India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பூதப்பாண்டி அருகே ஞாலம் பகுதி மெக்கானிக் மகேஷ்(37). 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தகராறில் 2 பிள்ளைகளுடன் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்த வருத்தத்தில் இருந்த மகேஷ் 2 நாட்களுக்கு முன்பு தடிக்காரன்கோணத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.16) மகேஷ் உயிரிழந்தார். இதுக்குறித்து கீரிப்பாறை போலீசார் விசாரணை.
குமரி மக்களே, நீங்க சிறுக சிறுக சேமித்த பணத்தை வருங்கால புன்கைக்காக நகை சீட் போடுவோம்.. எனவே நகை சீட் போடும் போது இதல்லாம் கவனியுங்க.
1.அரசு அங்கீகார நிறுவனம்
2. மாதாந்திர தொகை
3. தள்ளுபடி, செய்கூலிகள்
4.பணத்தை திரும்பபெறுதல்
5.ஆவணக்கட்டணம் மற்றும் ரசீதுகள்
ஏற்கனவே நகை சீட்ல உள்ளவங்களும் இதல்லாம் சரிபாருங்க.தகவல்களுக்கு: 1800-11-4000 (அ) 14404 அழையுங்க.. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE…
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் கும்பகோணத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு நெல் மூடைகள் ரெயிலில் அனுப்பி வைக்கபட்டன. இந்த நெல் மூடைகள் 21 பெட்டிகளில் நேற்று (செப். 17) நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தன. இதில் 959 டன் நெல் மூடைகள் இருந்தன. அவற்றை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.
குமரி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:04652-278404. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!
கொல்லங்கோடு பகுதி பட்டதாரி ஜெய்சங்கரன்(23) அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார். இவர் நேற்று (செப்.16) வீடியோ காலில் செல்போனில் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டதால், காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக போர்வையால் தூக்கில் தொங்கி உள்ளார். விளையாட்டு விபரீதமாகி ஜெய்சங்கரன் கழுத்தில் போர்வை இறுகியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை.
குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நாகர்கோவில் கோணத்தில் செப்.19 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் 2-வது கல்விக் கடன் மேளா செப்.18 அன்று கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. மேற்படி முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் வங்கிகளும் பங்கேற்கின்றன என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை கண்டித்தும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் கிள்ளியூர் வட்டார ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் சார்பாக கிள்ளியூர் வட்டார RGPRS தலைவர் P. பிரேம் சிங் தலைமையில் தொலையாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (செப். 16) நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டார்.
இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025. விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேற்று (செப் 15) கூறியதாவது,” சிசிடிவி கேமராக்கள் அமைப்பதால் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1315 சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது” என்றார். இதனால் குமரியில் குற்றச்சம்பங்கள் குறைய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.