Kanyakumari

News July 10, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் மட்டம் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை10) நீர்மட்ட விவரம் : பேச்சிப்பாறை அணை – 41.81 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 70.90 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 13.28 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 13.38 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 406 கனஅடி, பெருஞ்சாணிக்கு 164 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News July 10, 2025

குமரி: தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

குமரி மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04652227339 ) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News July 10, 2025

படித்த இளைஞர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி

image

குமரி மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் நான் முதல்வன் / பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் Eco Tourism & Hospitality Executive and Tourist Guide பயிற்சி வகுப்புகள் காளிகேசம் சூழலியல் சுற்றுலா தலத்தில் 11.07.2025 முதல் 30 நாட்கள் 200 மணி நேரம் செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்று குமரி கலெக்டர் தெரிவித்துள்ளார். பயனுள்ள இந்த தகவலை SHARE செய்யவும்.

News July 10, 2025

குமரி மாவட்டத்தில் 1,100 தொழிற்சங்கத்தினர் கைது

image

மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பறக்கை, குலசேகரம், அருமனை, மார்த்தாண்டம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் 330 பெண்கள் உட்பட 1100 பேரை போலீசார் கைது செய்தனர்.

News July 10, 2025

கன்னியாகுமரியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

image

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வங்கி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

News July 9, 2025

வளமான வாழ்வு பெற கேரளபுரம் விநாயகரை வழிபடுங்க!

image

புதன் அன்று வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். நமது கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக விநாயகர் அருள்பாலிக்கிறார். தை – ஆனி மாதத்தில் வெள்ளை நிறத்திலும், ஆடி – மார்கழி வரை கருப்பு நிறத்திலும் விநாயகர் நமக்கு காட்சியளிப்பார். கேரளபுரம் விநாயகரை மனதார பிரார்த்தனை செய்தால் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கொடுக்கும் அற்புத திருத்தலம். SHARE பண்ணுங்க!

News July 9, 2025

ரெஜிமோன் மத போதகர் குறித்து Whatsappல் புகார் அளிக்கலாம்

image

கன்னியாகுமரி, தக்கலை அருகே 26 வயது இளம்பெண் ஒருவர் ஜெபக்கூடத்திற்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ரெஜிமோன் என்பவர் கைது செய்யபட்டுள்ளார். போதகர் மீது வழக்கு பதிவு செய்யபட்ட நிலையில் வேறு யாராவது பாதிக்கபட்டிருந்தால் பெண்கள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க தேவையில்லை மாவட்ட எஸ்பி whatsapp எண்ணுக்கு 8122223319 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.

News July 9, 2025

விவேக் எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்

image

இருகூர், பீளமேடு பிரிவில் சாலை மேம்பால பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திப்ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து ஜூலை 9, 10, 11, 12 தேதிகளில் புறப்படுவது போத்தனூர் வழியாக செல்லும். இருகூர் மற்றும் கோயம்புத்தூர் செல்லாது. போத்தனூரில் கூடுதல் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News July 9, 2025

குமரி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு நெல்லையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News July 9, 2025

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் கடைபிடிக்கும் 10 ஊராட்சிகளை ஊக்குவித்து தமிழக அரசு சமூக நல்லிணக்க விருதுடன் தலா 1 கோடி ரூபாய் வழங்க உள்ளது. சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் https://tinyurl.com/Panchayataward என்ற இணையதளத்தில் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!