Kanyakumari

News October 22, 2025

தீபாவளி அன்று அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லை – எஸ்பி

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இன்று (அக் 21) செய்தியாளர்களிடம் பேசும் போது: தீபாவளி பண்டிகையை யொட்டி நேற்று மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ரீல்ஸ் எடுக்கும் இளைஞர்களும் காவல்துறை எச்சரிக்கை காரணமாக ரீல்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மாவட்டத்தில் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகை நடைபெற்றுள்ளது என்றார்.

News October 22, 2025

குமரி: தீபாவளி பட்டாசு வெடித்ததில் 20 பேர் காயம்

image

தீபாவளி பண்டிகை நேற்றுக் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி பட்டாசு விடுக்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் 20 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 7 பேர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News October 21, 2025

குமரி: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> bankofbaroda.bank.in<<>> எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News October 21, 2025

குமரி: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 21, 2025

குமரி: மீனவர்கள் திரும்ப நடவடிக்கை – நிர்மலா சீதராமன்

image

தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 30 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் பத்திரமாக கரைத் திரும்ப அவர்களது சாட்டிலைட் போன் சேவை இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் பத்திரமாக கரை திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்துள்ளார்.

News October 21, 2025

குமரி: கேஸ் மானியம் பெற e-KYC முக்கியம் – APPLY!

image

குமரி மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறை படுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு <>க்ளிக்<<>> செய்து e-KYC உருவாக்கி அதில் ஆதார் எண்ணை இணைத்து கேஸ் மானியம் பெறுங்க… தடையின்றி மானியம் பெறவும் (e-KYC) யை சரிபாருங்க.. SHARE பண்ணுங்க..

News October 21, 2025

குமரி: சேட்டிலைட் போனில் பேசிய ஆட்சியர்

image

ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் பயன்படுத்தபடும் செயற்கைக்கோள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, ராஜேஷ்குமார் எம்எல்ஏ வள்ளவிளை பங்கு தந்தை , மீனவர் குடும்பத்தினரை வள்ளவிளையில்  நேரில் சந்தித்து செயற்கைக்கோள் தொலைபேசி ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளதை பேசி உறுதி செய்தனர்.மீனவர்கள் இக்கட்டான சூழலிலும் தெரியபடுத்த வாய்ப்பு உள்ளது.

News October 21, 2025

காங்கிரஸ் எம்எல்ஏ சொந்தம் கொண்டாடுவது வேடிக்கை – பாஜக

image

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய நிதியமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், தொலைத் தொடர்பு துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு குமரி மீனவர்களின் சேட்டிலைட் போன் ரீசார்ஜ் வசதியை செய்து கொடுத்துள்ளார். இதில் எதிலும் சம்பந்தம் இல்லாத ராஜேஷ்குமார் எம்எல்ஏ தனது முயற்சியால் நடந்ததாக சொந்தம் கொண்டாட நினைப்பது வேடிக்கையாக உள்ளது என குமரி பாஜக தலைவர் கோபகுமார் தெரிவித்துள்ளார்.

News October 20, 2025

மீனவர்களுடன் சேட்டிலைட் போனில் பேசிய ஆட்சியர்

image

ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்ய அரசு அனுமதி வழங்கியதையடுத்து   இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, ராஜேஷ்குமார் எம்எல்ஏ வள்ளவிளை பங்கு தந்தை , மீனவர் குடும்பத்தினரை வள்ளவிளையில்  நேரில் சந்தித்து செயற்கைக்கோள் தொலைபேசி ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளதை அவர்களுடன் பேசி உறுதி செய்தனர்.

News October 20, 2025

வெள்ளிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா அறிவிப்பு

image

வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை மறுநாள்(அக்.22) கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.27 வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் நாள் காப்பு கட்டு நிகழ்ச்சியும், கொடியேற்றமும் நடக்கிறது. அக்.27 அன்று மாலை 6:15 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சாமி மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்

error: Content is protected !!