Kanyakumari

News April 4, 2025

மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்க ₹ 40 லட்சம் நிதியுதவி

image

கன்னியாகுமரி உட்பட கடலோர மீனவர்களிடையே மீன்பிடிப்பினை மாவட்டங்களில் மாற்று முறை ஊக்குவிப்பதற்காக, விலைமதிப்பு கணவாய் மீன்கள் பிடிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கிட மீனவர்களுக்கு ரூபாய் 40 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
என தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News April 4, 2025

நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது.
குமரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 973 பயனாளிகள் வயல்களில் 788 பரப்பளவில் ₹ 4.4 கோடியில் நுண்ணீர் பாசனம் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகள் 100% மானியத்துடன் இணையலாம். அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி அணுகி பயன்பெறலாம்.

News April 4, 2025

குமரியில் 3 நாள் போக்குவரத்து மாற்றம்

image

நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான உயர் அழுத்த புதைவடம் பழுதை சரி செய்யும் பணி நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல்.5 முதல் 7ஆம்)தேதி வரையிலும் பார்வதிபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் கூறியுள்ளார்.ஷேர் செய்யவும்.

News April 4, 2025

குமரியில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் உற்பத்தி நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட இயந்திர ஆப்ரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு <<>>கிளிக் செய்து 25-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

கேரளா கார் மோதி பெரும் விபத்து

image

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது, மது போதைகள் ஒட்டி வரப்பட்ட கேரளப்பதிவு எண் கொண்ட கார் மோதி பெரும் விபத்து. விபத்து ஏற்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரின் ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அதிகம் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News April 4, 2025

குளத்தில் மூழ்கிய கொத்தனார் உயிரிழப்பு

image

தக்கலை கஞ்சிகுழியை சேர்ந்த ஜெயக்குமார் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றார். அப்போது எதிர்ப்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி உள்ளார். இதையடுத்து அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2025

நடிகர் மனோஜ் வீட்டில் அஞ்சலி செலுத்திய பொன் ராதாகிருஷ்ணன்

image

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று (ஏப்.3) இயக்குநர் பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ் மரணம் அடைந்ததையடுத்து சென்னையில் உள்ள அன்னாரின் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பாரதிராஜாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

News April 4, 2025

சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த MLA!

image

விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாங்கோடு ஊராட்சியில் மேஜர் ஸ்ரீ விக்கிர ராமர் என்ற கோயில் உள்ளது இது சுமார் 1,200 வருட பழமையானது. அந்த கோயிலில் அன்னதான மண்டபம் கட்டித்தர இயலுமா என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மக்களுக்கு பயன்படுமானால் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

News April 3, 2025

தோஷம் நீக்கி குழந்தை வரம் அருளும் நாகராஜர்

image

நாகர்கோவில் நகரில் அமைந்துள்ள ஒரு பழமையான ஆலயம் நாகராஜா கோயில். இங்கு, நாகராஜரை வணங்குவோர் நோய், நொடியின்றி நலம் பெற்று வாழ்வார்கள் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் என்றும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத தோல் தொடர்பான நோய் நீங்கிவிடுகிறது என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நாக தோஷம் உள்ளவர்கள் மற்று குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க

News April 3, 2025

குமரி : தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட சர்விஸ் அட்வைசர் , டெலிகாலர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு கிளிக் செய்து 04-06-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!