற மாணவிகள் ஆட்சியருடன் சந்திப்பு

image

சர்வதேச அளவிலான பரதநாட்டிய போட்டி மலேசியா கோலாலம்பூரில் உள்ள 10 மலை முருகன் கோயிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், யாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த கவிதாலயா நாட்டிய பள்ளி‌ மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பதக்கங்களையும் பரிசுகளையும் வென்றனர். இன்று (செப் 10) குமரி மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்து மாணவ மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.

News September 10, 2024

கணவன் – மனைவி உயிரிழந்த வழக்கில் 2 பேர் மீது வழக்கு

image

நாகர்கோவில் திலகர் தெருவை சேர்ந்த நீலா மற்றும் அவரது கணவர் ஆகியோர் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பக்கத்து வீட்டில் அலங்கார மின் விளக்குகள் போடப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து மின்சாரம் மீது பாய்ந்ததாக கூறப்பட்டதன் அடிப்படையில் ஒளி அமைப்பு ஏற்படுத்திய ஜெபராஜ் உட்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News September 10, 2024

3.40 லட்சம் குழந்தைகள் பயன் : குமரி கலெக்டர்

image

குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலகின் கீழ் 3 லட்சத்து 40 ஆயிரத்து 621 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று(செப்.,10) தெரிவித்துள்ளார். கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வளர் இளம் குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு சென்று ஊட்டச்சத்தினை உறுதிசெய்து பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 10, 2024

நாகர்கோவிலில் முதலமைச்சர் கோப்பை போட்டி

image

கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்பி, எம்எல்ஏக்களான பிரின்ஸ், தாரகை, ராஜேஷ்குமார், மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெறுகின்றன.

News September 10, 2024

சுசீந்திரத்தில் தூய்மைப் பணி ஆட்சியர், எம்.பி பங்கேற்பு

image

சுசீந்திரம் EXNORA International and National Green Corps Kanyakumari District சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து செய்யும் தூய்மைப் பணி இன்று நடைபெற்றது. இதில் மேயர் மகேஷ், விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தூய்மைப் பணியினை மேற்கொண்டனர்.

News September 10, 2024

வேளாண் மையங்களில் மின்னணு பரிவர்த்தனை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வட்டார வேளாண் விரிவாக்கம் மையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருட்கள் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன் நேற்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் இதர இடுப்பொருட்கள் ஆகியன வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

குமரி வெடி விபத்து; மேலும் ஒருவருக்கு தொடர்பு

image

இறச்சகுளம் பகுதியில் காட்டுப் பன்றிகளை வேட்டையாட வெடி மருந்துகளுடன் சென்ற ராபின்சன் என்பவர் வெடி வெடித்து உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அவருக்கு வெடி சப்ளை செய்த சுரேஷ்குமார் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை செய்த போது இரணியல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு அதை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் அந்த நபரை பிடிக்க போலீசார் முயன்று வருகிறார்கள்.

News September 10, 2024

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 13.45மற்றும் 13.54அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 44அடி நீரும்,77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 67.72அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் 22.8 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில்14.9 அடி நீரும் இருப்பு உள்ளது.

News September 10, 2024

குமரி அணைகளுக்கு மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

image

குமரியில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெருஞ்சாணியில் 1.4, புத்தன் அணையில் 1, முள்ளங்கினாவிளையில் 14.4 மீ மழையும் பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு உள் வரத்தாக 542 கன நீர் வருகிறது. 498 கன அடி நீர் வெளியேறப்படுகிறது. பெருஞ்சாணிக்கு 186 கன அடி நீர் வரும் வேளையில் 410 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறுக்கு 127 கன அடி நீர் வரும் வேளையில் 150 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது

News September 10, 2024

கொல்லம் -சென்னை ரயில் கூடுதல் பெட்டி வேண்டும்

image

கொல்லம் சென்னை அனந்தபுரி அதிவிரைவு வண்டியில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மூன்று தான் உள்ளன. இதனால் பொதுமக்கள் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் படிக்கட்டு வரையும் கூட்ட நெரிசலில் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, எஞ்சின் அருகில் இரண்டு பெட்டிகளும், கடைசி இரண்டு பெட்டிகளும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!