Kanyakumari

News March 31, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்ட விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச்.31) 29.01 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.55 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 31 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 31, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க கோரி காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் கூட்டமைப்பு 108 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. மாலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி விவேகானந்தா கேந்திரா வந்தடைந்து நிறைவு விழா நடைபெற உள்ளது.

News March 31, 2025

கன்னியாகுமரி: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

News March 31, 2025

குமரியில் புகார் தெரிவிக்க எண் வெளியீடு

image

குமரி மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு, கந்துவட்டி உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கந்துவட்டி வழக்குகள் தற்போது இல்லை. இது தொடர்பாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிறுவனங்களில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தால் பொதுமக்கள் 7010363173 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட சூப்பிரண்டு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News March 30, 2025

குமரியில் பைக் சாகசம் செய்தால் கடும் நடவடிக்கை

image

குமரியில் சமீபகாலமாக இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி மக்களை அச்சுறுத்தம் வகையில் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் நபர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். *சாகசம் செய்வோருக்கு பகிர்ந்து அறிவுரை கூறுங்கள்*

News March 30, 2025

குமரி-மும்பை இடையே சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது

image

மும்பை-குமரி இடையே, கோடை கால சிறப்பு ரயில் ( ரயில் எண் : 01005) ஏப்ரல் 9 அன்று மும்பையில் இருந்து 00:30 கிளம்பி ஏப்ரல் 10 அன்று 1:15 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். மும்பை, தாதர், புனே, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக குமரி வந்தடையும். இந்நிலையில, இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. *தேவைபடுவோர் மறக்காம முன்பதிவு பண்ணிக்கோங்க

News March 30, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச்.30) 29.00 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.60 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 30 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 30, 2025

நகராட்சியாக உதயமாகிய கன்னியாகுமரி

image

கன்னியாகுமரியை புதிய நகராட்சியாக உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையின் பேரில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, போளூர், செங்கம், கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

News March 30, 2025

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3500 கோடி ஒதுக்கீடு

image

தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நாகர்கோவில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3500 கோடி  ஒதுக்கப்பட்டடுள்ளது. அதன் அடிப்படையில், குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 1257பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

News March 30, 2025

குமரியில் 706 குடும்பங்களுக்கு பட்டா

image

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை எளிய 706 குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் அரசு வழிகாட்டுதலின் படி மாவட்ட அளவிலான குழுஒப்புதல் அளிக்கப்பட்டு முதற்கட்டமாக 50 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.

error: Content is protected !!