Kanyakumari

News December 10, 2024

குமரியை சேர்ந்தவர் M.S.UNIVERSITY செனட் உறுப்பினராக நியமனம்

image

நாகர்கோவிலை சேர்ந்தவர் சரவண சுப்பையா. வலு தூக்கும் சங்கம், தேசிய ஆணழகன் சங்கம், சிலம்பம் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர். 2025-26ம் ஆண்டில் சிவில் இஞ்சினியர் அசோசியேசன் தலைவராக உள்ளார். இவரை நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News December 10, 2024

பொது இடத்தில் மது அருந்திய 4,015 பேர் மீது வழக்கு: குமரி SP

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கஞ்சா வழக்குகள் குறைந்துள்ளன. பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நேற்று வரை கடந்த ஓராண்டில் பொது இடத்தில் மது குடித்ததாக மொத்தம் 4,015 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும்” என்றார்.

News December 10, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,10) காலை 9 மணி கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி கீரிப்பாறை ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு 14வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.#பிற்பகல் 3 மணிக்கு குளம், ஏரிகளில் பாசி குத்தகையை உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கிட வலியுறுத்தி வடசேரி மீன்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

News December 10, 2024

வெள்ளி விழா கல்வெட்டில் எம்ஜிஆர் பெயர்: தளவாய் சுந்தரம்

image

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் நிறுவப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். எனவே திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு கல்வெட்டில் எம்ஜிஆரின் பெயரை வைக்க வேண்டும் என்று குமரி தொகுதி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.

News December 10, 2024

கேரளா அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல்

image

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கேரளா அரசு பேருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று(டிச.,09) இரவு வந்து கொண்டிருந்தது. சாமியார் மடம் பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பேருந்தில் கல்வீசி உள்ளனர். இதில் பேருந்து கண்ணாடி உடைந்தது. ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி விட்டுள்ளார். அரசு பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 9, 2024

வாகனங்கள் ஏலம்; மதுவிலக்கு அமலாக்க பிரிவு அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அறிற்கை வெளியிட்டுள்ளது. அதில், “குமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 41 வாகனங்கள் நாகர்கோவில் ஏஆர் கேம்ப் மைதானத்தில் வரும் 16ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

குமரி எஸ்பி அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி ஆய்வு

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்ற பிரிவுகள், தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆயுதப்படை ஆகியவற்றை இன்று தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆய்வு மேற்க்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவனமும் உடன் இருந்தார்.

News December 9, 2024

குமரி எம்.பி பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

image

விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசியமான உணவு வகைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார். பாமர மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் ஆட்டா, மைதா, ரவை, கடலை மாவு போன்ற உணவுப் பொருட்களுக்கு GSTவரியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 9, 2024

மருந்துவாழ் மலையில் கார்த்திகை தீப எண்ணெய் தொட்டி சீரமைப்பு

image

குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ் மலை அமைந்துள்ளது. இந்த மலை உச்சியில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வரும் 13ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்கான எண்ணெய் தொட்டி சீரமைக்கும் பணி இன்று(டிச.,9) தொடங்கியது. இந்த பணியில் மருந்துவாழ் மலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

News December 9, 2024

குமரி வருகை தரும் ஆளநர் ஆர்.என்.ரவி

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 11 ஆம் தேதி இரவு நாகர்கோவில் வருகிறார். நாகர்கோவில் அரசு பயணிகள் விடுதியில் தங்கும் அவர், 12 ஆம் தேதி காலை தாமரைபதி மற்றும் சாமிதோப்பு ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அங்கு அவர் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவதுடன் நூல் ஒன்றையும் வெளியிடுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி வழியாக சென்னை செல்கிறார்.

error: Content is protected !!